இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (02.05.2009) காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புலிகளின் பிடியில் இருந்து வந்த மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைகுறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.