கட்டுநாயக்க பொறியியல் தொழில் நுட்ப நிறுவன மாணவர்களுக்கும் வெளியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறின் போது சிதறி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி இறந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.
தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெளியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழு தாக்கியுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் ஏற் பட்ட மோதலில் இரு மாணவர்க ளும் வெளியார் மூவரும் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மோதலின் போது சிதறி ஓடிய கேகாலை மற்றும் கெகிராவையைச் சேர்ந்த இரு மாணவர்களே விபத் தில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டவிரோதமாக தொழில்நுட்ப நிறுவனத்தில் நுழை ந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவ த்துடன் மாணவர்களுக்கு தொடர்பு ள்ளதா என அறிய விசாரணை நடத்தப்படுகிறது.