விருது நகர் தொகுதி வேட்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தனது தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது. இந்திய அரசாங்கம் கொடுத்த ஆயுதங்களால் காங்கிரஸ் கொடுத்த ஆயுதங்களால் அங்கு தமிழர்கள் படுகொலை நடந்து வருகிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இது தெரியும். அவரது குடும்ப நலனுக்காக, பிள்ளைகள் நலனுக்காக தமிழர்களை காவு கொடுத்து உள்ளார்.
விருதுநகர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வருகிறார் என அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. வைகோ பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதில் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. உங்கள் சகோதரனை பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதற்கு அவ்வளவு முயற்சி. நான் விருதுநகர் தொகுதியில் உங்களது எம்.பி.யாக 2 முறை இருந்துள்ளேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பார். அவர் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் ஏற்படுத்துவேன் என்று அறிவித்து உள்ளார். அவருக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன். மெத்த படித்த காங்கிரஸ் மேதாவிகள் ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது என்று கூறுகின்றனர். எந்த சட்டத்தை வைத்து கிழக்கு பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கினீர்கள். அதே சட்டத்தை வைத்துதான் ஜெயலலிதாவும் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் உருவாக்குவார். அப்போதும் இந்த வைகோவும் உடன் இருப்பார் என்றார்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
தேர்தலுக்கு புறம்பாக இலங்கை படுகொலை குறித்து பொதுமக்களுக்கு குறும்படம் திரையிட்டுக்காட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூத்தியை ஆதரித்து பீர்கங்கரணை பேரூர் அதிமுக கூட்டணிகட்சியினர் சார்பில் சீனிவாசா நகரில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அரசின் முன் அனுமதி பெறாமல் மத்திய அரசை அவமதிக்கும் வகையில் இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், குறும்படம் திரையிட்ட சிடி மற்றும் உபகரணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதிமுக பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான குருநேருஜி (46). பாமக தலைவர் மனோகரன்(46) படம் திரையிட்ட சவுண்ட் சர்வீஸ் பார்த்திபன் (26) ஆகியோரை கைதுசெய்தனர். இதுகுறித்து பீர்க்கங்கரணை போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கனடாவில் உள்ள பெரும்பாலான தமிழ் பேச்சாளர்கள் கனவுலகத்தில் வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாகப் பிடித்துவைத்திருக்கும் புலிகளே தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் அச்சுறுத்தல் என்ற உண்மையை (ஐ.நா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதன்படி) அவர்கள் அறியாதுள்ளனர் என கனடாவில் இருந்து வெளிவரும் நெஷனல் போஸ்ட் அதன் ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. (ஏப்பிரல் 29)
புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்திருக்கும் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிதுமே கவலைப்படாததாகத் தொகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என்பது உண்மையிலேயே ஆச்சரியமாகவுள்ளது. என அந்த ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளது.
நாம் ஏற்கெனவே எமது ஆரியர் தலைப்புக்களின் குறிப்பிட்டதுபோன்று மனிதாபிமான நிலைமைகள் குறித்த விடயங்களில் நாம் அனுதாபமற்றவர்கள் அல்ல. இலங்கையின் வடக்கே மிகச் சிறியதொரு நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் நூற்றுக்கணக்கான தமிழ் தற்கொலை புலிப்பயங்கரவாதிகள் மத்தியில் அகப்பட்டிருக்கின்றனர்.
தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடியை ஏந்திச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களின் மனிதாபிமான கோசங்களுக்குப் பின்னால் அவர்களிடம் ஒரு மறைமுகமான நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே தெரிகின்றது. அவர்களது உண்மையான நோக்கம் தமிழ் பொதுமக்களைப் பாதுகாப்பதா? அல்லது எஞ்சியிருக்கும் புலித்தலைமையைப் பாதுகாப்பதா? என மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழ் ஈழ மக்களுக்கு ஜெயலலிதா ஒரு கலங்கரை விளக்காக நிற்பதாக கனடா பல்கலை. தமிழ் பட்டதாரி கழகம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கா ஆதரவாக பேசி வரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கனடா பல்கலைகழக தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் லோகீசன் கதிர்வேல் பிள்ளை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில்,
மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்னை ஜெயலலிதாவிற்கு,
கனடிய பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் பணிவான அன்பு வணக்கங்கள் ஈழத்தமிழர் துயர் கண்டு வெடித்த உங்கள் உணர்வு கண்டு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல். ஈழத்திலும் தாய் தமிழகத்திலும் உள்ள எட்டுக் கோடித் தமிழர்களின் வாழ்க்கையில் உங்கள் பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. கடவுள் கூடக் கைவிட்ட ஈழத்தமிழருக்கு உங்கள் அன்புக்கரங்கள் நம்பிக்கையூட்டி நிற்கின்றது.
ஒவ்வொரு தாய் தமிழக உறவுகளிற்கும் ஈழத்தமிழரின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். எமது மனமார்ந்த நன்றிகள். உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழீழ மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக நிற்கின்றீர்கள்.
ஈழத் தமிழராகிய எமக்கு உங்கள் சொல்லின் மேல் அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதைச் சொல்லும் தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள். மேலும், சொல்லிலும் செயலிலும் நேர்மையாகவே இதுவரை காலமும் வாழ்ந்துள்ளீர்கள். உங்கள் பதவிக்காலத்தில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள்தம் வாழ்க்கையை வளம்படுத்த உதவினீர்கள்.
எங்கள் அனைவர்க்கும் “ஈழத்தை அமைப்பேன்”; என்னும் உங்கள் கணீர் குரல் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
முல்லைத் தீவு பாதுகாப்பு வலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிடிக்கப்பட்ட அந்தரங்கச் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனேயிடம் விளக்கம் கோரியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹுனேயை நேற்று அவசரமாக அழைத்து, ஐக்கிய நாடுகளினால் மிகவும் அந்தரங்கமாகப் பேணப்பட வேண்டிய உணர்ச்சி பூர்வமான படங்களை ஊடகங்களுக்கு கசிய விட்டது எப்படியென்று உடனடியாக விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கேட்டார்.
அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன்னாவும் கூட இருந்தார். இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அரசு அறிவித்த ஆட்சேபத்தை அறிவிப்பதாக நீல் புஹுனே அமைச்சரிடம் தெரிவித்தார்.
தமிழகத் தில் உள்ள வளர்ப்புப் பன்றிகளுக்கு ப்ளு காய்ச்சல் நோய் வராது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தங்கராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை வேந்தர் தெரிவித்திருப்பதாவது: பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் இதுவரை மனிதர்களிடத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளன. உலகின் எந்த நாடுகளிலும் வளர்ப்புப் பன்றிகளில் ப்ளூ காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகளில் காய்ச்சல், சுவாச பாதிப்பு, வாந்தியுடன் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படும். நோய் தாக்கப்பட்ட பன்றிகளில் இருந்து அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு நோய் தாக்கம் ஏற்படலாம்
ஐ.நா சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் டொலர் கடன் உதவியை தடுத்துவைக்கும் நடவடிக்கையோ அல்லது வேறு நடவடிக்கைகளையோ மேற்கொண்டு இலங்கையை தண்டிக்க தேவையில்லை என்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் அமர்வொன்று இடம்பெற்ற பின் செய்தியாளர்களிடம் இதனை பாதுகாப்பு சபையின் தலைவரும் மெக்ஸிக்கோவின் உறுப்பினருமான கிளாடி ஹெல்லர் கூறியதாக ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (02.05.2009) காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புலிகளின் பிடியில் இருந்து வந்த மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைகுறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..
சடலம் இவரது தாயாரால்; அடையாளம் காணப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது தந்தை எஸ். சதீஸ்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனந்தெரியாதோரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல போயிருந்தார். இதே பாணியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி திருகோணமலை சென் மேரிஸ் வித்தியாலய முதலாந்தர மாணவி ஜூட் வர்ஷா காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கிழக்கில் கடத்தப்பட்ட மாணவர்களை விடுவித்து சுமுகநிலை தோன்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பு எம்.பி.க்கள் கோரிக்கை
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டு, சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் கூறும் இவ்வேளையில் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் காணாமல் போய் இருக்கும் சம்பவமானது பலத்த சந்தேகத்தையும், பேரதிர்ச்சியினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட மாணவர்கள் மனிதாபிமான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட எம்.பி.க்களான த.கனகசபை, செல்வி.தங்கேஸ்வரி, பா.அரியநேத்திரன், எஸ்.ஜெயானந்த மூர்த்தி ஆகியோர் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்குத் தமது தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற எட்டு வயது மாணவியான செல்வி சதீஸ்குமார் தனுஷா இதுவரை வீடுதிரும்பவில்லை. இவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்த மாணவியின் தந்தையான சதீஸ்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இனம் தெரியாத ஆயுதக்குழுவினர் விசாரணைக்கென அழைத்துச் சென்று இதுவரை அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் ஏக்கத்துடன் இரண்டு வருடங்களாகத் தனது அப்பாவைக் காணாமல் அல்லல் அடைந்திருந்த இம்மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் வள்ளுவன் மதிசுதன் (வயது 15) ஆகியோரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது எனவும் அறியமுடியாத நிலையுள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பில் மர்மமான முறையில் மாணவர்கள் காணாமல் போயிருப்பதால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளுக்கும், பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களை கல்வி கற்க அனுப்ப முடியாத பதற்ற நிலை தோன்றி இருப்பதைக் காணமுடிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி புனித மரியாள் கல்லூரியில் கல்விபயிலும் ஆறுவயது மாணவியான யூட் ரெஜிஸ்ரா என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு சரியாக 41 நாட்களின் பின் மட்டக்களப்பில் இவ்வாறு மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பது மீண்டும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
உடைமை இழந்து, உயிர் இழந்து, உரிமை இழந்து தவிக்கும் தமிழ் சமூகம் எது இழந்தாலும் கல்வியை இழக்காமல் தொடர்ந்து கல்விக்காக உழைத்துவரும் வேளையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் இன்று கல்வியையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் மாணவர்கள் காணாமல் போன செய்தி கேட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை, தனியார் கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களை அனுப்பப் பெற்றோர் அஞ்சுகின்றனர்.
ஒட்டு மொத்தமாக மாணவர் தொடக்கம் வயோதிபர் வரை சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றி இருப்பதை இம்மாணவர்களின் கடத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, கடத்தப்பட்ட இம்மாணவனை உடனடியாக மனிதாபிமான முறையில் விடுதலை செய்யவேண்டுமெனவும், இது தொடர்பாக சட்டத்தையும் ஒழுங்கையும் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அரசு இம்மாணவர்கள் கடத்தலுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் இவ்வாறு செய்வதன் மூலமே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றியுள்ள அச்சநிலை தணியும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.
மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சந்திப்பு விபரங்கள்:
6.30 pm on 2nd of May 2009.
The Corner house
116 Douglas Road
Surbiton