பான் கி மூன் மீது மோசமான குற்றச்சாட்டு

ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

சுவீடனைச் சேர்ந்த கணக்காய்வாளரான இங்கா பிரிட் கடந்த வெள்ளிக்கிழமை உள்மட்ட மேற்பார்வை சேவைகள் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் மீது அசாதாரணமான முறையில் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை முன்வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சிறப்பான பதிவுகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் பான் கீ மூன் வளர்த்தெடுத்திருந்த பிரதிமைக்கு சவாலாக 50 பக்கங்களைக் கொண்ட இங்காவின் அறிக்கை காணப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *