ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரு யானைத் தந்தங்களை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக இன்று அன்பளிப்பாக வழங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில் அலங்காரப் பொருளாக வைக்கும் நோக்குடனேயே இந்த அன்பளிப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் கொழும்பு மாவட்ட மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கமன்பில மற்றும் கம்பஹ மாவட்ட வேட்பாளர் கே.எஸ்.ஜி.பி.கொடகதெனிய ஆகியோரும் கலந்துகொண்டனர்