எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் – “சண்டே ரைம்ஸ்’

pullmottaiindiadoctors1.jpgஇலங் கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி “சண்டே ரைம்ஸ்’ சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.  இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு  அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசன்’ கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.

“நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது’ என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.

ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.

புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் ஷெல், நிலக்கண்ணி, துவக்குச்சூடு என்பவற்றால் காயமடைந்தவர்கள் என்றும் அவர் சண்டே ரைம்ஸுக்கு கூறியுள்ளார். மூன்று வயது பிள்ளை முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை நிலைவரம் தொடர்பாக விவாதம்

parliament-uk.jpgஇலங்கையில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகளில் கடும் கவலை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, யுத்தநிறுத்த அழைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காவிடின் பொது நலவாயத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் விடுக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி.ஜோயன் ரியான் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான “சண்டேரைம்ஸ்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

வருண்தான் வேட்பாளர் – பாஜக

20-varun-ganthi.jpgபிலிபித் தொகுதியில் வருண் காந்திதான் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பபீர் புஞ்ச் கூறுகையில், வருண் காந்தியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அவர்தான் பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கும், சோனியா காந்திக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள்தான், வருண் காந்தி மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக முடிவெடுக்க காரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வேட்பாளரை மாற்றுங்கள் என்று கூற தேர்தல் ஆணையத்திற்கு யார் அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை நாங்கள் நிராகரித்து விட்டோம்.

சஞ்சய் தத் போன்ற தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும். வருண் காந்திதான் எங்களது மதிப்புக்குரிய வேட்பாளர். இதுகுறித்து பாஜக தலைமை முறைப்படி அறிக்கை ஒன்றை வெளியிடும். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகும் உத்தேசத்தில் வருண் காந்தி இல்லை என்று கூறப்படுகிறது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து சம்பியன்!

cricket_women_worldcup_.jpg மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி சம்பியனாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

மகளிருக்கான உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பறியிருப்பது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 1973 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணி மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது 16 ஆண்டுகளின் பின்னர் அவ்வணி மீண்டும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்குப் பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. 
 

வருண் கீதையை சரியாக படிக்க முயற்சிக்க வேண்டும் – பிரியங்கா

23-priyanka.jpgவருண் காந்தி பேசிய பேச்சு வருத்தம் தருகிறது. அவர் முதலில் பகவத் கீதைய சரியாக படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்திரா குடும்பத்தின் பாரம்பரியத்தை சிதைப்பது போல உள்ளது வருணின் பேச்சு என்று வருணின் பெரியம்மா சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார் பிரியங்கா. அங்கு தொகுதி மக்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பக்கத்தில் இருக்கும் தம்பி ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கும் பிரியங்கா செல்கிறார்.

ரேபரேலி வந்த பிரியங்காவிடம், வருண் காந்தி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பிரியங்கா, வருண் காந்தி பேசியது நிச்சயம் இந்திரா குடும்பத்தின் கொள்கைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் உகந்ததல்ல, அவற்றுக்கு முரணானது. வருண் இப்படிப் பேசியிருப்பதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன்.

வருண் பகவத் கீதைய முழுமையாக படித்து, அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நான் அட்வைஸ் செய்கிறேன் என்றார் பிரியங்கா.

வணங்கா மண்!!! : ஈழமாறன்

Vanni_Missionகப்பல் ஓட்டிய தமிழன்
பின் ஒருநாள்
ஓமந்தைச் சாவடியில்
கப்பம் புடுங்கிய தமிழன்
தொப்புள் கொடி உறவின் பெயரால்
பத்துப் பதினைஞ்சு
வீடு வாங்கிய தமிழன்

முன் ஒருநாள்
புரட்சியின் பெயரால்
கோயிலெல்லாம்
நகை எடுத்தவன்
தண்டவாளம் ஈறாக
கிண்டி எடுத்தவன்
கதிகால் தொடங்கி
கக்கூஸ் கதவுவரை
களவும் எடுத்தவன்

