கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் குடுமி ஜெயாவை பெண்கள் நையப்புடைத்து சாணியடித்தனர்!

யாழ் நல்லூரடியில் இருந்த லக்ஸ் ஹொட்டலின் நிறுவனர் குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனை அவருடன் கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவரும் ஜெயந்திரனின் குழந்தையின் தாயுமான தர்ஷினி தலைமையில் பத்துவரையான பெண்கள் ஹொட்டலுக்குள் புகுந்து அவருக்கு சாணித்தண்ணி கரைத்து தாக்கிய சம்பவம் நேற்று ஏப்ரல் 20 இரவு ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது. குடுமி ஜெயாவின் காமலீலைகள் பற்றிய பதிவுகளை யாழ் ஊடகங்கள் மூடி மறைக்க முற்பட்ட போதும் தேசம்நெற் ஆதாரங்களோடு அவற்றை அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. விளிம்பு நிலையில் இருக்கும் இளம் பெண்களை தனது பணம் மற்றும் போதையூட்டி மயக்கி அவர்களது இளமையைச் சுரண்டும் குடுமி ஜெயா பிரான்ஸ் லாக்குர்னே யில் உள்ள சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த ஆலயத்தின் வருமானத்திலேயே நல்லூரில் உள்ள காமவிடுதியையும் போதைப்பொருள்களையும் பயன்படுத்தி ஜெயந்திரன் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருகின்றார்.

 

இது பற்றிய மேலதிகமாக அறிய கீழுள்ள காணொளியை பாருங்கள்..!

 

“கசிப்பு காய்ச்சுபவர்களும், மண் கடத்துபவர்களுமே எமக்கு காசு தருகிறார்கள்” – நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் இன்னுமொரு பக்கம் !

“கிளிநொச்சியில் இடம்பெறும் பாரிய வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் இருக்கிறார்கள்” என சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன சந்திரகுமார் அவர்களுடன் அண்மையில் தேசம் திரை ஊடாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது ” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் தொடர்பு தமிழ் தேசியக் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழரசு கட்சி தன்னுடைய எதிர்ப்பை இதுவரை வெளியிடவில்லை என சந்திரகுமார் அவர்கள் விசனம் வெளியிட்டிருந்தார்.
 இதன் போது கேள்வி எழுப்பிய தேசம் ஜெயபாலன் அவர்கள் தனித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பற்றி மட்டுமல்ல தமிழர் பகுதிகளில் அன்றாடம் இடம் பெற்றுக் கொண்டிருக்க கூடிய “போதைப் பொருள் பாவனை, அதிகரிக்கும் சிறுவயது திருமணங்கள், சமூக சீர்கேடுகள் இவை தொடர்பில் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் எந்த கட்சிகளும் மறந்தும் வாய் திறப்பதில்லையே ஏன்  என கேட்ட போது.
பதில் அளித்த சந்திரகுமார் அவர்கள்
 “சமூக கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்க கூடிய அளவுக்கு தமிழரசு கட்சியினுடைய அங்கத்தவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என குறிப்பிட்டார். மேலும் சமூக மாற்றத்திற்காக அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தென் இலங்கையுடன் ஒப்பிடுகின்ற போது நாம் வாழும் வடக்கு – கிழக்கு இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் சமூக வன்முறைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. வட இலங்கையில் கையை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம் , காலை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம்,  பெட்ரோல் குண்டு வீசுவதற்கு ஒரு தொகை பணம் என எங்களுடைய பகுதிகளில் பல வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட – கிழக்கு இலங்கையில் பல இளைஞர்கள் தொழில் வாய்ப்புற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இதுவே சமூக பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் என குறிப்பிட்ட சந்திரகுமார் அவர்கள்,  கிளிநொச்சியின் பளை பிரதேசத்தில் ஒரு வசதி குறைந்த குடும்பம் ஒரு காணியில் வசிக்கிறது. அவுதிரேலியாவில் இருக்கக்கூடிய ஒரு புலம்பெயர்ந்த தமிழர் அந்தக் காணியை அபகரிக்கும் நோக்குடன் ஒரு வன்முறை கும்பலை இறக்கி அந்த ஏழை குடும்பத்தின் குடிசை வீட்டை எரித்ததுடன் – விசுவமடு பகுதியிலிருந்து வன்முறை கும்பலை இறக்கி அவர்களை தாக்கியுள்ளார். பின்பு மேலதிக விசாரணைகளின் போது அந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கக்கூடிய நபரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த ஏழை குடும்பம் தொடர்பில் யாரும் கணக்கெடுக்கவில்லை. இதுபோல வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களால் இங்கு பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஆபத்தான ஒரு நிலை எங்களுடைய வடக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குடும்பப் பகைமை காணிப்பிரச்சனை இவற்றை தீர்ப்பதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த வன்முறை கும்பலை பயன்படுத்துகிறார்கள்.
கிளிநொச்சியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவை தொடர்பு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் தொடர்பு பிரச்சனைகள் இடம்பெறக்கூடிய பகுதி மக்களிடம் தொடர்பு கொண்ட போது அவர் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மட்டுமே வருடத்திற்கு ஒரு தடவை அங்கு பயணம் செய்வதாக மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையிலும் மக்கள் அமைப்பினுடைய தலைவர் என்ற வகையிலும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்..? என தேசம் ஜெயபாலன் வினவிய போது..
இந்தப் பிரச்சனையும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்தாலும் கூட அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களிடமே போலீசார் யார் இது தொடர்பில் தகவல் கொடுத்தவர்கள் என்பதையும் தெரிவித்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் சிறையில் இருந்து வெளியேறியதும் தகவல் கொடுத்தவர்கள் மீது தங்களுடைய வன்முறைத்தனத்தை காட்டுகின்றனர்  இது நிறுத்தப்பட வேண்டும். இதனால்தான் சமூகத்தில் மிகப்பெரிய வன்முறை சீர்கேடுகள் உருவாகி கொண்டிருக்கின்றன.
மிகக் கவலையுடன் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த வன்முறையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான விடயம். கிளிநொச்சி மாவட்டத்தில் மண் கடத்தலாக இருக்கலாம் அல்லது போதைப் பொருள் விற்பனையாக இருக்கலாம் கசிப்பு காச்சுவதாக இருக்கலாம் இவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் முக்கியமான அரசியல் கட்சிகளின் மத்திய உறுப்பினர்களாக இருப்பதனால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. குறிப்பாக தமிழரசு கட்சியினுடைய பல அமைப்பாளர்கள் கிளிநொச்சியில் இடம் பெறக்கூடிய சமூக வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.
இது தொடர்பில் கிளிநொச்சியின் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களிடம் அவருடைய கட்சியின் நேர்மையான உறுப்பினர் ஒருவர் சென்று இவ்வாறான சமூக பிரச்சினைகளின் பின்னணியில் உங்களுடைய கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறிய போது பதில் அளித்த சிவஞானம் ஸ்ரீதரன் “இவர்களைப் பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் காலங்களில் இவர்கள்தான் அதிகமாக செலவழிக்கிறார்கள்.” எனக் கூறியிருக்கிறார். எனவே இந்த அரசியலும் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று பிண்ணிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்வது. தமிழரசு கட்சிக்கும் கிளிநொச்சியில் நடைபெறக்கூடிய வன்முறை சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது  என்பது தொடர்பில் என்னிடம் நிறைவான ஆதாரங்கள் உள்ளன.
திருவையாறு அமைப்பாளர் ஒருவர் இரணைமடு குளத்தின் ஒரு பகுதியில் இருந்து மண்ணை அள்ளிக்கொண்டு சென்றுள்ளார். பின்பு நாங்கள் சுற்றுச்சூழல் அமைப்பிடம் பேசி பிரச்சினைகளை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கிளிநொச்சி செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரக்கூடிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் எங்களுடைய தேசம் திரை மூலமாக ஒரு ஆவணக் காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக நாம் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது மேலே கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கூறியது போல இந்த சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது தொடர்பில் விளங்குவதற்காக அவருடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அவரை தொடர்பு கொண்டோம். இதன் போதும் பல தடவைகள் அவருக்கு அழைப்பை மேற்கொண்டு இறுதியாக ஒரே ஒரு தடவை அவர் எங்களுடன் பேசினார். அப்போது கூட நான் கோயில் திருவிழா ஒன்றில் நிற்கிறேன். பிறகு போல பேசுகிறேன் எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்பும் பல தடவைகள் தேசம் இணையதளத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் எந்த பதிலுமே எங்களுக்கு அளிக்கவில்லை.
இவ்வளவுதான் கிளிநொச்சி மக்கள் அதிக வாக்குகள் கொடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் மக்கள் பற்று.
மக்கள் இது தொடர்பில் விழிப்படைந்து கொள்ள வேண்டும்.  பாராளுமன்றத்தில் மட்டும் தமிழ் தேசியம் , தலைவர் பிரபாகரன்,  வீரவணக்கம் , நினைவஞ்சலி என முழக்கமிட்டு விட்டு தனிப்பட்ட ரீதியில் தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கின்ற ஒரு மனோ நிலையிலேயே ஸ்ரீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகின்ற பல அரசியல் தலைவர்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழ் தேசியம் பேசிப்பேசி தமிழர்கள் கண்டது ஒன்றுமில்லை என்பதை இறுதி.
எனவே மக்கள் தமக்காக இயங்காத ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் அடுத்தடுத்து வரக்கூடிய ஜனநாயக தேர்தல்களில் புறக்கணித்து தங்களுக்காக பணியாற்ற கூடிய தலைவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இந்த தமிழ் சமுதாயம் முன்னோக்கி நகர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கும்.
மேற்குறித்த காணொளியை காண்பதற்கு..;
https://youtu.be/T_3QDT5Tb8g

பகலில் கூட வெளியே வர அச்சப்படும் மாணவிகள் – வன்முறைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளை எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் அண்மையில் செல்வா நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் இளைஞர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்.

வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் காணப்பட்டும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் கைதாவோர் இளைஞர்களாக காணப்படும் அதேவேளை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் – கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவுமே அடையாளம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் காணப்படும் வன்முறையான நிலை ஆக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை.

இதனை கடந்தகால செய்திகளின் தலைப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

கிளிநொச்சியில் பரபரப்பு : செல்வாநகர் ஐயப்பன் கோயிலில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. (07.05.2022)

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் கெரொயின் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது. (28.07.2020)

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வாள்வெட்டு – கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம். (29.05.2019)

கிளிநொச்சியில் உள்ள தனது காணியை பார்வையிட வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் அடித்துப் படுகொலை (7.05.2018)

டியூசனுக்கு படிக்க சென்றாலும் ஐந்து மணிக்கு பிறகு எந்த பாடங்களிலும் பங்கு கொள்வதில்லை. ஏனெனில் ஆறு மணிக்கு முன்பாக ஊருக்குள் நுழைந்தால் தான் பாதுகாப்பாக வீடு செல்ல முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.” என அந்த மாணவி தெரிவித்தார்.

அயர்லாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை !

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாவது நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

448 ஓட்டங்கள் அயர்லாந்து அணிக்கு மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

உதயன் (ஆர்.எஸ்.எஸ் இன் ஏஜென்ட்) தமிழர் மத்தியில் புகுந்து தமிழ் தேசியத்தை மதரீதியில் பிரித்து பெரும் அட்டூழியம்!

ஈழத் தமிழர்களை மத ரீதியில் பிரித்து மதப் பிரிவினையைத் தூண்டும் இந்தியாவின் நோக்கத்தை வெற்றிகரமாக செயற்படுத்த தொடங்கியுள்ளது உதயன் பத்திரிகை.

ஏப்ரல் 9ஆம் திகதி உதயன் பத்திரிகை “வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்து அட்டூழியம் புரிந்த மதக்குழு” என்ற தலைப்பில் முன் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியோடு தொடர்புபட்ட சபையை சேர்ந்த மக்கள் சிலர் குறித்த செய்தியை கேள்விக்குட்படுத்தி உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு அன்றைய தினம் சென்றிருந்தனர்.

அங்கு குறித்த செய்தியை எந்த அடிப்படையில் பிரசுரித்தீர்கள் என ஆசிரியர் பீடத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவே நடந்த சம்பவத்தின் சாராம்சம்.

இந்த சம்பவத்தைத் தான் உதயன் பத்திரிகை ஏப்ரல் 10ஆம் திகதி முன்பக்க முழுப்பக்க செய்திகளாக பெருமெடுப்பில் வெளியிட்டுள்ளது.

உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து மதக்குழுவொன்று பெரும் அட்டூழியம் என்று குறிப்பிட்ட அளவுக்கு அங்கு எந்த சம்பவமும் இடம்பெற்றதாக உதயன் தரப்பிலிருந்து வெளியாகியிருந்த காணொலியில் தெரியவில்லை.

