செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும் இருவர் கட்டுப்பணம்

vote.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடு வதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்று வரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாளை: ஏ எச்1என்1 பீடிக்கப்பட்ட மாணவர் பரீட்சைக்கு தோற்ற தடை

influenza-a.jpgக.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி ஆரம்ப மாகும்போது ஏ எச்1என்1 வைரஸ் பீடிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப் பின் அவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எனினும், இன்றுவரை அவ்வாறு எந்தவொரு மாணவரும் ஏ. எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போகும் அத்து டன் இதனால் ஏனைய பரீட்சார்த்திக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வைரஸால் பீடிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் பற்றிய எவ்வித அறிவித்தல்களும் பரீட்சைத் திணைக்களத்துக்கோ வலய கல்விப் பணிப்பாளருக்கோ அறியக்கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

‘தேசம்நெற்’ இணையத் தடங்கல்

thesamlogo892.jpgதேசம்நெற் சில மணி நேரங்களாக இயங்காததற்கு எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘தேசம்நெற்’ இன் இணையத்துக்கான சேவைகளை வழங்கும் நிறுவனத்திற்கு ஆண்டுச் சந்தா வழங்க ஏற்பட்ட தாமதத்தால் தேசம்நெற் இணையம் சில மணி நேரங்களாக இயங்கவில்லை. இது தொடர்பாக எம்முடன் பல வழிகளிலும் தொடர்புகொண்ட தேசம்நெற் நண்பர்களுக்கு எமது நன்றிகள். எதிர்காலத்தில் இவ்வாறான தடங்கள்கள் ஏற்படாமலிருக்க முயற்சி செய்கின்றோம்.

– தேசம்நெற் நிர்வாகம்.

முஸ்லிம் தமிழ் சிங்கள சமூகங்களின் உதவியுடன் சிறிலங்கா இஸ்லாமிக் போறம் மேற்கொள்ளும் கண் சிகிச்சை முகாமுக்கான நிதி திரட்டும் வைபவம்

Naja Mohamadஇலங்கையின் வடபகுதி மக்களுக்கு சிறிலங்கா இஸ்லாமிக் போறம் (யுகே) ஏற்பாடு செய்துள்ள கண் சிகிச்சை முகாமுக்கான நிதிசேகரிப்பு வைபவம் லண்டன் மொஸ்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 12ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்  நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீபன் ரிம்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறீலங்கா இஸ்லாமிய ஒன்றியம் (இலண்டன்) ஆரம்பித்துள்ள முதல் முயற்சி இலங்கையின் வடபகுதியில் உள்ள கண் நோயாளர்களின் தேவை கருதி முதற் தொகுதியாக 500 நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 சிகிச்சை முகாம்கள் வட பகுதியின் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளில் 500 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இச் சிகிச்சைக்கு நோயாளி ஒருவருக்கு தலா £50 ஸ்ரேர்லிங் பவுண்கள் செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களில் இருந்த மக்களுக்கான தேசம்நெற் நூல் திட்டத்திற்கு முக்கிய பங்களித்த அகிலன் பவுண்டேசன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற கண் சிகிச்சை முகாமிலும் தங்கள் பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளனர். அகிலன் பவுண்டேசன் 25 பேருக்ககான கண் சிகிச்சைக்கான செலவை வழங்க முன் வந்துள்ளது. மேலும் லண்டனில் உள்ள முக்கிய சைவ ஆலயம் ஒன்றும் இக் கண் சிகிச்சை முகாமுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தமிழ் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு இவ்வேலைத் திட்டத்திற்குப் பங்களிக்க முன்வந்துள்ளதாக சிறிலங்கா இஸ்லாமிக் போறத்தின் தலைவர் நஜா மொகமட் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்வில் பெரும்பாலும் 500 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைத் திரட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவ் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள Serendib Foundation எனப்படும் மன்றத்தினால் அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டத்தின் கீழ் இடம்பெறுகிறது. இதற்கான சிகிச்சை வசதிகளை இலங்கையிலுள்ள குவைத் வைத்திய மன்றம் (Kuwait Hospital Foundation) மேற்கொள்கிறது. இம் மன்றம் ஏற்கெனவே சுமார் 4000 இற்கு மேற்பட்ட கண் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை கடந்த 3 வருடங்களில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கண் சிகிச்சை மூகாம் கண் பார்வையை தெளிவாக்குவதற்கான முகாம் மட்டுமல்ல சமூகங்களிடையே பரந்த பார்வையை ஏற்படுத்துவதற்கும் உதவும் என நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார். தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது இரட்டிப்பு நன்மையை ஏற்படுத்தம் எனவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் பல வழிகளிலும் தாயக மக்களுக்கு தங்கள் உதவிக்கரங்களை வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்த கவுன்சிலர் போல் இக்கண்சிகிச்சை முகாமை மேற்கொள்ளவும் தங்கள் உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் வழங்குவது அவசியமானது எனத் தெரிவித்தார்.

