எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சர்வதேச பொலிஸ் எனக்கூறி பணம், நகைகள் கொள்ளை

டுபாயிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவரிடம் சர்வதேச பொலிஸார் எனக் கூறி, 5 இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்ட ஆறு பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்டகாலமாக டுபாயில் தொழில் புரிந்த பின் நாடு திரும்பிய சிலாபம் கொஸ்வத்த பொத்துவடவன பகுதியிலுள்ள மேற்படி பெண் வீட்டிலிருந்த சமயம் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளை நிற டிபெண்டர் வாகனமொன்றில் வந்த சந்தேக நபர்கள் வீட்டை முற்றுகை யிட்டதுடன் வெளிநாட்டில் தங்க நகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறி மேற்படி பெண்ணை தீவிரமாக விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

வீட்டை சோதனையிடுவதாக கூறி, வீட்டிலிருந்த சுமார் ஒரு இலட்சத்து 2000 ரூபாவையும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மறுநாள் கொழும்புக்கு வருமாறும் கூறிச் சென்றுள்ளனர். கொழும்பில் தாம் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு சந்தேக நபர்கள் தெரிவித்தமைக்கு இணங்க மேற்படி பெண் வந்துள்ளார்.

அங்கும் வெளிநாட்டில் தங்க நகை மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் பெண்ணின் வைப்புக் கணக்கிலிருந்து 4 இலட்சத்து 75,000 ரூபாவினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பெண்ணின் வீட்டுக்கு வந்த டிபெண்டர் ஜீப் வண்டியுடன் நபர் ஒருவர் பொரளையில் கைதாகியுள்ளார். இவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடுவெல, தெமட்டகொட, கொச்சிகடை போன்ற பகுதிகளிலிருந்து ஏனைய சந்தேக நபர்கள் 5 பேரும் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து 5 லட்சத்து 81,000 ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் 6 பேர் நேற்று மாரவில மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நல்லிணக்க ஆணைக் குழுவின் செப்டெம்பர் அமர்வு இன்று – அமைச்சர் டக்ளஸ் சாட்சியம்

logo.jpgகற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் செப்டெம்பர் மாத அமர்வு இன்று (03) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் விசாரணையில் இன்று மாலை 4 மணிக்கு எம். ஐ. எம். மொஹிதீன் சாட்சியமளிக்கின்றார். இதேவேளை எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. பொதுமக்கள் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடுகளை கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

மாவட்டச் செயலகத்திலும் பிரதேச செயலகங் ளிலும் பொதுமக்கள் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

சு.க. மாநாட்டில் 3 பிரேரணைகள் நேற்று ஏகமனதாக நிறைவேற்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த தேசிய மாநாட்டில் முன்வைக்கப் பட்ட மூன்று பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

அரசியல் யாப்பு திருத்தப் பிரேரணை, பொருளாதார சுபீட்சப் பிரேரணை, ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தை வெற்றி கொள்ளல் பிரேரணை ஆகிய மூன்று யோசனைகளுமே இம்மாநாட்டில் ஏகமனதாக நிறைவேறின.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வெற்றிகரமான தேசிய வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம் மாநாட்டின் போதே இந்த யோசனைகள் நிறைவேறின.

அரசியலமைப்பு திருத்தப் பிரரேரணையை பிரதமர் டி. எம். ஜயரட்னவும், பொருளாதார சுபீட்சம் தொடர்பான பிரேரணையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தை வெற்றி கொள்ளல் பிரேரணையை அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் இம்மாநாட்டில் சமர்ப்பித்தனர்.  மாநாட்டில் பங்கு பற்றிய சகல பேராளர்களும் தங்களது கரங்களை உயர்த்தி இந்தப் பிரேரணைகளை ஏகமனதாக நிறைவேற்றினர்.

ஜோன் ரெக்கின் இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

british.jpgதற்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸுக்குப் பதிலாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோன் ரெக்கின் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வன்னி மக்களின் வாழ்விடங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிருபமா ராவிடம் கோரிக்கை!

Suresh_Piremachandranவன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், இரணுவம் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முன் மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்கள் வசித்த காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும அவர்கள் பாம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர். இதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கொழும்பில் இந்தியத்தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாமளுமன்ற உறுப்பினர்களின் குழ இவ்விடயங்கள் குறித்து நிரபமா ராவிடம் தெளிவு படுத்தியது.

