செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

schools.jpgஇரண்டாம் தவணை விடுமுறையின் பின் தமிழ், சிங்கள பாடசாலைகள் இன்று (07) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படும் எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டமும் 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதியும் க. பொ. த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் 2 ஆம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்க ப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டம் இடம்பெற்ற பாடசாலைகள் வருமாறு: கொழும்பு றோயல் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி மற்றும் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயம், களுத்துறை மகா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் வித்தியாலயம், பெண்கள் உயர் பாடசாலை, காலி வித்தியாலோக வித்தியாலயம்.

இவ்வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இ.போ.ச தலைவர் எம். டி. பந்துசேன தெரிவித்தார். இதில் முதற் கட்டமாக நூறு பஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தவணை அடிப்படையில் பணம் செலுத்தி பஸ்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கூறிய அவர் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வீதிகளில் அவற்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை டிப்போக்களில் திருத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் திட்டமொன்று போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 25 பஸ்கள் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று

nallur.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று 7ம் திகதி காலை ஏழு மணியளவில் நடைபெறுகிறது. தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் நாடெங்கும் இருந்து பெருந்தொகையான மக்கள் நல்லூர்க் கந்தன் உற்சவத்துக்கு வருகை தந்திருப்ப தனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை யாழ். மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குடிநீர், மலசல கூட வசதிகள் என்ப வற்றையும் மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் முக்கியமான சில இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியால யத்தில் திருவிழாக் காலத்திற்கான தற்கா லிக பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் விசேட சேவைகளை நடத்துகின்றன.

தென் இலங்கையில் உள்ள பெருமளவு வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஆலய வீதிகளில் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. தாகசாந்தி நிலை யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு

அரசியலமைப்பின் 18வது திருத்த த்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதென இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பினும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது அரச அதிபர்களின் பொறுப்பு

jhon.jpgவடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப்பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியுமென குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

கோஷ்டி மோதலில் தப்பி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி மரணம்

கட்டுநாயக்க பொறியியல் தொழில் நுட்ப நிறுவன மாணவர்களுக்கும் வெளியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறின் போது சிதறி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி இறந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெளியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழு தாக்கியுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் ஏற் பட்ட மோதலில் இரு மாணவர்க ளும் வெளியார் மூவரும் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மோதலின் போது சிதறி ஓடிய கேகாலை மற்றும் கெகிராவையைச் சேர்ந்த இரு மாணவர்களே விபத் தில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டவிரோதமாக தொழில்நுட்ப நிறுவனத்தில் நுழை ந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவ த்துடன் மாணவர்களுக்கு தொடர்பு ள்ளதா என அறிய விசாரணை நடத்தப்படுகிறது.

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

வெள்ளவத்தை மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தவருமான செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கூறியதாவது;

வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு பார்வைக்கோளாறு உட்பட பல நோய்கள் இருப்பதாகவும் அதனால் தான் தனது குடும்பத்திற்குப் பாராமாக இருக்க விரும்பாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவரின் தற்கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக கூட்டமைப்பு இன்று கூடி ஆராய்வு.

TNAநாளை மறுதினம் 8ஆம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதா ஆதரவளிக்காமல் விடுவதா என்பது குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி ஆராய்ந்து முடிவொன்றை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இதே வேளை, அரசாங்கம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி இற்கும் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்ன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அரசமைப்புத் திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கவுள்ள 8ஆம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி கொழும்பில் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமயும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சகல அரச அதிபர்களும் கூடும் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

இலங்கையின் சகல மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்று இன்று (06-09-2010) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதற்காக சகல அரசாங்க அதிபர்களும் நேற்று மாலையே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். இன்று நடைபெறும் இம்மாநாட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவும்  கலந்து கொள்கின்றார்.

இன்று காலை 9 மணிக்கு யாழ். செயலகக் கேட்போர் கூடத்தில் இம்மாநாடு ஆரம்பமானது. இன்றைய மாநாட்டில் அரசாங்க அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அராயப்பட்டு அவற்றைத் தீர்ப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் வாகனங்களின் நெரிசல் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

Jaffna_Trafficயாழ் நகரின் பல வீதிகளில் அதிகளவு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்தில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். நகரின் பிரதான வீதிகளில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கமாறும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வாகனப் பயன்பாட்டளர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Jaffna_Traffic

தற்போது நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதாலும், தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கனங்களும் அதிகரித்துள்ளதாலும் யாழ். நகரில் வாகனங்களின் நெரிசல் என்றுமில்லாதவாறு அதகரித்துள்ளது. இதனால்  விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.