CATARACT SURGERY CAMPS IN NORTHERN SRI LANKA INTIATED BY
SRI LANKA ISLAMIC FORUM UK TRUST

FUND RAISING EVENT

On Saturday 12th December 2009
From 3.00 p.m. to 7.00 p.m

at the
London Muslim Centre
Main Conference Hall
46-92  Whitechapel Road, London E1 1JX 

CHIEF GUEST:
Rt. Hon. Stephen Timms, M.P.

GUEST OF HONOUR:
H.E. Mr. Nihal Jayasinghe,
High Commissioner for Sri Lanka in the UK

SPECIAL GUESTS
Religious Dignitaries of all Faiths
Local Councillors
Representatives of Community Organizations

Sri Lanka Islamic Forum UK Trust has initiated a project to conduct cataract operations for 500 people in the North of Sri Lanka which will be done in two stages. The first stage will be to conduct 20 screening camps in the five districts of the Northern Province to identify patients needing surgery. 500 patients will be selected in the second stage for treatment.

The project is the brain-child of Serendib Foundation for Relief & Development, Sri Lanka. It will be implemented by Kuwait Hospital Foundation, Sri Lanka, which has a special unit dedicated for cataract surgeries. Kuwait Hospital Foundation, Sri Lanka, has already treated free of charge more than 4000 cataract patients in other parts of Sri Lanka within the last three years.

The cost for treatment and post surgery care is estimated to be around £50 per patient.

SLIF UK Trust has organized a fund raising event on Saturday, 12th December 2009, from 3.00 to 7.00 pm at the London Muslim Centre, Whitechapel, and London, to collect the fund needed for the project.

Representatives of the three communities, Sinhalese; Tamils & Muslims,  local Councilors, Professionals, Community Leaders, Religious Dignitaries of all faiths, officials from UK Department of International Development, UK Foreign & Commonwealth Office,  Sri Lanka High Commission, and representatives of INGOs and Media personnel are expected to participate in the event.

Organizations and individuals willing to support this humanitarian effort and also for invitations to participate in the Fund Raising event may contact:

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரியும் தொலைபேசி இலக்கமும்:

SLIF UK Trust by E-mail: slif.uk@gmail.com
Najah Mohamed (0044 79 833 41181 0r 0044 79 833 41181)
Marzook (0044 79 405 76701 or 0044 79 405 76701)

Sri Lanka Islamic Forum UK Trust

3rd Floor LMC Business Wing,
38-48, Whitechapel Road
London E1 1JX
United Kingdom

பிரபாகரனின் ஆயுதம் சாதிக்க முடியாததை டொலர் சாதிப்பதற்கு இடமளியோம் தேசிய இணக்கச் சபை தின நிகழ்வில் ஜனாதிபதி

mahinda0.jpgதேசிய போராட்டம் எதிர்கொள்ளும் இறுதி சவாலை சந்திக்கின்ற தருணமிது. பிரபாகரன் ஆயுதம் மூலம் செய்ய முடியாமற் போனதை டொலர்களினால் சாதிக்க முற்படும் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி இலங்கை மாதாவின் பிள்ளைகளாக அச்சமின்றி சகலரும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன. இதனை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். நம்மை விட நம் தாய் நாட்டை நேசிப்பவர்களாக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

தேசிய இணக்கச் சபை தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலிருந்து இணக்கச் சபைகளின் உறுப்பினர்கள் 4,000 க்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சர்களான மிலிந்த மொரகொட, சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையின் வரலாற்றை நோக்குகையில் அரசர் கால தீர்ப்புகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.

ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அந்த ஊருக்கே தண்டனை வழங்கிய காலம் அது. தவறாக ஒருவர் உருவாக்கப்பட்டதால் அவ்வூருக்கே தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அக் காலத்தில் மிகக் குறைந்த குற்றங்களே இடம் பெற்றன. நாம் வழங்கும் தீர்ப்புக்கு இணக்கமா? என இரு தரப்பினரையும் கேட்கும் நீதிமன்ற யுகம் மாற்றமடைந்து, நீ குற்றவாளியா – அல்லது சுத்தவாளியா எனக் கேட்கும் யுகம் உருவாகியுள்ளது.

சாதாரண நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு இன்றுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பொன்றிற்கிணங்க ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டபோது, முழு உலகமும் அழுத்தங்களைப் பிரயோகித்த சம்பவமொன்றையும் கூற முடியும். இந்த வகையில் நீதிமன்றத் தீர்ப்புக்கே அழுத்தம் கொடுக்கும் யுகமிது.

சாதாரண குடும்பப் பிரச்சினைகள் போன்றவை இனி நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதே எமது கருத்து. எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கின் சகல பகுதிகளுக்கும் இணக்கச் சபைகளை விரிவாக்குவதே எமது நோக்கம்.

புலிகளுக்குக் கப்பம், வரிகளைச் செலுத்திய காலமும், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் போதை காரணமாக விளைந்த பாதிப்புகளையும் எம்மால் முடிவுக்குக் கொண்டு வர முடிந்துள்ளது.  சட்டத்தை மதிக்கின்ற சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். மக்கள் நலன் கருதிய தீர்மானங்களை எச்சந்தர்ப்பத்திலும் நாம் மாற்றத் தயாரில்லை.

இது தேர்தலுக்காகவோ அல்லது எமது அதிகாரத்திற்காகவோ எடுக்கும் தீர்மானமல்ல நாட்டு மக்களின் நலனைக் கொண்டது.  கல அரசியல் கட்சிகளும் எமது அமைச்சரவையில் உள்ளன. நாம் ஒருபோதும் அரசியல் பலிவாங்கலில் ஈடுபடுபவர்களல்லர். எந்த செயற்பாடுகளிலும் நகரம் – கிராமம் என்ற பேதத்துடன் செயற்படுபவர்களில்லை. நாம் அனைவரும் ஒரே நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எமக்கு வர வேண்டும்.

இதற்கு சமூகத்திலுள்ள அரசியல் வைராக்கியத்தை இல்லாதொழிக்க வேண்டும். தாய் நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதில் இணைந்து செயற்பட்டது போல் அச்சம் – சந்தேகமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் நாம் கைகோர்த்துச் செயற்படுவோமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

புலிகள் இயக்க சொத்துக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – பிரதமர்

ratna.jpgபுலிகள் இயக்கத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைப் பொறுப்பேற்று அவற்றை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகளின் சொத்துகள் தொடர்பில் தற்போது புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், விசாரணைகள் நிறைவடைந் ததும், தகவல்கள் பாராளுமன்றத்தில் வெளியிடப்படுமென்றும் பிரதமர் கூறினார்.