குறித்த சபையைச் சேர்ந்த மக்கள் தமது சபையோடு தொடர்புபட்ட செய்தி தொடர்பில் கேள்வி கேட்கவே உதயன் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

வந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அவர்களுடன் சில இளைஞர்கள் வந்துள்ளனர்.

வந்தவர்கள் யாரும் எந்த ஆயுதங்களோடோ தாக்குதல் நடத்தும் எண்ணத்துடனோ வந்திருக்கவில்லை.

அவர்கள் சாமானிய மக்கள். ஒரு பத்திரிகை நிறுவனத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கரிசனை அவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இயலாது.

அவர்கள் போதகரது தூண்டுதலால் வந்திருந்தாலும் கூட அவர்கள் சாதாரண பொதுமக்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்ற தெளிவு ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் இருந்திருக்க வேண்டும்.

ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று அந்த சமூகத்துக்கு அறிவூட்டுவது, அவர்களை வழிநடத்துவது. இந்த இடத்தில் உதயன் தன் கடமையிலிருந்து தவறியுள்ளது.

குறித்த காணொலியில் அந்த மக்கள் எந்த இடத்திலும் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. யாரையும் தாக்கவில்லை. நிறுவனத்தின் சொத்துக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை.

பல பேர் சேர்ந்து சென்று கதைத்தால் தங்கள் கருத்து கேட்கப்படும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கலாம்.

காணொலியில் ஒரு இடத்தில் ஒரு பெண் “ நீங்கள் கண்டபாட்டுக்கு எழுத ஏலாது” என்று சொல்ல அங்கு நின்ற மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் “அதை நீங்க சொல்ல ஏலாது. கோர்ட்டுக்கு போங்க” என்கிறார்.

ஊடகம் என்பது மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது. அவற்றை கேள்வி கேட்கும் உரிமை சட்டத்துக்கு முன்னர் மக்களுக்கே உள்ளது.

சாமான்ய மக்களுக்கு சட்டம் தொடர்பில் பூரண அறிவு இல்லை என்ற பலவீனத்தைக் கொண்டு கோர்ட்டுக்கு போ, கேஸ் போடு என்று அடாவடித்தனமாக நடந்து கொண்ட உதயன் தரப்பினர் அந்த மக்களை காட்டுமிராண்டிகள் ரேஞ்சுக்கு சித்தரிக்கின்றனர்.

ஏற்கனவே பிரதேசம் சாதி என கூறுபோடப்பட்டுள்ள இந்த சமூகம் மத ரீதியில் பிளவுபட்டு நிற்பதற்கான மீதமுள்ள வழிகளையும் ஊடகங்கள் திறந்துவிட்டுள்ளன.

முற்றுமுழுதாக, மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் திரிபுபடுத்தப்பட்ட இந்த செய்திக்கு கண்டன அறிக்கைகள் வேறு அனல் பறக்கின்றன. அதில் சைவமாகாசபை, உருத்திரசேனை, மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகியோரின் கண்டன அறிக்கைகள் முன்பக்கத்தில் அடுக்கிவிடப்பட்டுள்ளன. இதிலிருந்தே இது மதப்பிளவைத் தூண்டும் உள்நோக்கத்துடனானது என்பது தெட்டத்தெளிவாகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான செய்திகளில் உதயன் பயன்படுத்தியுள்ள சொற்கள் மிகக் கீழ்த்தரமானவை. எவ்வாறு தமிழர்களை சிங்களப் பேரினவாதம் பயங்கரவாதிகள் என்று சித்தரித்ததோ அவ்வாறே தன்னுடைய சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள ஒரு மதச் சமூகத்தின் மீதான தவாறான விம்பத்தை உதயன் கட்டமைக்கின்றது. இதனை சைவமாகாசபை, உருத்திரசேனை, சிவசேனை போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிவருடிகள் எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்படாதபாடு படுகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்டோரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை சமூக விரோதிகள் என்றவாறு சித்திரித்துள்ள உதயனின் போக்கு மிகுந்த அடாவடித்தனமானது. உதயன் இவ்வாறு சித்திரிக்குமளவுக்கு எந்தவொரு சம்பவமும் அங்கு இடம்பெற்றதாக காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த சம்பவத்தின் பின்புலம் பற்றி தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிப்போர் இதனை தாறுமாறாக திரிவுபடுத்த தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 8ஆம் திகதி உதயன் தனது முன்பக்கத்தில் “80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த மக்கள் உதயன் அலுவலகத்துக்குள் அத்துமீறினர் என்ற தவாறான கண்டோட்டத்துடன் சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் போதகர்களையும் கீழ்த்தரமாக பதிவிடுகின்றனர். இது மிக அபத்தமானது.

“80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்ற செய்தி உண்மை எனின் அது நிச்சயம் பிரசுரிக்கப்பட வேண்டியதே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் சேட்டை புரிவோரைக் கண்டுகொள்ளாமல் அவர்களிடம் கட்டுரைகள் வாங்கிப் பிரசுரித்து அவர்கள் புகழ்பாடும் இந்த ஊடகங்கள் இந்த செய்திகளில் மட்டும் தம் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவது தான் வேடிக்கையாகவுள்ளது.

யாழில் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்த போதைவஸ்துக்களுடனும் தொடர்புடைய ஜெயந்திரன் வெற்றிவேலு சிவாலய ஸ்தாபகராக இருந்தும் யாழ்.ஊடகங்கள் இன்றுவரை அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

சமூகத்தின் அதிகார மையங்களில் உள்ள தவறுகளைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஊடகங்கள் தம் அரசியல் மத சார்பு நிலைகளுக்கு ஏற்ப செய்திகளில் வக்கிரத்தைக் கொட்டுவதே அட்டூழியத்தின் உச்ச கட்டம்.

சமானிய மக்களின் மேல் தம் ஊடகப் பலத்தைக் காட்டும் இவற்றின் செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.

பேரினவாதத்தை வளர்த்தெடுக்க  இராணுவம் பொலிஸ் துணை போகின்றது, ஊடக சுதந்திரம் இராணுவம் பொலிஸால் பாதிக்கப்படுகின்றது.

