எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஹிலாரி-மேனன் சந்திப்பு-இலங்கை குறித்து பேச்சு

hillary-clinton.jpgஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான், தீவிரவாதம், தலிபான்களின் பரவல், இலங்கை பிரச்சனை ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் மேனன். அதிபர் ஒபாமா அரசு பதவியேற்ற பின் இந்திய மூத்த அதிகாரி ஒருவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒபாமாவை சந்திக்கும் மன்மோகன்:

இதற்கிடையே வரும் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பங்கேற்கவுள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுவார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள மன்மோகன் முதலில் இக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இதில் பிரதமர் பங்கேற்பது நிச்சயம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உலக உணவுத் திட்டம்’ வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு பிஸ்கட் புலிகளிடம்.

sl-army.jpgமுல்லைத்தீவு சாலைப் பிரதேசத்தில் படையினருடனான மோதலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து உலக உணவுத்திட்ட நிறுவனம் வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட் ஒன்றை படையினர் கண்டெடுத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவரிடமிருந்து ரி. 56 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களும் மூன்று வரைபடங்களும் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.01.2008 இல் மதவச்சி சோதனை முகாமில் வவுனியா நோக்கிச் சென்ற லொறியொன்றில் தேடுதல் நடத்திய பொலிஸார் 39000 கிலோ கிறேம் அதி உயர்ந்த போஷக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட்டுக்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பிஸ்கட் தொகைகள் புலிகளைச் சென்றடைந்திருக்கலம் என்ற சந்தேகம் இப்பேது ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகளாரின் முன்மாதிரி எமக்கு எடுத்துக்காட்டாகும் – மீலாத் தின செய்தியில் பிரதமர்

pmsrilanka.jpg‘சமாதானத்தின் பக்கம் முழுமை யாகத் திரும்புங்கள்’ என்ற அல்- குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப சகோதர த்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்ந்து காட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எமக்கோர் எடுத்துக் காட்டாகும் என பிரதமர் ரத்ன சிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாதுன் நபி விழாவின் நிமித்தம் விடுத்துள்ள செய்தியிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அச்செய்தியில் மேலும் கூறப்பட்டிரு ப்பதாவது:- இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் மாற்று மதத்தலைவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வழி வகுக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நீங்கி அமைதி, சமாதானம் ஏற்படவென முஸ்லிம்கள் இந்நாளில் பிரார்த்த னையில் ஈடுபட வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களின் வழி காட்டல்களை எடுத்து நடப்பதன் மூலம் மனிதா பிமானமும் சுபீட்சமும் நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழு ப்ப முடி யும் என்றும் அச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி முனைப்புப் பெறும் போது ஆயுதங்கள் தாமாகவே கீழே விழுவது நிச்சயம் – ஜனாதிபதி

mahinda.jpgபாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு கபினட் அந்தஸ்தற்ற அமைச்சராக நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெறுவதற்கு சற்று முன்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த மேலும் இரண்டாயிரம் பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரனுடன் மேற்படி இரண்டாயிரம் பேரும் ஜனாதிபதியிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஏ. எச். எம். பெளஸி, டி. எம். ஜயரட்ன, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்துவப் பத்திரத்தை வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்ததாவது :- அபிவிருத்தி முனைப்புப் பெறும் போது ஆயுதங்கள் தாமாகவே கீழே விழுவது நிச்சயம். ஆயுதந்தாங்கும் துன்பகரமான ஒரு நாடு இனியும் நமக்கு வேண்டாம். அமைதி சுபிட்சம் சமத்துவத்துடன் அச்சம், சந்தேகமின்றி ஒருதாய் மக்களாக சகல இன, மத மக்களும் வாழும் நாட்டை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்.

கிழக்கு மாகாணம் தூரமாக இருந்த போதும் அப்பிரதேச மக்கள் மனதால் எம்முடன் நெருக்கமாகவே உள்ளனர். அதை நான் அறிவேன். வட பகுதி மக்களும் அவ்வாறே உள்ளனர். தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதியதல்ல. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ பெருமளவு வாக்குகளைப் பெற்ற தொகுதி யாழ்ப்பாணமே.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் மக்களுடன் நெருக்கமான கட்சி. கிழக்கு மக்களின் சிறந்த தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இரண்டாயிரம் பேர் இன்று இக்கட்சியில் இணைந்துள்ளனர். இம் மக்களை நாம் மனதார வாழ்த்தி வரவேற்கிறோம். விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் முக்கிய பொறுப்பொன்றையும் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கிழக்கு மாகாணம் எவ்வாறிருந்தது என்பது சகலருக்கும் தெரியும். அம் மக்கள் எதிர்காலமற்றவர்களாகவே வாழ்ந்தனர். அந்நிலை மாற்றமடைந்து இன்று கிழக்கு மாகாணம் மேல் மாகாணத்தைப் போன்று முன்னேற்றமடைந்து வருகிறது. ‘கிழக்கின் உதயம்’ கிழக்கை விரைவான அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றது என்பதை இம்மக்களின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் புரிந்துகொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கிழக்கின் உதயம் போன்றே வடக்கின் உதயமும் விரைவில் நடைமுறைக்குவரும். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து வடக்கு மக்களும் விடுவிக்கப்படும் காலம் வெகு தூரத்திலில்லை. இன்று நாளையே அது இடம்பெறலாம்.

