முல்லைத்தீவு வங்கியில் அடகு வைக்கப்பட்டு யுத்தத்தின் போது தொலைந்து போன நகைகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மக்கள் வங்கியில் நகைகள் அடகு வைத்து, யுத்தத்தின்போது அவை தொலைந்து போனவர்களுக்கு பவுண் ஒன்றிற்கு 32 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அவ்வங்கி அறிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும், சேதங்கள் காரணமாக குறித்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட பொதுமக்களின் நகைகள் தொலைந்து போய்விட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்க வங்கி முன்வந்துள்ளது.

அடகு வைத்த மக்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலம் வரையும் இந்த நகைகளுக்கான வட்டி அறவிடப்படும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *