உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் !

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் தாக்குதலுக்கான உண்மையான நீதியை நிலைநாட்ட முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கத் தவறிவிட்டது. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அது எல்லாவற்றையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது . நாம் பாதியிலேயே விசாரித்துவிட்டு வழக்குப் பதிவு செய்ய முடியாது. நாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முறையாக நடத்தப்படும், ஆதாரங்கள் தொகுக்கப்படும், மேலும் அது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் 6ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்” என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *