எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

திருமலை மாவட்டத்தில் கந்தளாயில் ஐந்து விவசாயிகள் சுட்டுக்கொலை: இருவர் காயம்

pisto.jpgதிருமலை மாவட்டத்தில் கந்தளாய்,சேருநுவர மெஹிவத்தை பமுனுவல பிரதேசத்தில் ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.00,மணிக்கும் 11.00,மணிக்குமிடையே துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் இந்தப் பிரதேசத்துககுள் நுழைந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது

உலகத்தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

Vanni_Missionபுலம் பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான முயற்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பொருட் சேகரிப்பில் தாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக “வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குண்டு மழையினால் அல்லலுறும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சை மருந்துகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய பெருமளவு நிதி தேவைப்படுகிறது.

அத்தோடு கப்பல் செலவும் குறிப்பிடும்படியாக உள்ளது. “ஆகவே இந்த முயற்சியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” எனக் குறிப்பிடும் ஏற்ப்பாட்டாளர்கள் நிதியுதவி செய்யப் பின்வரும் இலக்கங்களினூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

“வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழு
இலண்டன்

Call Centre open from 9AM to 9PM ( GMT) London Time

00 44 (0)20 3393 6650
00 44 (0)84 5527 7155

நாட்டில் சர்வதேச தலையீட்டை ஏற்படுத்த புலிகள் தீவிர முயற்சி – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குற்றச்சாட்டு

axman-yappa.jpg
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளவேளையில்  அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அதனைத் திசைத் திருப்புவதற்கு புலிகள் சர்வதேசத்தின் தலையீட்டை நாட்டில் ஏற்படுத்த முற்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில உலக நாடுகளும் சில சர்வதேச அமைப்புக்குளும் புலிகள் சார்பாகவே குரல் கொடுக்கின்றன. அவை 90 வீதமான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தும் அதேவேளை பத்து வீதமளவில் மட்டுமே புலிகள் மீது சுமத்துகின்ற. இவ்வாறான தலையீடுகளில் சிக்காமல் இருப்பதற்காக மிகவும் கவனமாக அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அழுத்தம் தேவையில்லை. அதனடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டிலும் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அமெரிக்க அலாஸ்கா மாநில எரிமலை குமுற ஆரம்பிப்பு

ea.jpgஅமெரிக்க அலாஸ்கா மாநிலத்திலுள்ள றிடவுட் எரிமலையானது குமுறி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு புகையை வெளித்தள்ள ஆரம்பித்துள்ளது. முதல் தடவையாக ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு குமுறிய இந்த எரிமலை மறுநாள் திங்கட்கிழமை 4 தடவைகள் குமுறியுள்ளது.

இந்நிலையில் எரிமலையிலிருந்து விசிறப்பட்ட சாம்பலானது அலாஸ்கா மாநிலத்தில் மிகப் பெரிய நகரான அன்சொரேஜ் பகுதியில் விழுந்துள்ளது. இந்த சாம்பலால் விமானங்களின் இயந்திரங்கள் பாதிப்படையலாம் என்பதால் அலாஸ்காவுக்கான 19 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் அன்சொரேஜ் நகரிலுள்ள எலமென்டோர்ப் விமானப் படைத் தளத்திலிருந்து டசின் கணக்கான விமானங்களை இந்த விசிறப்படும் சாம்பலிலிருந்து பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு முன் இந்த எரிமலையானது 1989 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான 4 மாத காலப் பகுதியில் குமுறியது.

பிரித்தானிய எம்.பி.யின் பிரேரனை இலங்கையைப் பாதிக்காது -அமைச்சர் நிமல் சிறிபால தெரிவிப்பு

nimal-sri-pala.jpgபொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரைட் கொண்டுவந்துள்ள பிரேரனை வெறும் புஷ்வானமே. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரின் யோசனையால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கிவிட முடியாது. இது குறித்து பயப்பட எதுவுமில்லை. சர்வதேச மட்டங்களிலிருந்து வந்த பாரிய எதிர்ப்புக்களுக்கெல்லாம் வெற்றிகரமாக முகம்கொடுத்த அரசுக்கு இதற்கு முகம்கொடுப்பது பெரிய விடயமல்ல. இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெளிவிவகார அமைச்சரும் எமது வெளிநாட்டுத் தூதுவர்களும் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வணங்கா மண் 27ம் திகதி தாயகம் நோக்கிய பயணம்

Vanni_Missionவணங்கா மண் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலண்டனில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்படுமென்று வணங்கா மண் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம்திகதி  அளவில் இக்கப்பல் முல்லைத்தீவிற்கு கிழக்கான கடல் எல்லையை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மக்களுக்கான பொருள் சேகரிப்பு பெரும் எழுச்சியாக இலண்டனில் நடைபெற்று வருகின்றது. பெருமளவு மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். வணங்கா மண் கப்பலில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு யானைத் தந்தங்கள் அன்பளிப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரு யானைத் தந்தங்களை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக இன்று அன்பளிப்பாக வழங்கினார்.

ஜனாதிபதி மாளிகையில் அலங்காரப் பொருளாக வைக்கும் நோக்குடனேயே இந்த அன்பளிப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் கொழும்பு மாவட்ட மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கமன்பில மற்றும் கம்பஹ மாவட்ட வேட்பாளர் கே.எஸ்.ஜி.பி.கொடகதெனிய ஆகியோரும் கலந்துகொண்டனர்

நமக்காக நாம் நிதியத்துக்கு மூவின வர்த்தகர்கள் 45 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

fund_donated.jpgபடை வீரர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம் எனும் நிதியத்துக்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் உள்ளடக்கிய 35 வர்த்தகர்கள் 45 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த நிதி கையளிக்கப்பட்டது.

தொழில் உறவுகள், மனிதவலு அமைச்சின் செயலாளர் மஹிந்த மத்திஹேஹெவவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நன்கொடை அன்பளிப்பு வைபவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொட்டு அம்மானின் பாதுகாப்பு வீடு படையினர்வசம்

pottu_amman-house.pngஎல்.ரீ.ரீ.ஈ. உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் பயன்படுத்திய பாதுகாப்பு வீடு படையினரால்  நேற்றுக் கைபற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவருபவர்களான  பொட்டுஅம்மான் மற்றும் கபில் அம்மான் ஆகிய இருவரும் இந்த வீட்டை பயங்கரவாத திட்டங்கள் தீட்ட பயன்படுத்தியுள்ளனர் என படையினர் தெரிவிக்கின்றனர்.

பொட்டு அம்மானினால் பாவிக்கப்பட்டதாக நம்பப் படும் ஜீப்வன்டி ஒன்று மற்றும் பெருந் தொகையான மிதிவெடிகள் என்பனவற்றை படையினர் இப்பிரதேசத்தில் மேற்கொண்ட  தேடுதலின்போது  கண்டுபிடித்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஆணைக்குழு பிரதிநிதிகள் அகதி முகாம்களுக்கு விஜயம்

lankadisplaced.jpgஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர் மக்களையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளையும் குறித்த குழுவினர் நேரில் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து இடம்பெயர் மக்களது நிலைமை குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஐரோப்பிய ஆணைக்குழு இடம்பெயர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.