கவி படைத்தவன்
அண்ணையின் பெயரில்
அர்ச்சனை செய்தவன்
பிறிதொரு பொழுதில்
களவாய் கடவுச்சீட்டுச் செய்து
கென்யா ஊடாக
ஜரோப்பா சென்று
ஆமி அடிக்கிறான்
புலி பச்ச மட்டை வெட்டி
பளார் என்றடிக்குது
வீடு எரிஞ்சு போச்சு
கிடந்த தோடும் களவு போச்சு
நாடு திரும்பிப் போனால்
என்னை நாயைப் போல் சுடுவார் என்று
பொய்யாய் சொன்னவன்
அதன் பேரில் அடைக்கலமும் கேட்டவன்.
தங்கையை கூப்பிட்டான்
தம்பியை கூப்பிட்டான்
மாமா மாமி மச்சாள் என்று பின்
வரிசையாய் அழைத்தபின்

மாவீரர் விழாச்சென்று
போர்வீரம் கதைத்தவன்
சந்திரிகாவுடன் கலவி வைக்க
அண்ணைக்கும் ஆசை
இந்த கிளட்டு சிங்கத்திற்கும்
ஆசையென்று அரங்கிலை முழங்க
விசிலடித்தவன்
அன்றிரவே விஸ்கியும் அடித்தவன்.

ஜஞ்சாறு வருசம் கழிச்சு
தெருவில் நின்ற காருடன்
கோட்டுச் சூட்டையும் போட்டு
போட்டோ எடுத்தவன்
எடுத்த கையோடு
எக்கச் சக்கமா புரட்டும் சேர்த்து
கடிதமும் போட்டவன்
வடிவான பொம்பிளை ஒன்று
அனுப்பவும் சொன்னவன்.
வன்னிலை வேண்டாம்
கொஞ்சம் நகரமாய் பாருங்கோ
இங்கிலிசு தெரிஞ்சிருந்தா
இன்னும் கொஞ்சம் நல்லது
சாதி கவனம்
சமயத்தையும் விசாரியுங்கோ
வாற செலவு அவளோடை
வந்த பிறகுமிகுதி என்று
வரிசையாய் சொன்னவன்

வந்திறங்கிய கையோடு
கலியாணம் ஒருநாள்
பின் வேறு ரிசப்சன் மறுநாள்
பிறந்த நாள் ஒருநாள்
31ம் சடங்கெண்டு ஒருநாள்
படுத்தது தவிர்த்து
பிள்ளை குடுத்தது தவிர்த்து
மற்றன எல்லா நாளுக்கும்
விழா எடுத்தவன்
கொஞ்சம் விலாசம்
காட்டினவன்

கொலிடே போனவன்
குடிச்சுத் தினம்
கும்மாளம் போட்டவன்
அரைகுறைப் பயிற்சியில்
அரங்கேற்றம் செய்தவன்
அப்பப்ப வன்னி சென்று
அண்ணைக்கருகில் நின்று
போஸ் கொடுத்தவன்
கொடுத்தெடுத்த படம்
காட்டி அண்ணையோட
குளோஸ் என்று சொன்னவன்
வெள்ளைப் புறாக் கட்டினவன்
கட்டி வந்ததில் வீட்டைக் கொஞ்சம்
நீட்டியும் கட்டினவன்

வருகிற வழியிலை
துடைக்கப் பேப்பரும் கேட்டவன்
வள்ளியும் கந்தனும்
சுப்பனும் பேத்தியும்
பங்கரில் இருக்கையில்
லண்டனில் பிள்ளையும் பெத்தவன்
புரச்சியின் பெயரிலை
கொள்ளையும் அடித்தவன்
கொள்கையின் பெயரிலை
இன்னும் நாலைஞ்சு வீடும்
வாங்கினவன்

மன்னாரில் சாகையில்
மதுவிலை கிடந்தவன்
அண்ணை உள்ளுக்கை விட்டடிப்பார் என்று
மனிசியுடன் தினம் தோறும்
மயக்கத்திலும் கிடந்தவன்
மூதூரில் சனம் சாக
வைவுக்கு முத்தம் கொடுத்தவன்
பேசாலை ஈறாக
பெருவாரி சனம் சாக
பராரிக் கனவோடு
சொகுசாக வாழ்ந்தவன்

