செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மே 06 – உள்ளூராட்சி சபைத் தேர்தல் !

மே 06 – உள்ளூராட்சி சபைத் தேர்தல் !

 

இலங்கையிலுள்ள 337 உள்ளூராட்சி சபைளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமானது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் 274 பிரதேசசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, தற்போது அதற்கான திகதி மே 06 தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் !

 

இளையோரை மீட்டெடுக்க சனசமூக நிலையங்கள் மீண்டும் உத்தவேகத்துடன் இயங்க வேண்டும் என அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை சமயாசாரப்படி திறந்து வைக்கும் நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், இளையோரை சமூகப் பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள்தான் முன்னெடுக்க முடியும். என ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.

 

எட்டு மில்லியன் இலங்கை ஊழியப் படையில் பத்து வீதம் பேரே வரி செலுத்துகிறார்கள் ! 

எட்டு மில்லியன் இலங்கை ஊழியப் படையில் பத்து வீதம் பேரே வரி செலுத்துகிறார்கள் !

 

சுமார் 8 மில்லியன் பேர் ஊழியப் படையில் இருந்தபோதும், சுமார் 800,000 பேர் மட்டுமே வரி வலையின் கீழ் வருவது ஏன் என்று அரசாங்க நிதி பற்றிய குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் மார்ச் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. அதில் தனிநபர் வருமான வரிக்கான (PIT) விடுப்பை ஆண்டுக்கு 1.2 மில்லியன் ரூபாவிலிருந்து 1.8 மில்லியன் ரூபாவாக திகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் ! 

கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் !

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பொ.ஐங்கரநேசன், தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி மற்றும் கே.வி.தவராசா தலைமையிலான ஜனநாயக தமிழரசு கூட்டணி ஆகியன தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது சகலரும் அறிந்ததே.

இக்கூட்டணி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒருதலைப் பட்சமாக எந்த விதமான நியாயமும் இல்லாமல் கொள்கையளவிலே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற பேச்சுவார்த்தையை தமிழரசுக் கட்சி முறித்ததாக ஆதங்கம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆசனம், பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய எம்மைப் பலப்படுத்துவதுதான் காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்புதிய கூட்டணி தொடர்பில் குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன், “இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !

சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !

 

அரசியலை விட்டு விலகினால் 2009ஆம் ஆண்டு இருந்த அரசியலுக்கு உள்ளேயே தமிழ் மக்கள் மீண்டும் சென்று விடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் தனக்கு சிங்களவர்களால் ஆபத்து இல்லை சிறுபான்மை இனத்தால் தான் பாதிப்பு என்று மறைமுகமாக முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் பேசிய அவர், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் என்னால் வழக்கு தொடர முடியும். ஏனெனில் 77 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் பேச விடாது தடுத்துள்ளார். என்.பி.பி அரசாங்கத்திற்கு நான் உயிரோடு இருப்பதில் பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக சிங்கள மக்களினாலோ அல்லது வேறு நபர்களாலோ எனக்கு பிரச்சினை இல்லை. சிறுபான்மை இனத்தவர்களாலேயே அதிக பிரச்சினை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இனியாவது அர்ச்சுனா தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம் , நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 “அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !

“அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !

அண்மையில் எம்.பி அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் பெண் ஒருவரை பெயர் குறிப்பிட்டு விபச்சாரி என சுட்டியது தொடர்பில் மௌபிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், யாழ் மையவாத, சாதிய, சனாதன, பழைமைவாத, ஆணாதிக்க சீழ் பிடித்த மூளையின் அசிங்கமான சிந்தனைமுறை வெளியே துப்பிய புழுக்களாக இந்த சொற்களை நான் கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்ட அருண் சித்தார்த், விபச்சாரி என்னும் சொல் காட்டுமிராண்டிகளின் சொல். ஏனென்றால் அது ஆணைக் குற்றவாளியாக அறிவிப்பதில்லை. அச்சொல்லுக்கு ஆண்பால் கிடையாது. ஒரு விளிம்புநிலைப் பெண்ணை அவளது பெயர் விலாசத்துடன் இந்நாட்டின் உயரிய சபையான சட்டவாக்கும் சபையில் முழு உலகும் பார்க்க விபச்சாரி என்று சொல்லும் தைரியத்தை இந்த நபருக்கு வழங்கியது யார் அல்லது எது? மன வலிமை குறைந்த ஒரு சமான்ய பெண்ணாக இருந்தால் அவளைத் தற்கொலைக்குத் தூண்டும் மிக மோசமான (statement) பேச்சு இது. அவளை நேசிக்கும் சகோதரர்களும் ஆண்களும் இருந்தால் இதைச் பேசிய நபரைக் கொலை செய்யத் தூண்டும் மிகக் கேவலமான கீழ்த்தரமான பேச்சு இது. என தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

