பெண்களின் நிர்வாணப் படங்கள்: தீதும் நன்றும் பிறர் தர வாரா !
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. அதன்படி எம்பி அர்ச்சனா இராமநாதன், சட்டத்தரணி கௌசல்யா நரேன், தமிழ் அடியான் ரஜீவன் இராமலிங்கம் மூவரும் இணைந்து ஊழல் ஒழிப்பு அணி வன்னி எனும் போலி முகநூலினூடாக விதைத்ததை இப்போது அறுவடை செய்கிறார்கள். சாளினி, சங்கவி வரிசையில் கௌசல்யாவின் என்று சொல்லப்படுகிற நிர்வாணப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. “ யாழ்ப்பாணத்து மேயர் வேட்பாளர் லோயர் கௌசல்யா…….” என்ற தலைப்பில் ஆரம்பிக்கும் பதிவு மிகக் கீழ்த்தரமான தகவல்கள் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. சட்டத்தரணி கௌசல்யா நரேனின் தாயார், முன்னாள் காதலன் மற்றும் தம்பி என அனைவரையும் இழுத்து இப்பதிவு அவதூறு செய்துள்ளது.
ஊழல் ஒழிப்பு வன்னி அணிக்கு கொஞ்சமும் சளைக்காது கௌசல்யா தொடர்பான பதிவு உள்ளது. அரசியலில் உள்ள பெண்கள் மீது காலம் காலமாக நடத்தப்படும் பாலினம் சார்ந்த வன்முறை தான் கௌசல்யா மீதும் நடக்கின்றது. இதேமாதிரியானவொரு கருத்தியல் வன்முறையையே தான் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஸ்சுவஸ்திகா அருளிங்கம் மீது எம்பி அர்ச்சுனாவும் நிகழ்த்திருந்தார்.
எம்பி அர்ச்சுனா தன்னுடைய உத்தியோக பூர்வ முகநூலில் ஸ்சுவஸ்திகா அருளிங்கத்தை பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பிறழ் நடத்தையான பெண் என குறிப்பிடுகிறார். எம்பி அர்ச்சுனாவின் கருத்துக்களையே ஸ்சுவஸ்திகா அருளிங்கம் தொடர்பில் ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் வழி மொழிகின்றது. எம்பி அர்ச்சனா ரிக்ரொக் பெண் சாளினியை பாராளுமன்றத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எம்பி அர்ச்சுனாவின் யாழ்ப்பாண ஆணாதிக்க மனப்பாங்குதான் அவரை எல்லை தாண்ட வைத்தது. எம்பி அர்ச்சுனா பிரதிபலித்தது யாழ்ப்பாண வெள்ளாள ஆண் மையவாத கருத்துக்களையுடைய ஆண்களின் மனநிலையையே. அதைவிட வெட்கக்கேடு எம்பி அர்ச்சுனாவினை இதுவரை எந்தவொரு தமிழ்த் தேசியம் பேசும் ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லதுஅரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ கண்டிக்கவில்லை. கௌசல்யாவின் நிர்வாணப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தவர்களும் அதே எம்பி அர்ச்சுனாவின் மனப்பாங்கையுடைய ஆண்களே.
பொதுவெளியில் இயங்கும் பெண்கள் மீது தொடுக்கப்படும் இந்தவிதமான தாக்குதல்கள் பெண்களை வீட்டுக்குள் முடக்கும் யுக்தி. கௌசல்யா சாளினி, சங்கவி மற்றும் ஸ்வதிகா மீதான அவதூறை கண்டிக்கவில்லை. மாறாக சட்டத்தரணி கௌசல்யா தமிழ் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு, ஊழல் ஒழிப்பு அணி வன்னியை ஆதரிக்க வேண்டும் என தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். சட்டத்தரணி கௌசல்யா ஊழல் ஒழிப்பு அணி வன்னி பெண்கள் விடயத்தில் சிறு அக்கறை எடுக்க வேண்டும் என்றும், முடிந்தால் சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு எச்சரிக்கை கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். அப்பெண்கள் திருந்தாவிடில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் முட்டாள் தனமாக ஆலோசனை வழங்கினார்.