ஆனையிறவு போய்
அழிவார் கதைகேட்டு
வன்னிச் சனத்தின்ரை
ஆடுமாடு போய்
பால மோட்டை போய்
படுகாட்டுக் குளம் போய்
படுத்திருந்த பாய் கூடப் போய் துலைஞ்சு
நாசமறுப்பார் செய்த வேலையாலை
நாதியற்ற வன்னிச் சனம்
இருந்ததெல்லாம் இழந்து
மிருகமாய் அலைஞ்சு
கருங்காலி மரத்தின் கீழே
உறங்காமல் உண்பதற்கோ
ஒரு பருக்கை உணவில்லாமல்
திண்ணையும் போய்
பின்வளவு தென்னையும் போய்
புள்ளையும் போய்
புதுவிளாம் குளமும் போகையிலே
கட்டவுட் கட்டினவன்
அண்ணைக்கு பனையுயரக்
கட்டவுட் கட்டினவன்
சாவை நிறுத்துவோம்
வாருங்கள் ஊர்வலம் என்று
தெருவுக்கு கூட்டி வந்து
அண்ணையைக் காப்பாத்த
பதாகை சுமந்தவன்

ஊர்வலத்திலே உல்லாசம் கண்டவன்
பெல்ஜியம் சென்று
துள்ளிக் குதித்த பின்னே
பானம் அருந்தி
சான்ட்விச்சு சாப்பிட்டு
ஏப்பம் விட்டவன்
இளம் பெட்டையளை பார்த்து
மோப்பமும் விட்டவன்.
கோச்சிலை அப்பிடி இப்பிடி
சேட்டையும் விட்டவன்
இளசுகளுக்கு பிக்கினிக்
காட்டவும் செய்தவன்.

காரை முள்ளுக் குத்த
யங்கம் முள்ளு கீறிபாய்ந்த காயம்
உடல் கடுக்க
சிங்களம் ஏவிய செல்
சிங்கனைக் கொன்று
அவன் தங்கையைக் கொன்று
மங்கையின் உடல் தின்று
உடன் கிடந்த தங்கமாம்
ஆறுமாத சிறுமியை பிழிந்தெடுத்து
கோடியில் நின்ற
மாடாடு மரமெல்லாம்
முறித்தெடுத்து
கருப்பட்ட முறிப்பிலே வீழ்ந்து வெடிக்கையில்
நாயே நீ எங்கிருந்தாய்
கற்சிலை மடுவிலே
நெடுங்கேணித் தெருவிலே
புளியங் குளத்திலே
புதுவிளாங்குளத்திலே
அழிந்து சனம்
அழுது ஓலம் விட்டு
விடுங்கடா எங்களை
வே மக்களே என்று சொல்ல
பொல்லால் அடித்து
காலால் போட்டுதைத்து
மாத்தளனில் என் மகளை
மாடாய் அடித்தவனை
மாவீரன் என்று சொல்லி
மார்தட்டிக் கொண்டாடியவன்

கட்டினவள் கதறியழ
பால் மணம் மாறாத பச்சிழம் பாலகன்
கையில் கொண்டு
கரிப்பட்ட முறிப்பு போக
கனகராயன் குளம் போக
முறுகண்டி போக
முழங்காவில் போக
வற்றாப் பழை போக
தண்ணீர் ஊற்று விழ
தண்ணியிலை இருந்தவன்

தன்குறி விறைக்க
சந்தோசம் கொண்டவன்
புதுக்குடியிருப்பு மூலைக்கை
வன்னிச் சனம் சாகைக்கை
கால் சிதறக் கை முறிந்து
தண்ணிகூட இன்றிச் சனம் மாழேக்கை
ஆண்குறி விறைப்பேறி
அனுபசிச்சுக் கிடந்தவனுக்கு
அண்ணைக்கு அனுப்புவதற்கு
அள்ளிக் கொடுங்கள் என்று
வணங்கா மண்
பேர் போட்டு
வருவான் வாசலுக்கு

கேட்டு வையுங்கள்
மட்டக்களப்புச் சனத்தின் உயிர்
மசிரைவிடக் குறைவா
திருகோணமலைச் சனங்கள்
எருமையினப் பிறப்பா
மன்னாரில் செத்தவர்கள்
செல்லாத காசா
மிகுதி வன்னியிலை செத்ததெல்லாம்
மரமேறும் விலங்கா
இவரெல்லாம் சாகையிலை
இரவெல்லாம் கலவிசெய்தீர்
இப்ப அண்ணைக்கு
இருப்புக்கு இடம்வேண்டும்
வணங்கா மண் புலுடாவா
நாயே
வணங்கா மண் புலுடாவா என்று.

