செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தாய்க்கும் அவரது இரு மகன்களுக்கும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது!

கொலை குற்றச்சாட்டு காரணமாக ஒரு தாய் அவரது மகன்கள் இருவர் ஆகியோருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்தததான குற்றச்சாட்டில் எஸ்.உம்மா(வயது45) என்ற பெண்ணுக்கும், அவரது மகன்களான எம்.பைஸால் (வயது 26) ஐ.றிசான் வயது (24) ஆகிய மூவருக்குமே நேற்று (21-07-2010) கல்முனை நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீhப்பளித்தது.

தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து வைத்தியப் பரிசோதனை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் நேற்று (July 20 2010) உத்தரவிட்டுள்ளார். தர்சிகாவின் தாயார் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் தோண்டியெடுத்து கொழும்பிற்கு அனுப்பி சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு நேற்று முன்தினம் (July 19 2010) நடைபெற்ற போது தர்சிகாவின் தாயார் தனது மகள் தற்கொலை செய்யவில்லை அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதவானிடம் மனுவொன்றை கைளித்திருந்தார். அதனைப் பரிசீலித்த நீதவான் சடலத்தை பொலிசார் முன்னிலையில் தோண்டியெடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரண மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.

800ஐ எட்டுவாரா முரளி?

murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை சாதனையை எட்டுவார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது நடைபெறும் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் இன்று வரை 6 விக்கெட்களை வீழ்த்தி மொத்தம் 798 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

murali.jpg

ஓய்வூதிய சட்டங்களில் திருத்தம்

parliament.gifஅரசாங்க ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவரில் தங்கி இருந்த மனைவி, பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதலான சலுகைகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நடைமுறையிலுள்ள ஓய்வூதியச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேற்று பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தன.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டப்ளியு. ஜோன் செனவிரட்ன, விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய நிதியாக (திருத்தம்) சட்ட மூலம் விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதிய திருத்தம் சட்டமூலம் என்பவற்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அமைச்சர் தனதுரையில், அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இறந்தால் அவரது கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதல் சலுகைகளை அனுபவிக்கக் கூடியவகையில் விதவைகள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம், விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம் பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் உயிரிழந்த அரசாங்க ஊழியர்கள், படை வீரர்கள் ஆகியோரின் குடும்பத்தவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் படி உயிரிழந்த அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 21 வயது வரையே ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. புதிய திருத்தத்தின் கீழ் இவ்வயதெல்லை 26 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக மற்றும் சமயா சமய அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய திருத்தத்தின் கீழ் குறித்த அரசாங்க ஊழியர் பத்து வருடங்கள் சேவையாற்றி மரணித்திருந்தால் அவரது கணவருக்கோ அல்லது மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் வழங்கப்படும்.

தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் அரசாங்க நிறுவனங்கள் மூடப்படுவதன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ அரச ஊழியர் ஒருவர் தொழிலை இழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய ஏற்பாட்டின் கீழ் 55 வயது நிறைவடைந்ததும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.

அரசாங்க ஊழியரொருவர் செய்த குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்படுவாராயின் அவரது குடும்பத்திற்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் அரச ஊழியர் செய்த தவறின் பலாபலன்களை அவரது மனைவியோ, குடும்பத்தினரோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காக குறித்த அரச ஊழியர் பத்துவருடம் சேவையாற்றி இருந்தால் அவரது குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும் யுத்தம் காரணமாக உயிரிழந்த படைவீரரின் இளம் வயது மனைவிக்கு தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

அவர் மறு மணம் புரிந்தால் அந்த ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிடு கின்றது. ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ் உயிரிழந்த படை வீரரின் மனைவி மறுமணம் செய்தால் ஓய்வூதியத்தில் அரைவாசித் தொகை கிடைக்கப்பெறும். பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் காரணமாக அரச ஊழியர் ஒருவர் இறந்தால் 55 வயது வரை அவரின் மனைவிக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

55 வயதின் பின்னர் சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே அவரின் குடும்பத்துக்கு வழங்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்க உள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதி அமைச்சர்கள் ஆகியோரின் அந்தரங்க செயலாளர்கள், இணைப்புச் செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோருக்கு 5 வருடங்களின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால் அவர்களின் மறைவின் பின் அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறையை தீர்க்கும் வகையிலும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தில் காணப்படும் சகல நிர்வாக சிக்கல்களும் தீர்க்க இதனூடாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

எந்தச் சூழ்நிலையிலும் இலங்கைத் தமிழரைக் கைவிடமாட்டேன்- கருணாநிதி

kurunanithi.jpgஇலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழுவிடம் உறுதியளித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கருணாநிதியை நேற்று செவ்வாய்க்கிழமை அவரின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே கலைஞர் இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறார்.