பொலிஸார் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூவித் திரிந்த உதயன் இன்று தன்னிடம் செய்தி தொடர்பில் கேட்டு வந்த சாமானிய தமிழ் மக்களுக்கு பொலிஸை வைத்து பூச்சாண்டி காட்டி அனுப்பியுள்ளது என்றால் இவர்களின் தமிழ்த் தேசியப்பற்றும் தமிழ் மக்கள் மீதான அக்கறையும் எத்தகையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்று எழுக தமிழ் என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் திரண்டு சென்ற போது தன்னுடைய சுயலாப அரசியலுக்காக புரட்டாதிச் சனிக்கு எள்ளெண்ணெய் எரித்த செய்தி போட்டது தான் உதயனின் ஊடக தர்மம்.

உதயனுக்குச் சென்ற மக்கள் போதகரால் தூண்டுதலில் வந்தார்கள் எனின் அது அவர்களுடைய அறியாமை. ஆனால் இந்தியாவின் ஆர்.ஆர்.எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று அற்ப சலுகைகளுக்காக இனத்தைக் கூறுபோடும் இந்த ஊடகங்களின் அட்டூழியங்களை அறியாமை என்று கடந்து செல்ல முடியுமா? உதயனின் தலையங்கங்கள் அப்பத்திரிகை ஆர்எஸ்எஸ் இன் ஏஜென்டாக விலைபோய்விட்டதையே காட்டுகின்றது. தமிழ் தேசியத்தைக் கூறு போடவும் பலவீனப்படுத்தவும் கேரளா கஞ்சாவோடு மதவாதம் என்ற அபினையும் இந்திய ஒன்றிய அரசு வடக்கு கிழக்கினுள் நுழைய அனுமதிக்கின்றது.

தமிழ் மக்கள் விழிப்படைந்து இந்த இந்திய பினாமிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டாலொழிய தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் – குமார் சங்கக்கார நம்பிக்கை !

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் அளித்த ஆதரவிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பாராட்டு தெரிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் லைக்காவின் ஜப்னா கிங்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளர்களாக உள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து விஜயகாந்த் வியாஸ்காந்த், விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரரான விஜஸ்காந்த் சிறப்பாக பந்துவீசியதாகவும், அவர் பல விடயங்களை இதன்போது கற்றுக்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என தான் நம்புவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“நான் ஒரு திறமையானவன். ஏனெனில் எனக்கு ஒன்றும் தெரியாது” – மு நித்தி: ஒரு தேடி!

மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால துன்பியல் வரலாறு என்பது வெள்ளைக்கார பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று எழுபது ஆண்டுகளுக்குப் பின் இன்னமும் தொடர் கதையாகவே இருக்கின்றது. இன்றும் இந்த மக்கள் அடிமைத்தளைகளில் இருந்து தங்களை விடுவிக்க முடியாதபடி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளால் விலங்கிடப்பட்டுள்ளனர். இலங்கையின் பிரபல்யமான சிறுநீரக மாற்று மருத்துவமனை கண்டியில் உள்ளது. ஏன்? தோட்டங்களில் தேயிலை பிடுங்கியவர்கள் தலைநகரில் தேநீர் கடைகளுக்குள் முடக்கப்படுகின்றனர். ஏன்? இந்த 21ம் நூற்றாண்டிலும் தேயிலை கொழுந்து பிடுங்குவதில் தானே மலையகத்தில் போட்டி நடத்துகின்றனர். ஏன்?

இதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் தான் முழுக்காரணம் என்று சொல்லிவிட்டு நாங்கள் யாரும் கைகழுவிட முடியாது. இந்நிலை தொடர்வதற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பரபம்பரை அரசியலுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கையின் பொருளாதாரத்தின் அடிநாதமாக இருந்த மக்களின் முதுபெலும்பை அவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஒடித்ததில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி ஜி பொன்னம்பலம் முக்கியமானவர்.

தமிழ் சிறுபான்மையினத்தின் அரசியல் அபிலாசைகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படவும் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களோடு சமூகமான உறவைப் பேணவும் மிகுந்த தடையாக இருப்பது இவ்வாறான துரோகத்தனங்களும் நயவஞ்சகமான சூழ்ச்சிகளுமே. பெரும் நிலச்சுவந்தராக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் பலநூறு ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்த போதும் தங்கள் பரம்பரையிழைத்த பாவத்திற்கு ஒரு பிரயாச்சித்தம் கூடச் செய்யவில்லை. இன்னும் கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பிரதேசத்தில் வாழும் மலையக மக்களுக்கு எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இல்லை. மலையகத் தமிழர்கள் பற்றிய வடக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் தலைமைகளின் பரிவு என்பது முதலைக் கண்ணீர்.

மலையகத் தமிழர்கள் பற்றிய மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை இதனிலும் மோசமானது. அவர்கள் அம்மக்களை எப்போதுமே அடிமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனையே இப்போதும் செய்கின்றனர். அவர்களை சுயமற்றவர்களாக தங்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே வைத்திருப்பது. அவர்களை எப்போதும் தோட்டங்களோடே கட்டிப்போடுவது. அதன் மூலம் அவர்களை காலத்துக்கும் அடிமையாக்குவது. மலையகத்தை விட்டு வெளியே வன்னிவரை வந்த மலையகத் தமிழர்களின் வாழ்நிலை மலையகத்தில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்நிலையோடு ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் தோட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தங்கள் கடின உழைப்பினால் அடைந்த முன்னேற்றம்.

ஆகவே மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு யாரும் தப்பித்துவிட முடியாது. தமிழ் சமூகமும் தமிழ் அரசியல் வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகமும் இவ்விடயத்தில் தங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். மலையக அரசியல் கட்சிகள் மலையக அறிவியில் சமூகம் உட்பட.

ஆங்காங்கே சில தீவிர செயற்பாடுகள் சிலரினால் முன்னெடுக்கப்பட்டு அது மலையக மக்களின் வாழ்வியலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யும் விரல்விட்டு எண்ணக்கூடிய பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள் இலைமறை காயாகவே உள்ளனர். அந்த வகையில் கிளி விவேகானந்த வித்தியாலயமும் அதன் அதிபர் ஜெயா மாணிக்கவாசன் குறிப்பிடப்பட வேண்டியவர். முற்று முழுதாக மலையக தமிழர்கள் குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று கிளிநொச்சியின் முன்னரங்க பாடசாலையாகவும் அரசின் கல்வித் திட்டங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் இயற்கையோடு ஒன்றிய பாடசாலையாகவும் மாகாண மட்டத்தில் பரீட்சைகளில் சாதனை படைத்த பாடசாலையாகவும் உள்ளது. இவ்விடத்தில் கிளிநொச்சியின் மற்றுமொரு பின் தங்கிய பிரதேசமாக உள்ள சாந்தபுரம் மகாவித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன் குறிப்பிடப்பட வேண்டியவர். அவர் மலையகத் தமிழர்களின் ஒரு உரத்த குரலாகவும் கிளிநொச்சியில் உள்ளார்.

