செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’- சிவநாதன் கிஷோர் எம்.பி.

kishore.jpg“எனக் கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். அதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவிலும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக்கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,இதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.

எமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன். கொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்டத்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.

நான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன். தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.  நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக்களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.

அதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

சவுதியில் கொல்லப்பட்ட 5 இலங்கையருக்கு நஷ்டஈடு தலா மூன்று இலட்சம் வழங்க முடிவு

சவூதி அரேபியாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் கொல்லப்பட்ட ஐந்து இலங்கையர்களினதும் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்க உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

கடந்த வாரம் இடம் பெற்ற பஸ் விபத்தில் 5 இலங்கையர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு இறந்தவர்கள் சார்பாக பணியகத்தினூடாக காப்புறுதி நஷ்டஈடும் சவூதி அரேபியாவில் இருந்து நஷ்டஈட்டுத் தொகையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இறந்த ஐவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினூடாக பதிவு செய்தே சவூதி அரேபியா சென்றுள்ளனர். இவர்களது சடலங்களை கொண்டுவருவது குறித்தும் இறுதிக் கிரியைகளை நடத்துவது குறித்தும் பணியகம் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.

20-20 கிரிக்கெட்: மேற்கிந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் டுவென்டி 20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மேற்கிந்திய அணிகள் மோதியன.

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 ஓவராக குறைக்கப்பட்டு 80 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கு 80 ஓட்டங்கள் என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 8.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. சர்வான் சந்திரபால் ஜோடி அற்புதமாக ரன் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். சர்வானுக்கு (19*) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டில் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருக்கும் இளைஞன்

பிரிட்டனில் ஹீலி என்ற இடத்தில் பெண்கள் மீது பாலியல் இம்சையை மேற்கொண்ட நான்கு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட அச்சல தத்தலாகே என்ற இலங்கை இளைஞனை நாடுகடத்துமாறு பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில் ஹீலி பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று தடவைகள் 27 வயதுடைய இந்த இளைஞன் பாலியல் இம்சைக் குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் நடந்துவரும் போது இவர் பாலியல் ரீதியான சேஷ்டைகளை புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. நியூ ஹாசில் எனுமிடத்தில் ஹீலி வீதியில் வசிக்கும் அச்சல டிசம்பர் 23 இல் தேவாலயம் அருகே 2 பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் கார் தரிப்பிடத்திற்கு செல்லும் படிக்கட்டில் 17 வயதுடைய பெண்ணொருவர் மீது அங்க சேஷ்டை மேற்கொண்டுள்ளார். பிரதிவாதியான அச்சல ஹீலி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணி கற்கைநெறியை பயின்று வருகிறார். 4 பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டுகள் இவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நீதிபதி ரொபர்ட் ரிவர் ஜோன்ஸ், அச்சலவுக்கு 22 மாதகால சிறைத்தண்டனை வழங்கியதுடன் அவர் தன்னாலான விதத்திலே நாடுகடத்தப்பட உள்ளார் என தெரிவித்திருக்கிறார். அத்துடன், 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளிகள் டாப்பில் அவர் கைச்சாத்திட வேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். .

டெங்கு நோயால் நேற்றுவரை 134பேர் பலி; 9400பேர் பாதிப்பு

dengu_1.gifடெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரியான மனோரி கீத்தாஞ்சலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சல் காரணமாக நேற்று வரையும் 134 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 9400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.இக்காய்ச்சலுக்கு மே மாதத்தில் மாத்திரம் நாலாயிரம் பேர் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கண்டி, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கேகாலை போன்ற 12 மாவட்டங்களில் இக்காய்ச்சல் தொடர்ந்தும் தீவிர நிலையில் காணப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் காரணத்தினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நுளம்புகள் பரப்புகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக ரவைகள் கண்டுபிடிப்பு

மட்டக் களப்பு, தோணித்தோட்டமடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டெடுத்ததாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் 23 வது படைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவ்வளவு தொகை ரவைகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை மட்டக்களப்பு, நரக்கமுல்ல, இழுப் படிச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து இரு கிளேமோர் குண்டுகள், நான்கு கைக்குண்டுகள் உட்பட ஒரு தொகுதி வெடி பொருட்களையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேநேரம் முல்லைத்தீவு தாளம்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 எம். எம். கைக்துப்பாக்கிக்குரிய 99 ரவைகளையும், முல்லைத்தீவு, அம்பகாமம் பிரதேசத்திலி ருந்து ஜி-3 ரக துப்பாக்கிக்குரிய 31 ரவைகளையும், விஸ்வமடு பிரதேசத்திலிருந்து இரு ஆர். பி. ஜி. குண்டு களையும், மேம்படுத்தப்பட்ட இரு குண்டுகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றார்.

கல்வியியல் கல்லூரியில் பயிற்சிபெற்ற 295 பேருக்கு கிழக்கில் நியமனம்

teacher.jpgகல்வி யியல் கல்லூரிகளில் பயிற்சிகளை நிறைவு செய்த மூவாயிரம் மாணவர்களில் 295 பேருக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.  கல்வியியல் கல்லூரியின் இறுதிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கமைய நியமனம் வழங்கப்படுமெனவும் ஏனைய நியமனங்கள் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் 7 வருடங்களுக்கு அதிகமாக சேவையிலீடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது சொந்த இடங்களுக்கு இடமாற்றங்களை வழங்கும் முகமாகவே இந்நியமனங்களை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த கல்வியமைச்சின் செயலாளர் மேல் மாகாணசபையைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி இறுதிப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு மேல் மாகாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் நியோமல் பெரேராவை ஐ.தே.கட்சியில் இருந்து நீக்கத்தடை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி மீன்பிடித்துறை அமைச்சருமான நியோமல் பெரேராவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கடந்த 2004 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 16 பேர் ஆளும் தரப்பினருடன் சேர்ந்த போது இவரும் சேர்ந்து கொண்டார். மே 28 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரதியமைச்சர் நியோமல் பெரேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியா விஜயம்

11edu-min.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தலைமையிலான பரீட்சைத் திணைக்களக் குழுவொன்று வவுனியாவுக்குச் செல்லவுள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பரீட்சைகள் ஆணையாளர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியாவுக்குச் செல்லவுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் கல்விய மைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில், வவுனியாவிலிருந்து இடம்பெயர் ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரப்பரீட்சையை அங்கு நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கென கொழும்பிலிருந்து றோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி போன்ற உயர் கல்லூரிகளிலிருந்து தேர்ச்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சையும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்தப்பட வுள்ளதால் அப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைச் சந்தித்தல் உட்பட அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக மேற்படி குழுவினர் வவுனியாவிற்குச் செல்லவுள்ளனர். இவர்களுடன் கொழும்பிலிருந்து ஆசிரியர் குழுவொன்றையும் அனுப்பி அம்மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆராயவும், பரீட்சைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுமென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேசத்தின் உதவியை நாடுகிறது அரசாங்கம்

lttepathmnathan.jpg இலங் கையின் வட பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் குமரன் பத்மநாதன் மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இவரைக் கைது செய்வதற்காக சர்வதேசத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

கடந்த ஜனவரி 30 ஆந் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன், குமரன் பத்மநாதனுக்கு புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கே பத்மநாதனை கைது செய்வதற்காக அவர் தொடர்பான பல தகவல்களை சர்வதேச நாடுகளுக்குத் தாம் அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.