அரசியல் கைதிகள் விடுவிப்பு! காணிகள் விடுவிப்பு ! வீதிகள் விடுவிப்பு ! நாளையே நடக்கலாம் ! அமைச்சர் சந்திரசேகர் !

 

யாழ்ப்பாணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாழ் பல்கலைக்கழக திட்டமிடல் துறை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் அறிவிக்கப்பட்டுள்ளார். கபிலன் ஏற்கனவே யாழ் மாநகரின் வடிகாலமைப்புத் தொடர்பில் ஆய்வுகளைச் செய்து வந்தவர். அவை தொடர்பில் முன்னைய அரசாங்கங்களிடம் அவற்றை சமர்ப்பித்தும் அவை கருத்திலெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திட்டமிடல் தொடர்பில் புலமை மிகுந்த ஒருவரை என்.பி.பி முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளமை சாலப் பொருத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் வேட்பாளர் கபிலன், என்.பி.பியின் வேட்புமனுக்கள் யாழில் அனைத்து இடங்களிலும் எவ்வித விலக்கலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டமை நாங்கள் எங்களுடைய மக்களுக்காக எவ்வளவு பொறுப்புணர்வோடு இவற்றைத் தயாரித்துள்ளோம் என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர் வடக்குக்கு அரசாங்கம் பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் நாங்கள் கிராமம் கிராமமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் காணிகள் விடுவிப்பு மற்றும் மக்களுக்கு வழங்கிய விரைவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

போட்டியிடாமலேயே மண் கவ்விய ஊசி, சங்கு , மான் குறூப் – யாழ் உட்பட வடக்கு கிழக்கில் வீடா ? திசைகாட்டியா ?

 

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல முன்னணி தமிழ்தேசிய மற்றும் அரசியல்வாதிகளின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலேயே மண் கவ்வியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊசி கட்சி சார்பாக களமிறங்கிய சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் பருத்தித்துறை நகரசபை தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் அனைத்து சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர் கௌசல்யா நரேன் வேட்புமனுவில் கையெழுத்திடாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த பணம் அனுப்புமாறு அர்ச்சுனா கோரியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் பலர் அவருக்கு பணம் அனுப்பியிருந்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பணம் மீள அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் அர்சுனா அவற்றை புலம்பெயர் தமிழர்களுக்கு திருப்பி அனுப்புவாரா எனவும் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு யாழ்.மாநகர சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை பிரதேச சபையிலும் அவர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் யாழ் மாநகர சபை உட்பட பெருமளவான இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபை, காரைநகர் பிரதேச சபை, ஊர்காவற்றுறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நிராகரிப்பு தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உயர் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள அதேவேளை தமிழ்க் கட்சிகள் சார்பாக நான் நீதிமன்றில் ஆஜராக மாட்டேன் என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்கள் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தி, தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளினது வேட்பு மனுக்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே யாழில் திசைக்காட்டியா..? வீடா என்ற போட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !

விஜிதாவின் மரணத்துக்கு பின் நின்றவர்! பாலியல் லஞ்சம் கோருவோர்! விபச்சாரி என்று பட்டம் வழங்குபவர்! இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் தலைவர்கள் !