இன்னல்களை அனுபவித்த, அனுபவிக்கின்ற மலையக மக்களின் இடைவிடாத குரலாக எனக்கு மிகவும் பரீட்சயமானவர் மு நித்தியானந்தன். ஏப்ரல் 01, 2023இல் நித்தியானந்தனின் 75வது பிறந்த தினத்தையொட்டிய பவள விழா லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்ரான்மோரில் (Stanmore) உள்ள பென்ற்லி ஹை ஸ்கூலில் (Bently High School) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு நித்தியானந்தனின் மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல், மலையகச் சுடர் மணிகள், பெருநதியின் பேரோசை, ஆடல் எங்கேயோ அங்கு ஆகிய நான்கு நூல்கள் அந்நிகழ்வில் வெளியிடப்பட்டதுடன் ‘நித்தியம்’ என்ற தலைப்பில் மு நித்தியானந்தனின் பவள விழா மலரொன்றும் வெளியிடப்பட்டது.

நான் 1991இல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த போது எனக்கு வயது இருபது. இயக்க மோதல்கள், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், அதற்குப் பின் இந்திய இராணுவத்தின் வரவு பின் இந்திய இராணுவத்தின் வெளியேற்றம். இலங்கையிலும் தமிழ் பிரதேசங்களிலும் எங்களுக்கு எதிர்காலம் மட்டுமல்ல வாழ்வதே கேள்விக்குறியாகி இருந்த நிலையில் என்னைப் போன்று பலர், ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த காலம். வட்டுக்கோட்டையில் இருந்து யாழ் நகருக்கு சைக்கிள் மிதித்துச் சென்றால் யாழ் நகரின் பிரதான சந்திகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு கழுத்தை வெட்டி முண்டத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள் அல்லது புலிகள் நெற்றியில் பொட்டு வைத்து மின்கம்பத்தில் கட்டிவிட்டிருப்பார்கள். யாருக்கு யார் துரோகி என்ற குழப்பமான காலகட்டம். புளொட், ரெலோ போன்ற அமைப்புகளும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கொலைகளினூடாக நிரூபிக்கத்தவறவில்லை. வே பிரபாகரன் அதற்கு முன்னரே கூட இருந்த பலரைப் போட்டுத் தள்ளியருந்தாலும் சுந்தரம் படுகொலை முதலாவது சகோதரப் படுகொலையானது.

இவ்வாறான பின்னணியில் தான் அன்றைய செய்திகள் இருந்தது. அன்றைய காலகட்டங்களில் கொலை, கொள்ளை என்பதெல்லாம் எண்ணிக்கையின் அல்லது மதிப்பீட்டின் அடிப்படையில் தான் முன்பக்கத்திற்கு வரும். எம் என் எம் அனஸின் மொழியில் சொன்னால் அது ‘பிணம் செய்த தேசம்’.

அப்போது, நித்தியானந்தன், வண பிதா சிங்கராயர், குட்டிமணி, தங்கத்துரை, நிர்மலா போன்ற பெயர்களை பத்திரிகைகளில் அறிந்த காலம். அதன் பின் 1983 வெலிகடைப்படுகொலை. அதில் தப்பியவர்கள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டது. மட்டக்களப்புச் சிறையை புளொட் வாசுதேவா – ஈஸ்வரன் – அசோக் ஆகியோர் உடைக்கத் திட்டமிட்டதும் உடைத்ததும் மு நித்தியானந்தன் இந்தியாவுக்குச் சென்றதும் நிர்மலா “புலிகள் வந்து கூட்டிக்கொண்டு போனால் தான் சிறைக்கு வெளியே வருவேன்” என்றதும் பத்திரிகைகளிலும் செவிவழியாகவும் அறிந்த தகவல்கள். இவ்வாறுதான் நித்தியானந்தன் எனக்கு அறிமுகமாகி இருந்தார். அவர்களை புலிகளாக கருதியிருந்த காலம். இந்த தகவல்களுக்கு அப்பால் 1991இல் இலங்கையைவிட்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த போது எனக்கு இவர்கள் தொடர்பில் வேறேதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் மீது ஒரு பிரமிப்பு இருந்தது.

லண்டனுக்கு வந்த எனக்கு தீப்பொறி குழுவினருடன் ஊரிலிருந்தே தொடர்பு இருந்ததால் லண்டனில் நடைபெறுகின்ற இலக்கிய, சமூக, அரசியல் சந்திப்புகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த நட்புவட்டம் வளர்ந்தது, விரிந்தது, ஆழமானது. இவ்வாறு நித்தியானந்தனும் அறிமுகமாகின்றார். என்னிடம் இருந்த பிரமிப்பை நித்தியானந்தன் தன்னுடைய எளிமையான இயல்பான உரையாடலால் தகர்த்துவிட்டார். விரைவிலேயே நித்தி அண்ணையாகிவிட்டார்.

மு நித்தியானந்தனின் உரைகளின்பால் நான் மிகவும் கவரப்பட்டேன். அவருடைய கதை சொல்லும் நளினம், எளிமை மிகவும் கவர்ச்சியானது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டும் அவருடைய ஆளுமை மிகச் சிறப்பானது. கல்வியியல் கோட்பாட்டாளர்களில் ஒருவரான ஸ்கினர் நடத்தையியலாளர் “யாரும் எதையும் கற்கலாம்” என்பவர். சிறு குழந்தைக்கும் விண்வெளிக்கு ரொகட் விடுவதை கற்பிக்க முடியும் என்பவர். மு நித்தியானந்தனின் உரையில் இதனைக் காணலாம். யாருக்கும் எதனையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

