தலிபான் களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையில் நேற் றிரவு இருபது தலிபான்கள் உயிரிழந்தனர். தலி பான்களின் முக்கிய தலைவர்கள் அல்கைதாவின் தலைவர்கள் மறைந்துள்ளதாகக் கருதப்படும் பான்னா மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் அரம்பமாகியுள்ளன.
வஸிரிஸ் தான் பிர தேச இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடை ந்து வரும் நிலையில் இராணுவத்தினர் முக்கிய கட்டத்துக்குள் வந்துள்ளனர். பான்னூ மாவட்ட த்தில் அல் கைதாவின் தலைவர்கள் மறைந்திருந்து மேற்குலகிற்கும் அமெரிக்காவுக்கு எதிராகத் திட்டமிடுவதாக அமெரிக்கா கருதுகின்றது. இத னால் பான்னூ மாவட்டத்தில் முன்னெடுக்கப்ப டும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்கள் அகலத் திறந்துள்ளன.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பான்னூ மாவட்டத்துக்குள் இராணுவம் நுழைந்த போது தலிபான்கள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். கடுமையான மோதலின் பின் இராணுவம் அப்பகுதிக்குள் பிரவேசித்தது. இச்சண்டையில் அறுபது தலிபான்கள் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடை ந்தனர். பின்னர் பான்னூ மாவட்டத்திலுள்ள தலிபான்களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடும் நடவடிக்கை இராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.
வஸிரிஸ்தான் மாகாணத்தை தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள பான்னூ மாவட்டத்தை மீட்கும் இராணுவ நடவடிக்கை நேற்றிரவு ஆரம்பமா னது. இதன் முதற்கட்டத்தில் இருபது தலிபான்களும் மூன்று படைவீரர்களும் உயிரிழந்தனர்.