வன்னியில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதி முகாம்களிலும், இடைத்தங்கள் முகாம்களிலும் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர், திருமுறிகண்டி. விசுவமடு முதலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால தங்ககங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் இராணுவத் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன என கூட்டமைப்பினர் விளக்கினர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூட்டமைப்பினரிடம் நிருபமா ராவ் தெரிவித்ததாக கூட்டமைப்பின் நாமாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகள் குறித்த மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த நிருபமா ராவ் இவ்வீடுகளை அமைப்பதற்காக 20 ஆயிரம் இந்தியப் பணியாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நீதிமன்ற மாடியிலிருந்து குதித்ததில் படுகாயம்.

தனது மூன்று வயது மகனைக் கொலை செய்த வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றக் கட்டட மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். நேற்று (01-09-2010) யாழ்.மேல் நீதிமன்றத்தில் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

2003ம் அண்டு பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் பகுதியில் வசித்து வந்த குறிப்பிட்ட நபர் தனது மூன்று வயது மகனை இரு கால்களிலும் பிடித்தத் தூக்கி நிலத்திலடித்து கொலை செய்தமைக்காகவும், அவரது மனைவியின் கையை வெட்டியமைக்காகவும கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் மகனைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதோடு  மனையிவின் கையை வெட்டியதற்காக 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டது. தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் நீதிமன்றம் தீhப்பளித்தது.

இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்பு குறித்த கைதி யாழ். மேல்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து நிலத்தில் குதித்து படுகாயமடைந்தார். வடமராட்சி வல்லிபுரம் கோவிலடியைச் சேர்ந்த இராஜராஜன் இராஜகுமார் (வயது37) என்பவரே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மாடியிலிருந்த குதித்தவராவார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு!

LTTE_Aircraftவிடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முல்லைத்தீவில் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விமானப் பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால். அம்பலவன் பொக்கணைப் பகுதிகளில் கொள்கலன்களில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானப் பாகங்கள் இலகுரக விமானங்களுக்குரியவை என இலங்கை விமானப்படையினர் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இவற்றிற்குத் தீவைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் இராணுவ முகாம்கள் மீண்டும் பலப்படுத்தப்படுகின்றன!

Check_Pointகிழக்கில் மீண்டும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவடைந்து அமைதி நிலை தோன்றியதற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

படைமுகாம்களைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில காலமாக கைவிடப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளும் மீண்டும் திறக்கப்பட்டு முன்னர் போல் வாகனங்கள் சோதனையிடப்படுவதோடு, பொதுமக்களும் சோதனையிடப்படுகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  இரு பெண் பொலிஸார் உட்பட மூவர்  மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்த ரி-56 ரக துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளமை மற்றும், அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரப்பசளைகள், அரிசி மூடைகள் எனபன லொறிகளில் கடத்தப்பட்ட சம்பவம். மரங்கள். கஞ்சா போன்றவை கடத்தப்படுகின்ற சம்பவங்கள் என்பவற்றைத் தொடர்ந்தே இப்பாதுகாப்பு மற்றும் வீதிச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள். நிருபமாராவ், முதலமைச்சர் சந்திப்பில் ஆராய்வு

nerupama.jpgகிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக் கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

திருகோணமலையில் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.

இச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பாகவும் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மீளக்குடியமர்த்தப்பட்ட வட பகுதி மக்களு க்கு இந்தியா சுமார் 51,000 வீடுகளை வழங் குகிறது. அதேபோல, கிழக்கு மாகாணத் திற்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரகாந்தன், நிருபமாராவ்விடம் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் இந்தியா இதற்கு சாதகமான பதிலை அளிக்கும் என உறுதியளித்தார்.

தொழிற்சங்க மகா சம்மேளனம் உத்தேச திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தால் அரசதுறை அரசியல் மயப்படுத்தப்படுமென கவலை தெரிவித்துள்ள தொழிற்சங்க மகா சம்மேளனம் இதனை நிறுத்துமாறும் கோரியுள்ளது. அத்துடன் இதற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் அரசியல்வாதிகளுடனான கருத்தரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க மகா சம்மேளனம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் சமன் ரத்னபிரிய, தலைவர் அன்டன் மார்க்கஸ், பொருளாளர் என்.ஜி.ஆர்.அத்துல்ல, தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் நவரட்ண பண்டார ஆகியோர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைக்கு மேல் அதிகரிப்பதற்காக  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்லாதொழிப்பதாக கோரியே இந்த அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது இந்நிலையில் இதனைச் செய்யாது இந்த முறைமை அதிகரிக்கப்படுவதையிட்டே எதிர்க்கின்றோம்.