மட்டக் களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் இன்று (11.06.2009) காலை உடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திருக்கொண்டியாமடு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீட்டர் பாதையை அகலமாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காத்தான் குடி நகரசபை தலைவர் யூ எல் முபின் தெரிவித்துள்ளார்.
இந்த வீதி புனரமைப்பிற்கு ஜப்பான் அரசு 3600 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளது. இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் யாவும் எதிர்வரும் 2011ம் ஆண்டு நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.