என்னுடைய வாசிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும் நித்தியானந்தனின் உரைகளுக்கூடாக பலநூல்களை வாசித்த அனுபவம் கூட்டத்தின் முடிவில் எனக்கு ஏற்படும். அதில் நித்தியானந்தன் எவ்வித மாயவித்தையையும் மேற்கொள்ளவில்லை. தான் உரையாற்றுவதற்கு முன்னர் அதற்கான ஆய்வுகளில் மூழ்கி தன்னைத் தயார்படுத்தியிருப்பார். தன்னுடைய உரையைக் கேட்போரின் நேரத்தை அவர் மிகவும் மதிப்பவர். அதனால் தான் அதற்கான முன் தயாரிப்போடு புதிய தகவல்களோடும் புதிய பார்வையோடும் அவர் கூட்டத்திற்கு வருவார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் 1997இல் நானும் ‘தேசம்’ என்ற சஞ்சிகையை ஆரம்பித்தேன். புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக லண்டனில் நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாக இணைய ஊடகமாக (தேசம்நெற்) தற்போது காட்சி ஊடகமாகவும் (தேசம்திரை) வந்துகொண்டிருக்கின்றது. 2000ம் ஆண்டு காலகட்டங்களில் லண்டனில் புலிகளுக்கு ஆதரவில்லாத தரப்பினரால் நடத்தப்படும் கூட்டங்கள் என்றால் அது தேசம் நிகழ்த்தும் கூட்டமாகமே இருந்த காலம். தேசத்தின் ஆரம்ப நாட்களில் நித்தியானந்தனின் உணர்வுபூர்வமான ஆதரவு மிகக் காத்திரமானது. தேசத்தின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது, உரை நிகழ்த்துவது, நூலாய்வுகளை மேற்கொள்வது என நித்தியானந்தன் மிகுந்த ஆதரவை வழங்கி வந்தவர். தேசம் ஏற்பாடு செய்த சண்முகதாசனின் நூல் அறிமுகவிழா, மலேசியத் தமிழ் இலக்கியம் – மாநாடு, யாழ் பொதுசன நூலக எரிப்பு நினைவு நிகழ்வு, மற்றும் பல அரசியல் கலந்துரையாடல்களில் மு நித்தியானந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

நான் எனது வாழ்வின் பிந்திய காலத்தில் எனது நாற்பத்து ஒன்பதாவது வயதிலேயே கலைமாணிப் பட்டத்தை முடித்து முதகலை மாணிப் பட்டத்தை முடித்து ஆசிரியரானவன். எனக்கு தேடலையும் ஆர்வத்தையும் தூண்டியதுடன் எனது தேடலுக்கு இரையூட்டியது புலத்தில் இடம்பெற்ற கலை, இலக்கிய, சமூக, பொருளாதார, அரிசியல் கூட்டங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் தர்க்கங்கள். எனது எழுத்தாற்றலையும் கூட நான் புலத்திலேயே வளர்த்துக்கொண்டேன். எனக்கு தமிழில் இருந்த ஆளுமையே அதனை ஆங்கிலத்திற்கும் மாற்றிக்கொள்ள உதவியது. என்னுடைய தேடலின் வளர்ச்சியில் நித்தியானந்தனின் பங்கும் கணிசமனது.

நித்தியானந்தனேடு நெருக்கமான சிலரை கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் நித்தியானந்தனோடு ஒரு முரண்பாடு ஏற்பட்டது. இருந்த போது 2016இல் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை ” என்ற என்னுடைய நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு காத்திரமான விமர்சன உரையை வழங்கி இருந்தார். அந்நூலில் இஸ்ரேலிய மொசாட் படைகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டு இருந்தேன். அதுபற்றி மற்றுமொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பிய போது என்னால் உடனடியாக அந்த தகவல் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. ஆனால் நித்தியானந்தன் எந்தப் புத்தகம் அது யாரால் எழுதப்பட்டது என்பதை அவ்விடத்தில் உடனடியாகவே சுட்டிக்காட்டினார்.

ஒரு மாணவனின் கல்வியியல் ஆளுமையில் அவன் ஆசானின் கல்வியியல் ஆளுமை மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பேராசானாக நித்தியானந்தன் தன்னுடைய உரைகளுக்கு மேற்கொள்ளும் தயாரிப்புக்கள் எங்களிலும் துளித்துளியாக தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வி என்பது ஒரு அனுபவம். அது ஒப்பீட்டளவில் நிரந்தரமான மாற்றத்தை மனிதர்களின் நடத்தையில் பழக்கத்தில் ஏற்படுத்தும். அவ்வாறான மாற்றத்தை நித்தியானந்தன் என்னில் ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு இந்றைய நாளில் எனது பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

“எனக்குத் தெரியும் நான் ஒரு திறமையானவன் என்று ஏனென்றால் எனக்குத் தொரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று – ‘I know that I am intelligent, because I know that I know nothing” என்று சொன்னவர் தத்துவமேதை சோக்கிரட்டிஸ். அப்படித்தான் நித்தியானந்தனும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அதனால் அவர் 75 வயதிலும் இளமையோடு தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்து எமது அறிவுப் பசியையும் ஆற்றுகின்றார்.

நானும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு விடை தெரியாத கேள்விகள் சிலவற்றுக்கு விடையை அறிய ஆவலாக இருக்கின்றேன். கேள்விகளில் முட்டாள்தனமான கேள்விகள் இல்லையென நம்ப விரும்புபவன் நான். அதனால் இதனை கேட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி ஒன்று: எனக்கு தெரிந்தவரை நித்தியானந்தன் ஒரு இடதுசாரி. மனிதத்தை மனித நேயத்தை மதிப்பவர். அப்படியிருக்கையில் இடதுசாரிக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தனர்? வே பிரபாகரனை தலைவராக ஏற்றனர்? இது வே பிரபாகரனின் ஆளுமையா? இடதுசாரிகளின் ஆளுமையின்மையா? கருத்தியல் தோல்வியா?

கேள்வி இரண்டு: இன்றைய பவள விழாவிற்கு 25 ஆண்டுகளுக்கு முன் 50வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்க வாய்ப்பேயில்லை. இது கருத்தியல் சமரசமா? அல்லது கருத்தியல் அம்னீசியாவா?

மு நித்தியானந்தன் ஒரு சிறந்த ஆய்வாளர் விமர்சகர். அவருடைய பவளவிழாவில் ஒரு கேள்வியை முன் வைக்காமல் நிகழ்வை முடிவுக்கு கொண்டுவருவது பூரணத்துவத்தைத் தராது என்பதற்காக மட்டுமே இக்கேள்விகள்.

 

“அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் 20 ஆண்டுகள் சிறை.”- இலங்கையின் ஜனநாயகத்திற்கு சாவுமணியாக வருகிறது பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் !

“பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.” என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

விரைவில் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நாடாளுமன்றில்! தினேஷ்  குணவர்தன - தமிழ்வின்

இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தரப்பினரும் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், “

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய  ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத  தடுப்புசட்டம் வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டது. அது  மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி  பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2018 ம்ஆண்டு  குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.” என தெரிவித்திருந்தார்.