“தமிழர்களின் நலன்கள் தொடர்பாக இந்தியாவினதும் தமிழக முதலமைச்சரினதும் தலையீட்டை நாம் கோரியுள்ளோம என்று கருணாநிதியுடனான சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் சம்பந்தன் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று தெரிவித்தது.

கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசு அறிவித்திருந்த தமிழர்களுக்கான புனர்வாழ்வு விடயங்களில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கு விசேட தூதுவர் ஒருவரை அனுப்பிவைக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் கோரியிருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

kurunanithi.jpg

பான் கி மூன் மீது மோசமான குற்றச்சாட்டு

ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

சுவீடனைச் சேர்ந்த கணக்காய்வாளரான இங்கா பிரிட் கடந்த வெள்ளிக்கிழமை உள்மட்ட மேற்பார்வை சேவைகள் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் மீது அசாதாரணமான முறையில் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை முன்வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சிறப்பான பதிவுகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் பான் கீ மூன் வளர்த்தெடுத்திருந்த பிரதிமைக்கு சவாலாக 50 பக்கங்களைக் கொண்ட இங்காவின் அறிக்கை காணப்படுகிறது.

சுற்றாடலை மாசுபடுத்திய 300 பேர் பொலிஸாரால் கைது

சுற்றாடலை மாசுபடுத்திய 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நகர் பகுதி வீதி ஓரங்களில் குப்பைகளை வீசி எறிந்த நபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். நகரங்களின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் 140 பேரைக் கொண்ட விசேட சுற்றாடல் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சிற்றால் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யாகவும் கடமையாற்றுகின்றார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையொப்பமில்லாத ஆவணம் – சபையில் சர்ச்சை

parliament.gifசர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனைகளை ஐ.தே.க. எம்.பி. ஆர். யோகராஜன் நேற்றுக் காலை சபையில் முன்வைக்க முற்பட்ட போது அரச தரப்பிலிருந்து அதற்குக் கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஷ் குணவர்தன போன்றோர் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் கையொப்பமிடாத ஆவணமொன்றைச் சபையில் சமர்ப்பிப்பதற்கு யோகராஜன் எம்.பிக்கு எத்தகைய அதிகாரமோ உரிமையோ கிடையாதென தெரிவித்தனர்.

யோகராஜன் எம்.பி. இதனைச் சபையில் முன்வைத்த போது அவர் முன்னால் அங்கம் வகித்த இ. தொ. கா. வின் சார்பில் கூற்றுக்களைத் தெரிவித்தார். இதன் போது குறுக்கிட்ட இ. தொ. கா. தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஒரு இ. தொ. கா. உறுப்பினரல்ல.  இ. தொ. கா.வின் சார்பில் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கும் உரிமை அவருக்குக் கிடையாதெனத் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை

டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர் பான வேலைத் திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விரிவான அடிப்படையில் துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அடங்கிய வரைவின் பிரதிகளை சகல உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கும் நேற்று வழங்கினார். இந்த வரைவை ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திலும் நிறை வேற்றி அதனடிப்படையில் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணிகளைத் துரித மாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதாவுல்லா உள்ளூராட்சி மன்றத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய உள்ளூராட்சி வாரம் நேற்று ஆரம்பமானது. இதன் நிமித்தம் பத்தரமுல்லையிலுள்ள ஜனகலா கேந்திரவில் நேற்று ஆரம்பமான உள்ளூராட்சி மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பி ட்டார். இதேநேரம் இம்மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாகக் கலந்து கொண்டு டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பாக விசேட உரையாற்றுவார். மாநாடு அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நடைபெறும்.

3ம் நாள் ஆட்டம்: இலங்கை 8/520, இந்தியா 3/140

muralitharan.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையே நடைபெறும் முதலாவது ரெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நிறைவின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 520 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பரனவிதாரண 111 ஓட்டங்களையும் சங்கக்கார 103 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மிதுன் 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நாள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷெவாக் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களுடனும் லக்ஷ்மன் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது