மட்டக் களப்பு, தோணித்தோட்டமடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டெடுத்ததாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இராணுவத்தினரின் 23 வது படைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவ்வளவு தொகை ரவைகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை மட்டக்களப்பு, நரக்கமுல்ல, இழுப் படிச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து இரு கிளேமோர் குண்டுகள், நான்கு கைக்குண்டுகள் உட்பட ஒரு தொகுதி வெடி பொருட்களையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.
இதேநேரம் முல்லைத்தீவு தாளம்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 எம். எம். கைக்துப்பாக்கிக்குரிய 99 ரவைகளையும், முல்லைத்தீவு, அம்பகாமம் பிரதேசத்திலி ருந்து ஜி-3 ரக துப்பாக்கிக்குரிய 31 ரவைகளையும், விஸ்வமடு பிரதேசத்திலிருந்து இரு ஆர். பி. ஜி. குண்டு களையும், மேம்படுத்தப்பட்ட இரு குண்டுகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றார்.