இதே நேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.  மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No description available.

இதே நேரம் இன்றைய தினம் இங்கிலாந்திலுள்ள இலங்கையர்களின் இணைவில் இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது அரசின் காட்டுமிராண்டித்தனமான போக்குக்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தி லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதே வேளை ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடுத்து ராஜபக்சக்களின் இடத்தை பிடித்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரமுண குழுவினருடன் இணைந்த வகையில் மக்கள் போராட்டத்தை அடக்கும் – ஜனநாயக உரிமைகளை பறிக்கும் – இன்னுமொரு மக்கள் போராட்டம் எப்போதும் ஏற்பட இடம்கொடுக்ககூடாது எனும் எண்ணத்தோடு செயற்படுவதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்ற நிலையில் இதன் நீட்சியே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம். இதுவரை காலமும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே எதிராக அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பயங்கரவாத சட்டம் புதிய திருத்தப்பட்ட சட்ட மூலத்தினூடாக பெரும்பான்மை சிங்களவர்களுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.  குறிப்பாக வேகமாக சிங்கள இளைஞர்களிடையே பரவி விரும் ஜே.வி.பி கட்சியினரின் புரட்சிக்கருத்துக்களையும், அரகலய போராட்டங்களில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களையும் இந்த புதிய சட்ட மூலம் இலக்கு வைக்கின்றது என்பதே உண்மை .

அரசுக்கு எதிரான அரகலயாக்களின் போராட்டத்தில் பல்கலைகழக மாணவர்களின் பங்கு அதிகமாக இருந்த நிலையில் பல்கலைகழக மாணவர்களுக்கு எதிரான கடுமையான நிபந்தனைகளை அரசு கடுகதியில் செயற்பாட்டுக்கு கொண்டு வந்தததுடன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களின் கல்வி இடைநிறுதப்படும் என அறிவித்திருந்ததுடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ரணில் அரசாங்கம் கைது செய்திருந்தததுடன் அரகலய போராட்டங்களில் ஈடுபட்டடிருந்த பல இளைஞர்களையும் கூட ரணில் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ததது. இது சிங்களவரிடையே முதன்முறையாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான மனோநிலையை உருவாக்கியிருந்ததது என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வந்திருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே “பயங்கரவாத  தடைச்சட்டத்தினை முன்னிலைப்படுத்திய போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முழுமையான ஆதரவை எதிர்ப்பார்த்து நிற்பதாக கூறியிருந்தார்.

 

புதியபயங்கரவாத சட்டமூலம் தென்னிலங்கையரிடையே பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதே நிலையில் இலங்கையில் ஜனநாயக போராட்டங்களை அடக்கப்படுவதற்கான ஒரு பாரிய சதியாகவே இதனை கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட் போது “ இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள். மீண்டும் அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்.” என அவர் கூறியிருந்ததது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அச்சமான சூழலை தெளிவாக வெளிக்காட்டுகின்றது.

இதே நேரம் “அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகப்பு புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படலாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஆகவே இதனை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என தெரிவித்து சஜித் பிரேமதாஸ தரப்பும் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாரதூரமானது.’பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்திற்கு நீண்ட வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வரைவிலக்கணம் ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக உள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 3(2) உறுப்புரையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்,சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடல், தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் குழுக்களில் இணைதல் என 13 விடயங்கள் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் சிறந்தது தானே என ஒரு தரப்பினர் குறிப்பிட முடியும். நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயங்களுக்கு தண்டனை வழங்க முடியும்,பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலங்களில் சட்டமாக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்,ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் என்பது விசம் கலந்த ஜஸ்கிறீம் என்று குறிப்பிட வேண்டும்.” என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.

“பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போதுதான் அதனுடைய தீவிரத்தன்மையையும் – இன்னுமொரு பக்கத்தையும் சிங்களவர்கள் புரிவார்கள்.” என முன்பு தமிழ்த்தலைமைகள் கூறியதை இன்று தென்னிலங்கை படிப்படியாக உணர ஆரம்பித்துள்ளது என்பதே நிதர்சனம்.

 

ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா? – இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா வந்த ஜப்பானிய பிரதமர், சீனா-ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள வேண்டிய அமெரிக்காவின் தேவையைக் கூறினார். ஆனால் இந்தியா அதற்குப் பதிலளிக்கவில்லை.

SCO மாநாட்டிற்கு ஜூலையில் இந்தியா வருகிறார் சீன அதிபர்.
அங்கு எல்லைப்பிரச்சினை பேசப்படுமா?. ரூபாய்- யுவானில் இருதரப்பு வர்த்தகம் குறித்தான இணக்கம் ஏற்படுமா?. அல்லது QUAD மீதான சீனாவின் அதிருப்தி பற்றி விவாதிக்கப்படுமா? . இவைகளும் இருதரப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படலாம்.

அதாவது ஷாங்காய் கூட்டமைப்பில் (SCO)பேசப்படும் சகல விடயங்களையும் ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கும் என்று கணிப்பிடலாம்.

QUAD என்பதும் ஒரு வகையில் BRI போன்ற Regional Connectivity திட்டந்தான்.
தற்போது அமெரிக்க டொலர் கடன் பத்திரங்களை அதிகம் (1 ரில்லியன்) வைத்திருப்பது ஜப்பான்.
சீன உட்பட பல நாடுகள் இப்பத்திரங்களை விற்கத் தொடங்கியுள்ளன.
டொலர் index உம் வீழ்ச்சியடைகிறது.

அதேவேளை தம்மிடமுள்ள Bond களை விற்றால் அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகலாம் என்கிற பயம் ஜப்பானுக்கு.

இந்திய உட்பட பல நாடுகள் டொலரின் வர்த்தகம் செய்யாமல் தமது சொந்த நாணயத்தில் செய்ய ஆரம்பித்திருப்பதால் டொலரில் உள்ள சொத்துக்களுக்கும், அந்நிய செலாவணிக் கையிருப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகள் அச்சமடைகின்றன.

1944 இல் டொலரை மையப்படுத்திய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உருவாக்கம் இடம் பெற்றது. டொலரிற்கு ஆபத்து ஏற்படுகையில், இந்த நிதிமையங்களும் ஆட்டங்காணும்.

அதனை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகக் கணிக்கப்படும் ஜப்பானும் கவலையுடன் கவனிக்கும்.

மேற்குலகின் அரசியல், பொருளாதார, படைத்துறை ஆதரவு இருந்தாலும், ஆசியாவில் தனக்கான ஆதரவு நாடுகளைத் திரட்ட வேண்டிய அவசியம் ஜப்பானிற்கு உண்டு.