கிழக்கில் சிறந்த நிர்வாகம் இன்றுள்ளது. கடந்த மூன்று வருட காலத்தில் 300 பேர் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அங்குள்ள தமிழ் இளைஞர்கள் மேலும் பொலிஸில் இணைத்துக்கொள்ள ப்படவுள்ளனர். இதற்கு வசதியாக மட்டக்களப்பு, கல்லடி தமிழ் பொலிஸ் பயிற்சி நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அபிவிருத்தியை நோக்குகையில் கிழக்கிலேயே அதிகளவு அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது.

தற்போது நாட்டின் முற்போக்கு கட்சிகள், அமைப்புகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே இணைந்து கொண்டுள்ளன. தமிழர், முஸ்லிம்கள், சிங்களவரென நம் அனைவரினதும் தாய்நாடு இலங்கை. இது எமது நாடு இந்நாட்டில் பயமின்றி, சந்தேகமின்றி வாழ சூழல் ஏற்படுத்தப்படும். இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும். உங்கள் எதிர்காலம் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால த்தையும் சுபிட்சமானதாக நாம் இணைந்து உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உலக பொருளாதார நெருக்கடியை தெற்காசியா எதிர்கொள்வது எப்படி?

market-share.jpg
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய குறுகிய, நீண்டகால நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உலகபொருளாதார நெருக்கடியிலிருந்தும் தெற்காசிய நாடுகள் குறிப்பாக இலங்கை, இந்தியா ஆகியவை தாக்குப்பிடிக்க முடியுமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கி இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடி மோசமடைகையில் மூலதனத்தில் பாதிப்பும் பொருட்களின் விலைகளில் தாக்கமும் ஏற்படும் அத்துடன் ஏற்றுமதியில் வீழ்ச்சியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் நிதி குறைவடைவதும் ஏற்படும். இந்த விளைவுகளை தெற்காசியா எதிர்கொள்ள நேரிடும் என்று “உலக பொருளாதார பின்னடைவு தெற்காசியாவில் ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்காக குறுகியகால நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன நாணயக்கொள்கையில் தளர்வு, நிதி அதிகரிப்பு திட்டங்கள் இந் நடவடிக்கைகளில் அடங்கும். அதேசமயம் வட்டி வீதக்குறைப்புக்கு இன்னமும் இடம் இருக்கின்றது. குறிப்பாக இந்தியா, இலங்கை நாடுகளில் வட்டி வீதக்குறைப்புக்கு இடமுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள பணியாளர்கள் உள்நாட்டுக்கு பணத்தை அனுப்புவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டும்.

விசேட சேமிப்புக் கணக்குகள் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டும். தமது நிதி நடவடிக்கைகளை ஸ்திரமானதாக வைத்திருக்க இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் தமது நிதிப்பற்றாக்குறைகளை தெற்காசிய நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது. தமது பொருளாதாரத்தை வெவ்வேறானதாக விரிவுபடுத்துவதும் உள்சார் கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிப்பதுடன், பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகத்தையும் விரிவுபடுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் சில நாடுகள் நெருக்கடி தொடர்பாக ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே வெளிப்படுத்திக் காட்டுகின்றன. மூலதனப்பாய்ச்சல் தொடர்பாக மோசமான பாதிப்பு குறித்து அவை வெளிப்படுத்துவது குறைவானதாகவே உள்ளது. தெற்காசியாவில் 45 கோடி மக்கள் நாளொன்றுக்கு 1.25 டொலரிலேயே உயிர் வாழ்கின்றனர். ஆதலால் பொருளாதார வளர்ச்சி விடயத்தில் தளர்வான அணுகுமுறையானது கவலைக்கு காரணமாகிவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருகிசோ குரூடோ தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களின் பின் குடாநாட்டில் மழை

climate.jpgயாழ். குடாநாட்டில் கடந்த மூன்று மாத காலமாக நிலவி வரட்சிக்குப் பின் நேற்றுக் காலை நல்ல மழை பெய்துள்ளது. சுமார் இருபது மில்லிமீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக குடாநாட்டின் வெப்பநிலை முப்பத்திநாலு சென்றிகிறேற் ஆக பதிவாகியிருந்தது.

