விஸ்வா

விஸ்வா

கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஓன்றை நடத்தவுள்ளனர். கிளிநொச்சி நகரில் முன்னர் இயங்கிய இச்சந்தை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னர் நகரிலிருரிந்து சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அம்பாள்குளம் என்ற இடத்திற்கு மாற்றபட்டுள்ளதால் சந்தை வியாபாரிகள் பாதிக்கபட்டள்ளனர்.

இச்சந்தையில் நிரந்தரக் கட்டங்கள் அமைக்கப்படாமல் தற்காலிக கொட்டகைகளில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சிக்கு தென்பகுதிகளிலிருந்து வரும் நடைபாதை வியாபாரிகள் நகரின் எல்லா இடங்களிலும் வியாபாரத்தை நடத்தி வருவதால் குறித்த சந்தைக்கு நுகர்வோர் வருவது மிகவும் குறைவாகவுள்ளதாகவும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியலும் பிரதேச சபையினால் சந்தை வியாபாரிகளிடமிருந்து நாளொன்றிற்கு 50 ரூபா வரி அறவிடப்படுவதாகவும் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சனைகளை முன்வைத்து கடந்த 23அம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவிருந்ததாகவும், அது தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் குறித்த போராட்டம் நடைபெறும் எனவும் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறுவதில்லை என மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தெரிவிப்பு.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் பகிடி வதை தடைசெய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக சில மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டமை குறித்து அவர் குறிப்பிடுகையில் மாணவர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடுகளும் இல்லை எனவும், அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் ஆனால். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் ஒன்றாக தங்கியிருப்பதன் காரணமாக சில சமயங்கள் முரண்பாடுகள் எற்பட்டு அவை மோதல்களில் முடிவடைகின்றதாகவும், அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் இவ்வாறானதே எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வங்கியில் அடகு வைக்கப்பட்டு யுத்தத்தின் போது தொலைந்து போன நகைகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மக்கள் வங்கியில் நகைகள் அடகு வைத்து, யுத்தத்தின்போது அவை தொலைந்து போனவர்களுக்கு பவுண் ஒன்றிற்கு 32 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அவ்வங்கி அறிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும், சேதங்கள் காரணமாக குறித்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட பொதுமக்களின் நகைகள் தொலைந்து போய்விட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்க வங்கி முன்வந்துள்ளது.

அடகு வைத்த மக்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலம் வரையும் இந்த நகைகளுக்கான வட்டி அறவிடப்படும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

ஏழு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தொண்டராசிரியர் கைது.

மலையகம் நோட்டன் பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஏழு சிறுமிகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் 25 வயது தொண்டர் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரால் தரம் ஐந்தில் கற்கும் ஒன்பது தொடக்கம் பத்து வயதிற்குட்பட்ட ஏழு சிறுமிகளே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் இந்த நடவடிக்கை குறித்து நோட்டன் பொலிசாருக்க கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொண்டராசிரியரிடம் விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வரும் நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக குறித்த ஏழு சிறுமிகளும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரியாலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வீட்டுத்திட்டத்தை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார்.

Ariyalai_Jaffnaஎதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா யாழ். அரியாலையில் இந்திய நிதியுதவியுடனான வீடமைப்புத்திட்டம் ஒன்றை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஆரம்பக்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள ஆயிரம் வீட்டுத்திட்டத்தையே அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் துரையப்பா விளையாட்டரங்கில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உளவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுகளில் இந்தியத்தாதுவர் அசோக் கே. காந்தா, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.

Shanmugalingam_N_UoJகடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பின் போது கலாசார சின்னங்கள் அகற்றப்பட மாட்டாது எனத் தெரிவிப்பு.

Sankiliyan_Statueபருத்தித்துறை வீதி அகலிக்கப்படவுள்ள நிலையில் அவ்வீதியிலுள்ள சங்கிலியன் சிலை அகற்றப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

சங்கிலியன் சிலை வீதி அகலிப்பின்போது அகற்றப்படலாம் என்கிற கவலை அப்பகுதி மக்களுக்கும் மற்றும் கலாசார உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சிலை அகற்றப்படமாட்டாது எனவும், அதற்கு மாற்று எற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வீதி அகலிப்பு பணிகளின் போது கலாசார சின்னங்கள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

வன்னியிலுள்ள கோழிகள் திடீரென இறக்கின்றன.

Hens_in_Wanniவன்னியில் பொதுமக்களின் வளர்ப்புக் கோழிகள் பல கடந்த சில நாட்களாக திடீரென இறந்துள்ளன. மீள்குடியேற்றபட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழிலாக கோழி வளர்ப்பினையும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் கோழிகள் வன்னிப் பகுதிகளில் முற்றாக அழிந்து போயின. இதனால் வேறு பிரதேசங்களிலிருந்து கோழிகளை வாங்கி மீளக்குடியமர்ந்த மக்கள் வளத்து வருகின்றனர்.

வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலிருந்து வியாபாரிகள் கோழிகளை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கொண்டு வரப்பட்ட நோயுற்ற கோழிகளால் நோய் பரவி ஏனைய கோழிகளும் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கோழியின் விலை தற்போது அதிகரித்துள்ளதால் இவ்வாறு இறந்த கோழிகளால் மீள்குடியமர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக நட்டமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் நோர்வூட் பாடசாலையில் 19 மாணவர்கள் இன்று மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதி.

மலையகம் ஹட்டன் நோர்வூட் பாடசாலை ஒன்றில் இன்று புதன்கிழமை 19 மாணவர்கள் திடீரென சுகவீனமுற்று மயங்கி வீழ்ந்துள்ளனர். இன்று பகல்வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மயக்கமுற்ற மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோரும் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று கூடுகின்றது. முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaதமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று செவ்வாய் கிழமை மாலை சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம் கருத்தத் தெரிவிக்கையில், பத்து தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று மாலை கூடி முக்கிய சில விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ள நிலையில் அவருடன் தமிழ் கட்சிகளின் அரங்கம் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் குறித்தும், தீர்வுத்திட்டம் ஒன்றை வடிவமைப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.