2009 மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த இயக்கத்தின் தங்கம் உள்ளிட்ட பெருமளவு சொத்துகள் கைப்பற்றப்பட்ட தாகவும் அவை தொடர்பான தற்போதைய நிலவரம் யாதென்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் சொத்துக்களை மீட்டுள்ளனர். தங்கம் உள்ளிட்ட சொத்துகள் குறித்து புலன் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கே. பீ. மூலம் புலிகள் இயக்கத்தின வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்குச் சொந்தமான பல கப்பல்களில் சிலவற்றைக் கடற்படையினர் அழித்துள்ளனர். எஞ்சிவை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிப்படும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு அமைச்சு துரித நடவடிக்கை – அமைச்சர் மிலிந்தமொரகொட சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை

moragoda.jpgபயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்ப ட்டுள்ள 650 தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்ப டுத்துவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் பேசியுள்ளதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஏற்கனவே அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள் ளது. தடுப்புக் காவலில் உள்ளவர்க ளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் விடயம் நீதி அமை ச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இணைக் கூட்டங்களின் போது பேசப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்ட மாஅதிபர் ஏற்கனவே விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள தமிழ் இளைஞர்களில் 59 பேரை சட்ட மாஅதிபர் கடந்த இரு மாதங்களில் விடுதலை செய்துள்ளார்.

இம்மாதத்தில் மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் இளைஞர் களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சர்வதேச நபர்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடித்து அவர்களது கோவைகளை பூரணப்படுத்தி அனுப்புமாறு தமது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கு மாறு பொலிஸ் மாஅதிபரை சட்டமா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என்று அமைச்சர் மொரகொட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் வெளிநாட்டு பயணம் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல்

rohitha-bogollagama_s.jpgமுன்னாள் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் வெளிநாட்டுப் பயணங்களினால் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அங்கு விசா ரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, எந்த இராணுவத் தளபதிக்கும் தனிப்பட்ட ரீதியிலோ உத்தியோகபூர்வ மாகவோ வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு வைக்கமுடியாது. ஆனால் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியான பொன்சேகா வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை தொடர்பான தகவல்கள் வெளியாருக்குச் செல்லலாம். இதனால் நாட்டின் ஆள்புல ஒருமைப் பாட்டிற்கும் இறைமைக்கும் அச் சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொன்சேகா அமெரிக்கா சென்றபோது அங்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவரின் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக நாட்டின் இறைமைக்கும் ஆள் புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இது தொடர்பில் சர்வதேச நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி. எஸ். பி. சலுகை தொடர்பில் முன்பு காணப்பட்ட நெருக்கடி நிலை தற்பொழுது கிடையாது.  ஜி.எஸ்.பி. சலுகை மீண்டும் இலங்கைக்கும் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரினிடேட் என்ட் டுபாக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் 2013ல் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பிரேரணையை முன் வைத்தது குறித்து பிரித்தானிய பிரத மருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கை யில் நடத்து வதற்கு சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கின. இது தொடர்பில் சகல நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எமக்கு மொரிஸ் நாடு போட்டியாக வந்த போதும் இறுதியில் 2013ல் இலங்கையில் மாநாட்டை நடத்தவும் 2011ல் அவுஸ்திரேலியாவிலும் 2015ல் மொரிஸிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளினால் நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. நாட்டில் அமைதியான சூழல் காணப் படுகிறது. இந்த ஜனாதிபதித் தேர்தல் சகல இன மத மக்களுக்கும் மிக முக்கியமானதாகும். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சுதந்திரமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வரலாற்றில் முதற் தடவையாக ஐ. தே. க வேட்பாளர் ஒருவரின்றி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் ஜே.வி.பியை நிராகரித்துவிட்டனர். இன்று ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் கூட்டு வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். அவர் பொது வேட்பாளரல்ல. அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எதுவும் கிடையாது என்றார்.

இலவச பாடநூல் விநியோகிக்கும் தேசிய வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில்

அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு 2010ஆம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்களை உத்தியோக பூர்வமாக பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெறவுள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்

அரசசேவை ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவியுயர்வுகளை இடைநிறுத்துக – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

dayananda_disanayake.jpgஜனாதி பதித் தேர்தல் காலத்தில் அரச சேவைகளில் ஆட்சேர்ப்புக்கள், இடமாற்றங்கள், மற்றும் பதவியுயர்வுகள் இடம்பெறுவதை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் ஊடாக விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.