கௌசல்யா நரேன் ஒரு சட்டத்தரணி. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நீதித்துறையில் பணியாற்றுபவர்கள் கடமை. ஊழல் ஒழிப்பு அணி வன்னியை நடவடிக்கை எடுக்கும் படி கௌசல்யா கூறுவது அவருடைய சட்டப்படிப்பு சம்பந்தமாக கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. போலி கணக்கு முகநூல் ஒன்றை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ்த்துறைக்கு இணைய நிறுத்துவது சட்டவிரோதமான செயல்.
சட்டத்தரணி கௌசல்யா நரேன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நேர்மையான முறையில் போட்டியிட்டலாம். அவர் மாநகரசபை முதல்வராக வர வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதேநேரம் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி கணக்கு முகநூலை இயக்கி அவதூறை பரப்பி தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முனைவது கத்திமேல் நடப்பது போன்ற செயல். மற்றப் பெண்களின் நிர்வாணப்படத்தை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்ட எம்பி அர்ச்சனா மற்றும் கௌசல்யா அவர்களால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி பதறிப்போய் கௌசல்யாவிற்கு வக்காலத்துக்கு வந்துள்ளது.
சட்டத்தரணி கௌசல்யா நரேனின் படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் (AI) உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. அந்தப்படம் போலியானதே. யாரும் அதை நம்ப வேண்டாம் என கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்கிறது. சாளினிக்கும் ஊடகவியலாளர் சங்கவிக்கும் வந்தால் தக்காளிச் சட்னி. கௌசல்யாவுக்கு என்றால் இரத்தம் என ஏன் ஊழல் ஒழிப்பு அணி வன்னி பதறுகிறது. பொதுவாக எந்தப் பெண் மீதும் வன்முறையின் எந்த வடிவத்தைப் பிரயோகித்தாலும் கண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் கௌசல்யா நரேனின் நிர்வாணப் படத்தை அனுதாப வாக்குகளுக்காக அர்ச்சுனா – ஊழல் ஒழிப்பு அணி வன்னி தான் யுஐ ப் பயன்படுத்தி கௌசல்யாவின் நிர்வாணப்படத்தை வெளியிடுகின்றதா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாதது. யாராக இருந்தாலும் எதற்காக இருந்தாலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
மேற்கு நாடுகளில் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் அறிவியல் என பெண்கள் அளப்பரிய சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்றார்கள். சுனிதா வில்லியம்ஸ் என்ற பெண்மணி வெண்வெளியில் 9 மாதங்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்பியுள்ளார். ஆனால் தமிழர்கள் முகநூலில் போலிக் கணக்குகளை தொடங்கி பெண்களின் நிர்வாணப்படங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நல்லவேளை சுனிதா வில்லியம்ஸ் யாழ்ப்பாணத்திலிருந்து விண்வெளிக்கு செல்லவில்லை. ஊழல் ஒழிப்பு அணி வன்னி நான்கு ஆண்களுடன் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் தனிமையாக கழித்த வீடியோக்கள் தம்மிடம் இருப்பதாக கீழ்த்தரமான பதிவை போட்டிருப்பார்கள். எம்பி அர்ச்சுனாவும் பாராளுமன்றத்தில் சுனிதா வில்லியம்ஸ்க்கு விபச்சாரிப் பட்டம் கொடுத்து விசாரணையைக் கோரியிருப்பார். மாறி மாறி நிர்வாண படங்களை வெளியிட்டு பெண்கள் மீது அடக்குமுறை செய்வதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இப்படியான முகநூல் கணக்குகளை பின்தொடர்பவர்களும் திருந்த வேண்டும். இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் கிரைம்ஸ்ஸை கட்டுப்படுத்த வேண்டிய தொழில்நுட்ப வசதிகளை இலங்கை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அர்ச்சுனா – கௌசல்யா – அர்ச்சுனா அடியான் ஆகியோருடன் இணைந்து செயல்படும் முகநூல் அணிந்த ஊழல் அழிப்பு அணி வன்னிக் கயவர்களை சட்டப்படி அரசு அம்பலப்படுத்த வேண்டும்.