‘தென்சீனக்கடல் பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம்’ என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி, தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு இணைய முயற்சிப்பது போன்று, இந்துசமுத்திரப் பிராந்திலும் அதே சீன விரிவாக்கத்தைக் காட்டி இந்தியாவுடன் அணிசேர ஜப்பான் துடிக்கிறது.

இந்தியாவிலிருந்து திருக்கோணமலைக்கு எண்ணெய் குழாய் போடுவதன் ஊடாகவோ அல்லது இலங்கைக்கு நிதிஉதவி அளிப்பதன் மூலமோ இந்தியா-ஜப்பான்- இலங்கை என்கிற பிராந்திய இணைப்பினை உருவாக்கிவிட முடியுமென ஜப்பான் நினைக்கிறது.

அந்த நினைப்பு குறுகிய கால ஆயுள் கொண்டது என்பதனை மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்கள் புரிய வைக்கும்.
அது பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம்.

-இதயச்சந்திரன்
1/4/2023

“ராகுல் Vs மோடி மோதலும் – பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியலும்” : அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்

அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது.

The many Khalistani attacks on Indian embassies from UK to America

மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளமிட்டது போல் தெரிகிறது. தற்போது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மீண்டும் கிளம்பியுள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ முழக்கங்கள் இதனை மேலும் வலுப்படுத்துகிறது.

ரஷ்யா-உக்ரேயின் போரில், ரஷ்யா மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் நழுவல் போக்கினை இந்தியா கடைப்பிடிப்பதாக மேற்குலகம் கருதுவதை, இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ளும் பொதுவெளி ஊடக உரையாடல்களில் வெளிப்படும் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன. “ஐரோப்பாவின் பிரச்சினை மட்டுமே உலகத்தின் பிரச்சினையல்ல” என்று ஜெயசங்கர் அவர்கள் கடும் தொனியில், ஊடகச் சந்திப்பொன்றில் கூறியது இம்மோதலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Germany, Japan seek deeper ties during Scholz visit – DW – 04/27/2022

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மையம் கொண்ட குவாட்(QUAD) இல் இந்தியா இருந்தாலும், ஆக்கஸ் (AUKUS) என்கிற உயர் தொழில்நுட்பக்கூட்டில் இந்தியாவும் இல்லை. ஜப்பானும் இல்லை. ஆனாலும் சீனாவிற்கு எதிரான QUAD அணியில் இந்தியாவின் வகிபாகத்தைப் பலப்படுத்த G7 இலுள்ள ஜப்பானைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா. அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய அதிபர், நடைபெறும் போரில் உக்ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், தென்சீனக்கடலில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். இதனை ஜப்பான் ஊடான அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறை என்று கணிப்பிடலாம். ஆகவே இந்தியாவை மையச்சுழல் புள்ளியாகக் கொண்ட, மேற்குலகின் புவிசார் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதனை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இலங்கையிலும் மேற்குலகின் இராஜதந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் அக்கறை கொள்வதைக் காணலாம்.

அடுத்ததாக இந்திய அரசியலில் இதன் எதிர்வினைகள் என்னவென்று பார்க்கலாம். தமது பிராந்திய மூலோபாய நலனிற்குத் தேவையான நாடொன்று, நடுநிலையாகவோ அல்லது எதிரணியில் இருந்தாலோ, அந் நாட்டினை தம் பக்கம் இழுக்க பல நகர்வுகள் மேற்கொள்ளப்படும். அதில் ஆட்சிமாற்றமும் ஒன்று. இவைதவிர புதிதாக ஒரு பொருண்மிய அல்லது இராணுவக் கூட்டினை அமைத்து, அந்த ‘சிக்கலான’ நாட்டினை உள்வாங்கிக் கொள்வார்கள். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆட்சிமாற்றத்திட்டத்தில், ராகுல் காந்தியின் இந்திய காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கப்படுகிறது. அவரின் அண்மைக்கால புவிசார் அரசியல் கலந்த பேச்சுக்கள் மேற்குலக நிலைப்பாடுகளுக்கு இசைந்து போவதைக் காணலாம். இலண்டனில் நடைபெற்ற இந்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய ராகுல் காந்தி, ‘ இந்தியா மீதான சீனாவின் பாரிய அச்சுறுத்தலை வெளிநாட்டமைச்சர் புரிந்துகொள்ளவில்லை’ என்கிறார். ஆகவே மேற்குலகின் புவிசார் அரசியலோடு இணைந்து, ஹின்டன்பேர்க் அம்பாக மாற, ராகுல் காந்தி வில்லாக மாறி அதானியையும், ‘ஹவாலா’ மோடிகளையும் விமர்சிக்கும் ஒரு இந்தியத் தலைவராக தன்னை இனங்காட்டிக் கொள்ள முனைகிறாரா? என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. இதற்கு அவசர அவசரமாக எதிர்வினையாற்றிய மோடி அரசு, ஹவாலா மோடிகளோடு நரேந்திர மோடியை சரிநிகர் பிம்பமாக சித்தரித்துப் பேசிய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை முடக்கிவிட்டது.

ஆகவே இந்திய நாட்டின் எதிர்க்கட்சியின் நிலை பலவீனமாக இருப்பதால், அரசின் புவிசார் நிலைப்பாட்டில் மாற்றங்களை நிகழ்த்துவது கடினமானதாகவிருக்கும் என்பதே நிதர்சனமாகும். 18 நாடுகள் இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்ய உடன்பட்டிருப்பதும், BRICS இன் விரிவாக்கமும் அதன் பொது நாணய உருவாக்க முன்னெடுப்பும், உலக எண்ணெய்ச்சந்தையில் ஏற்படும் மாற்றமும், அமெரிக்க- ஐரோப்பிய வங்கிகளின் நிதி மூலதன வெளியேற்றங்களும் சேர்ந்து உலக நிதிக்கட்டமைப்பில் பெருமாற்றங்களை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புக்களை காண்பிக்கிறது. இதில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலைப்பாடு குறித்தே மேற்குலகமும் ஜப்பானும் அதிக கரிசனை கொள்கிறது. ஆனாலும் இந்தியா மீதான மேற்கின் மறைமுக அழுத்தங்கள் அதிகரிக்கும் போக்குகளே அதிகமாகும் என்று தெரிகிறது.

இதயச்சந்திரன் (25-03-2023)