மலையகம் நோட்டன் பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஏழு சிறுமிகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் 25 வயது தொண்டர் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரால் தரம் ஐந்தில் கற்கும் ஒன்பது தொடக்கம் பத்து வயதிற்குட்பட்ட ஏழு சிறுமிகளே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் இந்த நடவடிக்கை குறித்து நோட்டன் பொலிசாருக்க கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொண்டராசிரியரிடம் விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வரும் நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக குறித்த ஏழு சிறுமிகளும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.