குடாநாட்டில் நல்ல மழை பெய்திருப்பதால் விவசாயிகள் சிறுதானிய செய்கையில் ஈடுபட வாய்ப்பு உருவாகியிருப்பதாக விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது. மிளகாய், புகையிலை, வெங்காயம், மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் பெய்துள்ள மழை பெரும் வரப்பிரசாதமாகும். குடாநாட்டில் மழைவேண்டி ஆலயங்களில் விஷேட பூஜைகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதர் சிங்கை அமைச்சர் இராதாகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

vkadan.jpgபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட ஆனந்தவிகடன் புத்தகப் பிரதிகளை யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் அனுப்பியதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதர் சிங் மற்றும் அவரின் உதவியாளர் எஸ்.சுதர்சன் ஆகியோரை அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்தியாவில் அச்சிடப்படும் குறித்த புத்தகத்தில் புலிகள் அமைப்பின் படங்கள் மற்றும் செய்திகள் என்பன வரையப்பட்டிருந்தது அதனை விமானம் மூலம் யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு திரும்பியபோது கைது செய்யப்பட்ட இவர் கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரின் விடுதலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியிருப்பதாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு தமிழ்க்கூட்டமைப்பு வேண்டுகோள் – உலக நாடுகளிடம் 4 கோரிக்கைகள் முன்வைப்பு

gajenthiran.jpg
தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அனைத்துலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2,150 பேர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை கொல்லப்படுவதாகவும் கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னிப் பெருநிலப் பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1015 தடவை இடம்பெயர்ந்து இருப்பிடம் இன்றி மரநிழல்களிலும் காடுகளுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.

இடைவிடாத தாக்குதல்களுக்கு அஞ்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 3,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் மாத்திரமே வன்னிக்குள் இடம்பெயர்ந்திருப்பதாக கூறுகின்றது.

அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை செய்துவருகின்றது.உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். இங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுகின்றது.

வன்னிப் பிரதேசங்களுக்கு அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாகக் கூறியபோதும் மிகவும் குறைந்தளவிலான பொருட்களே இங்கு அனுப்பப்படுகின்றன.

வன்னியிலுள்ள மருத்துவமனைகள் எல்லாம் படையினரின் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. மாத்தளன் மருத்துவமனை இயங்குகின்றது. அதுவும் சத்திர சிகிச்சை வசதிகள், வெளிநோயாளர் வசதிகள் எதுவும், மருந்துகள், மருத்துவர்கள் இல்லாத நிலையில் இயங்குகின்றது.

எந்தவித வசதிகளும் இன்றி தற்காலிகமாக புதுமாத்தளன் பகுதியில் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. அதனை நம்பித்தான் 3,30,000 மக்கள் வன்னியில் வாழ்கின்றனர்.

ஆகவே நான்கு கோரிக்கைகளை அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக முன்வைக்கின்றோம். மனித அவலங்களைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துலக நாடுகள் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வன்னியில் உள்ள 3,30,000 மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் மருந்துப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன் மக்கள் தங்கியிருப்பதற்கான கூடாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர் குழுவும் மற்றும் அனைத்துலக மனித நேய அமைப்புகளும் மக்களுடன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு உள்ளூர், அனைத்துலக ஊடகங்கள் சென்று உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இடமளிக்கப்படவேண்டும்.

அனைத்துலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையானால் பெரும் மனித அவலங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் என்றுதான் கருதவேண்டிய நிலை ஏற்படும் என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் உணவு பொருட்கள் 142 தொன் இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலை திரும்பியது

ltte_attack.pngவன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஒருபகுதி அன்று மாலையே இறக்கி கரை சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உணவுப் பொருட்கள் இறக்கப்படாமலே அந்த கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு திரும்பியது.

அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்தியதாகவும், அதனாலேயே அந்த கப்பல் உணவுப்பொருட்களை தரையில் இறக்காமல் திருகோணமலைக்கு திரும்பியதாகவும் இலங்கை இராணுவத்தின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
 

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை – மீலாத் செய்தியில் ஜனாதிபதி

mahinda.jpgஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலுமுள்ள தமது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூருவதை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களிடம் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் இத்தினம், ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி மிக முக்கியமான ஒரு சிறந்த சமய கலாசார பாரம் பரியத்தைக் கட்டியெழுப்பி ஆய்வு மற்றும் அறிவியல் சிந்தனைகளின் அபிவி ருத்திக்கு வித்திட்ட முஹம்மது (ஸல்) அவர்களுடைய போதனைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளின் வழி யில், இஸ்லாம் மனித சமூகத்தை சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றின்பால் வழி காட்டி அழைத்துச் செல்வதுடன் இன்று உலகெங்கிலும் பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் நிராகரித்து அமைதியும் அகிம்சையும் நிறைந்ததொரு சிறந்த வழியைக் காட்டுகின்றது.

இலங்கையில் மீலாதுன் நபி விழா ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருட மீலாதுன் நபி விழாவை மாத்தறை மாவட்டத்தில் நடத்தி அங்குள்ள முஸ்லிம்களின் சமய, கலாசார நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சனநாயகத்தை ஏற்படுத்தி வட மாகாணத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடு விப்பதற்காக மிக வேகமாக நடவடிக்கைகள் முனனெடுக் கப்பட்டுவரும் ஒரு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் இவ்வருட மீலாத் விழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

இவ்விரண்டு மாகாணங்களில் இருந்தும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து அங்கு ஒரு தனியான இன ஆட்சியை ஏற்படுத்துவதையே பயங்கரவாதம் தனது இலக்காகக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் திரும்பிச் சென்று ஏலவே இருந்த அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்த விசேட தினத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவி எமது மக்கள் மத்தியில் புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்று அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.