 

தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டில் தீயில் எரிந்த விஜிதா மரணத்தில் இதுவரை துலங்காத நீதி. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவருமான சோ. சுகிர்தன் வீட்டிற்குள் தீ மூட்டி இளம் குடும்பப் பெண் ஒருவர் 16 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார். இறந்தவர் யாழ் குப்பிளானைச் சேர்ந்த 36 வயதுடைய விஜிதா என்றழைக்கப்படும் 10 வயது பெண் குழந்தையின் தாயார் ஆவார். விஜிதா யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என்றும் கூறப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று. தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் சுகிர்தனின் வீட்டுக் சென்று விஜிதா சுகிர்தனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டு எரிந்ததாகவும். தீயை அணைத்த பின்னர், அவர் கிணற்றினுள் குதித்ததாகவும் கூறப்பட்டது. தீக் காயங்களுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜிதா, சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

விஜிதா, சுகிர்தன் வீட்டில் தீ மூட்டிய போது சுகிர்தன் தனது வீட்டிற்குள் சென்று பூட்டிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. விஜிதா மரணத்திற்கான காரணம் இன்று வரை துலங்கவில்லை. குடும்பத்தைப் பிரிந்த தனியே வாழும் சுகிர்தன் , விஜிதா குடும்பத்துடன் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்பட்டது. விஜிதாவும் கணவரைப் பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுகிர்தன் விஜிதா இருவரும் நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜிதா சுகிர்தனை தன்னை திருமணம் முடிக்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுகிர்தன் வழமையாகவே விஜிதா வீட்டிலேயே உணவருந்தி வந்ததாகவும் கூறப்பட்டது. சுகிர்தன் திடீரென விஜிதாவுடனான தொடர்பை குறைக்கவும் விடையம் பெரிதானதாகவும் கூறப்பட்டது.

அதேநேரம் சுகிர்தாவின் மரணத்தில் சுகிர்தனின் 21 வயதான பொலிஸ் பயிற்சியில் இருக்கும் மகன் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. விஜிதாவின் பெற்றோர் தங்களுடைய மகள் சுகிர்தனின் வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டினர். விஜிதாவின் தற்கொலை அல்லது கொலை சுகிர்தன் வீட்டில் இடம்பெற்றதால் சுகிர்தன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் விஜிதாவின் மரணம் தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டு சுகிர்தன் வெளியில் வந்துவிட்டார்.

இந்தவிடயத்தில் தமிழரசுக் கட்சி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் இன்று வரை செயற்படும் சோ. சுகிர்தன் இந்தவிடயத்தில் விளக்கங்கள் எதுவும் மக்களுக்கு வழங்கவில்லை. சோ. சுகிர்தன் நடக்கவிருக்கிற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் வலதுகரமாக செயற்படுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் 2013 மேமாதம் 13 ஆம் திகதி ”பெண்கள் சந்திப்பு” என்ற சூம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப்பேசுவோம்’ என்ற தலைப்பில் விஜிதாவிற்கு பணியிடத்தில் சுரண்டல் தொடர்பிலும் விஜிதாவின் மரணத்தின் பின்னணியில் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆண் தப்பிக்கவிடப்பட்டமை தொடர்பிலும் பேசப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் உள்ளூராட்சிசபை அலுவலகருமான சுரேகா பரமநாதன் விஜிதாவை மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு குரல் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதே சுரேகா பின்னர் எம். ஏ. சுமந்திரனின் சிபாரிசில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

ஒருபக்கம் வீட்டு வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்திரிக்கின்றன. யாழ் வேளாள ஆண்மைய அரசியலை முன்னெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளாலும் கூட பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.