யாழ். ரயில் சேவை. பூர்வாங்கப் பணிகள் இன்று ஜனாதிபதியால் ஆரம்பம்

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பா ணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட்டை மக்களும் கிளிநொச்சி ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகளை மாத்தறை மக்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்தவன் மூலம் வடக்கு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான நிதி திரட்டப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 400 ரூபா அறவிடப்படவுள்ளது.  யாழ் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் இந்த அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி யாழ். செல்ல அனுமதி வழங்கப்படும். அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் ஜனாதிபதி இன்று (23) ஆரம்பித்து வைப்பார்.

இரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்

army-s-l.jpgபுலிகளின் முக்கிய தளமாக விளங்கிய புதுக்குடியிருப்பு இரணைப்பாலை முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். இரணைப்பாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளம், அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது இறுதி பிரதான நடவடிக்கைத் தலைமையகத்தையும் படையினர் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது அவர்களை 25 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் ஒன்றரை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஏ-35 பிரதான வீதியூடாகவும் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதி சொகுசுகளைக் கொண்ட வீடுகள், உட்பட பாதுகாப்பு அரண்களையும் படையினர் இங்கு கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் புலிகள் தங்களது அதி உயர்பாதுகாப்பு வலயங்களில் நன்றாக பயன்படுத்திவந்துள்ளதற்கான சகல தடயங்களும் காணப்படுவதாக வன்னி கள முனையிலுள்ள படை வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள், அதி நவீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் உட்பட பல முக்கிய பொருட் களும், அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ள படையினர் உழவு இயந்திரம், வான், கப் வண்டி உட்பட ஏழு வாகனங்களை படையினர் இந்த நடவடிக்கையின் போது நிர்மூழமாக்கியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பலமுனைகளில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா ஆகியோர் தலைமையிலான மூன்று படைப் பிரிவுகளும் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 17 பேர் பலி

tour.jpgஅமெரிக் காவின் மேற்கு மாகாணமான மான்டனாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சிறார்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேரிட்டது. இதுகுறித்து பெடரல் விமான நிர்வாக செய்தித் தொடர்பாளர் மைக் பெர்குஸ் கூறுகையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜாலி டிரிப் ஆக குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது சோகத்தில் முடிந்துள்ளது. ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் கலிபோர்னியாவின் ஆரோவில் நகரிலிருந்து கிளம்பி, மான்டனாவின் போஸ்மன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பு ஹோலி கிராஸ் கல்லறையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

போஸ்மன் நகருக்கு வரும் திட்டத்தை கடைசி நேரத்தில் விமானி மாற்றியிருக்கிறார். போஸ்மனுக்குப் பதிலாக பட் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார் என்றார். விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. விமானம் தலைகுப்புற விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லறை வளாகத்தில் உள்ள மரங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

பிக் பிரதர் புகழ் ஜேட் கூடி புற்றுநோய்க்கு பலி

_jadebigbro.jpgபிரிட்டிஷ் தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோ நட்சத்திரமான ஜேட் கூடி 27 வயதில் உயிரிழந்துள்ளார்.  அவரது வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே அவர் புற்றுநோயுடன் போராடிவந்ததையும் ஊடகங்கள் உற்று அவதானித்துவந்துள்ளன.

ஜேட் கூடி ஒரு தைரியமான பெண் என்றும் அவரை அனைவரும் அன்பாக நினைவுகூறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

2002ஆம் ஆண்டு பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பிரபலம் அடைந்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட குலையும் நிலைக்கு சென்றிருந்தது.