எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வஸிரிஸ்தான் மாகாணத்தின் எஞ்சிய பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்

தலிபான் களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையில் நேற் றிரவு இருபது தலிபான்கள் உயிரிழந்தனர். தலி பான்களின் முக்கிய தலைவர்கள் அல்கைதாவின் தலைவர்கள் மறைந்துள்ளதாகக் கருதப்படும் பான்னா மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் அரம்பமாகியுள்ளன.

வஸிரிஸ் தான் பிர தேச இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடை ந்து வரும் நிலையில் இராணுவத்தினர் முக்கிய கட்டத்துக்குள் வந்துள்ளனர். பான்னூ மாவட்ட த்தில் அல் கைதாவின் தலைவர்கள் மறைந்திருந்து மேற்குலகிற்கும் அமெரிக்காவுக்கு எதிராகத் திட்டமிடுவதாக அமெரிக்கா கருதுகின்றது. இத னால் பான்னூ மாவட்டத்தில் முன்னெடுக்கப்ப டும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்கள் அகலத் திறந்துள்ளன.

இரண்டு தினங்களுக்கு முன்னர் பான்னூ மாவட்டத்துக்குள் இராணுவம் நுழைந்த போது தலிபான்கள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். கடுமையான மோதலின் பின் இராணுவம் அப்பகுதிக்குள் பிரவேசித்தது. இச்சண்டையில் அறுபது தலிபான்கள் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடை ந்தனர். பின்னர் பான்னூ மாவட்டத்திலுள்ள தலிபான்களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடும் நடவடிக்கை இராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.

வஸிரிஸ்தான் மாகாணத்தை தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள பான்னூ மாவட்டத்தை மீட்கும் இராணுவ நடவடிக்கை நேற்றிரவு ஆரம்பமா னது. இதன் முதற்கட்டத்தில் இருபது தலிபான்களும் மூன்று படைவீரர்களும் உயிரிழந்தனர்.

ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு தீவிரவாதம் காரணமா?

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்து இறந்து போன பயணிகளில் இருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் ரகசிய போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலாக இது இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு ரகசியப் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட இரு பயணிகளின் பெயர்களும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பெயர்களைப் போலவே உள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் சட்டவிரோத கடைகள் உடைப்பு

மட்டக் களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் இன்று (11.06.2009) காலை உடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திருக்கொண்டியாமடு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீட்டர் பாதையை அகலமாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காத்தான் குடி நகரசபை தலைவர் யூ எல் முபின் தெரிவித்துள்ளார்.

இந்த வீதி புனரமைப்பிற்கு ஜப்பான் அரசு 3600 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளது. இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் யாவும் எதிர்வரும் 2011ம் ஆண்டு நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க தெரிவுக்குழு அமைக்கும் யோசனை – அரசு நிராகரிப்பு

parliament-of-sri-lanka.jpgஊடக வியலாளர்கள் கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புதன்கிழமை சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டதுடன் அவ்வாறானதொரு தெரிவுக்குழுவுக்கு தற்போது எந்த அவசியமும் கிடையாதென அரசாங்கம் மறுத்து விட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசிய எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும், ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவிக்கையில்;

வடக்கிலும் தெற்கிலும் தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாகிவிட்டது. எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது வடக்கில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டாலுமே தெற்கில் பயங்கரவாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கானதொரு சமிக்ஞையைக் காட்டியுள்ளது. அதாவது இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் வீசிச் செல்லப்பட்டிருக்கிறார். இது மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக் கேடானதுமான செயலென நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகவியலாளர்களுக்குத் தமது கருத்துகளை எழுத்து மூலமும் சரி, பேச்சு மூலமும் சரி வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் எமது அரசியலமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருக்கும் உரிமையாகும்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான ஆட்சிக் காலத்தில் 11 “ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நாம் இந்த சபையில் தகவல்களை வெளியிட்டிருக்கிறோம். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எமக்கு திருப்தியடைய முடியாது. ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேக நபரையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும் கடத்தி தாக்கப்படும் சம்பவங்களையும் தடுத்துக்கொள்வது எம் அனைவரினதும் பொறுப்பாகும். இதனடிப்படையில் சகல விடயங்களையும் ஆராய்ந்து இதுவரை இடம்பெற்றுள்ள படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