இதன் உச்சகட்டமாகத் தான் எம்பி இராமநாதன் அர்ச்சுனா கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சாளினியை, விபச்சாரி’ என பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிந்தமையை குறிப்பிடலாம். எம்பி அர்ச்சுனா அத்தோடு நிற்கவில்லை தன்னை விமர்சித்த சங்கவி என்னும் பெண் ஊடகவியலாளரையும் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான ஸ்வதிகா அருளிங்கம் என்ற இன்னுமொரு பெண்ணையும் மிகக் கீழ்த்தரமான முறையில் விமர்சித்திருந்தார். இந்த விடயங்களுக்காக எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற சாபாநாயகரின் கண்டனைங்களையும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த விடயத்தில் எம்பி அர்ச்சுனாவை கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. அதேநேரம் எம்பி சிவஞானம் சிறிதரன் கூட தனது சொந்த ஊர்ப் பெண்ணான வட்டக்கச்சி சாளினியின் பக்கம் நிற்கவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் எம்பி அர்ச்சுனா இராமநாதனை சபாநாயகர் மன்னித்து, அர்ச்சுனா மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை வாபஸ் பெற கோரிக்கை விடுத்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவக்கு போட்டியிடும் இருவரில் ஒருவரான எம். ஏ சுமந்திரன் விஜிதாவின் மரணத்திற்கு காரணமான சோ. சுகிர்தனை தனது வலதுகரமாக வைத்துள்ளார். மற்றையவர் சி. சிறிதரன் உதவி கேட்டு கட்சி அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் வேழமாலிகிதனை வலதுகரமாக வைத்துள்ளார். அப்படியிருக்க எம்பி சிறிதரன் எம்பி அர்ச்சுனாவிற்கு வக்கலாத்துக்கு போனதில் ஆச்சரியமில்லை.

இதெல்லாம் ஒருபுறம்மிருக்க உள்ளூராட்ச்சித் தேர்தலில் எம்பி அர்ச்சுனாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எம்பி அர்ச்சுனாவோ தங்களுடைய வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு அளிக்கும்படி கேட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனாவோடு கூட்டணிக்கு தயார் என சமிக்ஞை காட்டுகிறார். கஜேந்திரகுமாருக்கு மட்டும் ஏன் தமிழ்ப் பெண்கள் விடயத்தில் அக்கறை இருக்கப் போகிறது. எல்லோரும் ”யாழ்ப்பாண வெள்ளாள ஆண்மைய “குட்டையில் ஊறிய மட்டைகளே” ஆகும்.

உள்ளூராட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 25 % பெண்களுக்கு வேட்புமனுக்களில் இடம் அளிக்க வேண்டும் சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த பிரதான தமிழ்க்கட்சிகள் பெண்கள் யாரையும் கூட்டிவந்ததாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பெண்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்கவும் , பயிற்சி பெறவும் சிறந்த சந்தர்ப்பம். தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஆண்மைய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான பெண்களை இழிவுசெய்யும் இசைப்பிரியா போன்ற இராணுவத்தால் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண்களுக்கு எப்படி நீதி பெற்றுக் கொடுப்பார்கள்?

அந்த வகையில் பெண் வாக்காளர்கள் தமக்காக குரல் கொடுக்க கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். அதேநேரம் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுடன் சமரச அரசியலில் ஈடுபடும் மற்றும் துணை போகும் ஐக்கிய மக்கள் சக்தி உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண் அரசியல்வாதிகளையும் ஆதரிக்க கூடாது.

கள்ள மணல் ஏற்றிய – டிப்பரைக் காப்பாற்றிய கார் – கிளிநொச்சியில் சம்பவம் !

கள்ள மணல் ஏற்றிய – டிப்பரைக் காப்பாற்றிய கார் – கிளிநொச்சியில் சம்பவம் !

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பரை மடக்கிப் பிடிக்க முயற்சித்த சாவகச்சேரி பொலிஸாருக்கு, வீதியில் சென்ற கார் ஒன்று இடையூறு விளைவித்தது.

தர்மபுரம் – கல்லாறு பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு (18) சட்டவிரோதமாக மணலை ஏற்றிவந்த டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் துரத்திச் சென்றனர். இதன்போது பொலிஸாரது வாகனத்துக்கும், மணல் ஏற்றிவந்த டிப்பருக்கு இடையே குறுக்கு மறுக்காக வீதியில் பயணித்த கார் ஒன்று டிப்பரை தப்பிக்க வைக்க முயற்சித்தது.

இந்நிலையில் அந்த டிப்பர் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றது. குறித்த காருக்கும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பருக்குமிடையே தொடர்பு காணப்படும் என சந்தேகிக்கப்படுகிறது.