அத்துடன், அதற்குரிய அதிகாரத்தின் பிரகாரம் பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் இந்தத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும் யோசனை செய்கிறோம்’ என்றார். அமைச்சர் யாப்பா இதற்குப் பதிலளித்த ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா பேசுகையில்;

“இது பயங்கரவாதம் இருந்த நாடு. எனவே, ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் உதாரணம் காட்டுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் அரசாங்கம் என்ற வகையில் தேடிப் பார்க்கும் பொறுப்பு எமக்குள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போதும் வெளிநாட்டு தலைவர்கள் இலங்கை வரும்போதும் ஊடகநிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.

போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் கவலையடைகிறோம். அசோசியேட் நியூஸ் பேப்பர்ஸ் (லேக்ஹவுஸ்) நிறுவனத்திலேயே பணிபுரிகிறார். அவருக்கும் அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அது மட்டுமல்லாது கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் அவர் அரசுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ எதுவும் எழுதினாரா என்று கூட எமக்குத் தெரியாது.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு (போத்தல ஜயந்தவிற்கு) வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான உரிமையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. அப்படியான சட்டங்களைக் கொண்டு வரும் எண்ணமும் எமக்குக் கிடையாது.

இதேநேரம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் சிலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளது. சிலவற்றைத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும். எனவே, இதற்கு தெரிவுக்குழுவொன்று அவசியமில்லை. ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதுமே கடமைப்பட்டுள்ளது’

வணங்காமண் கப்பலை திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற செயல்: நெடுமாறன்

vanangaaman-captainali.jpgவணங் காமன் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற கொடிய செயல் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டினர். அவற்றை ‘வணங்காமண்’ என்னும் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், அக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது மனித நேயமற்ற கொடிய செயல்.

நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை பதவி பிரமாணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே தேர்தல் திணைக்களத்தினால் இவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இக் கட்சி சார்பில் முதலாவது இடத்தைப் பெற்றிருந்த கனகசபை பத்மநாதன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

அவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மரணமடைந்த நிலையிலேயே மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை அந்த இடத்திற்கு நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

லண்டனில் ரயில்கள் வேலை நிறுத்தம்:பல லட்சம் மக்கள் அவதி

tube-train_pa.jpgலண்டன் பாதாள ரயில் ஊழியர்கள் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளதன் காரணமாக பல லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தினந்தோரும் பாதாள ரயிலை பயன்படுத்தும் 35 லட்சம் பயணிகளின் தேவைக்காக கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு, வேலையிடங்கள் குறைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வர்த்தகர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைக்க புதிய கட்டிடம் – 15ஆம் திகதி திறந்து வைக்கப்படும்

sumeda_jayasena.jpgகிளி நொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 349 இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்ல கட்டிடம் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் சுமார் 50 ஆயிரம் சிறுவர்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த சுமார் 850 சிறுவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அவர்களின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலன்புரி முகாம்களிலுள்ள பெண்களை சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரி பிரேத அறையில்

வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும்.

இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள்.

நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் இவர்கள் இறந்த விபரங்களும் குடும்பத்தவர்களுக்கு தெரியாதுள்ளது.

இவ்வாறு இறப்போரின் உடல்களை அடையாளம் காட்டவோ இறுதிக் கிரியைகளைச் செய்யவோ எவருமே வராத நிலையில் அனைத்துச் சடலங்களும், ஒரே குழிகளில் போடப்பட்டு புதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறு நூற்றுக்கணக்கான வயோதிபர்கள் மரணமடைந்துள்ளனர்.

சிசுக்கள் யாவும் பிறப்பின்போது மரணித்தவையென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆஸ்பத்திரி சவச்சாலையில் இடவசதியின்மை காரணமாக இந்த சடலங்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட பகுதி மக்கள் நலன்பேண மியன்மார் 5.5 மில்லியன் ரூபா அன்பளிப்பு

donation_myanmar.jpgவட பகுதி மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகளுக்கு மியன்மார் அரசு 5.5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்தப் பணத்தை மியன்மார் வெளிநாட்டமைச்சர் நயன்வின் தனது அமைச்சில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் நிவ்டன் குணரத்னவிடம் இன்று கையளித்தார்.

இந்தப் பணம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.