சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான்

second-world-cup-of-twenty20.jpgஇருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது.

இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கார மட்டுமே உறுதியாக ஆடி 64 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற தேவைப்பட்ட 139 ஓட்டங்களை எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகித் அஃப்ரிடி சிறப்பாக ஆடி 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக கம்ரன் அக்மல் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்தப் போட்டியில் முந்தைய சாம்பியனான இந்திய அணி காலிறுதி நிலையிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

20-20 நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

cricket20-20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில்   இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.  நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சற்று வலிமையானதாக இருந்தாலும் பந்துவீச்சில் இரு அணிகளும் சம வலிமையுடன் விளங்குகின்றன. இலங்கையின் மெண்டிஸ், மலிங்கா, பாகிஸ்தானின் குல், அஜ்மல் ஆகியோர் தலா 6 போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதனால்  யாருக்கு கோப்பை என்பதை கடைசி பந்து வரை முடிவு செய்ய முடியாது.

‘20-20’ கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று; இலங்கை பாக். மோதல்

second-world-cup-of-twenty20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

இரண்டாவது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றன. “லீக்” முடிவில் அவுஸ்திரேலியா, ஒல்லாந்து, ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் ஆகியவை வெளியேற்றப்பட்டன. “சூப்பர்-08” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.

தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மேற்கிந்திய தீவுகள் ஆகியவை அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களில் தென்ஆபிரிக்காவையும், நேற்றுமுன்தினம் நடந்த 2வது அரை இறுதியில் இலங்கை 57 ஓட்டங்களில் மேற்கிந்திய அணியையும் தோற்கடித்தன.

20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. 2007ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் நடந்த முதலாவது உலக கோப்பையில் இந்தியாவிடம் தோற்று சம்பியன் பட்டத்தை இழந்தது. பாகிஸ்தான் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. “லீக்” ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. “சூப்பர்-8” சுற்றில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அதன் பிறகே அந்த அணி விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது.

இலங்கை அணி எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. உலககோப்பையை வெல்ல இரு அணிகளுமே கடுமையாக போராடும். இதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் சென்று யுத்தத்தில் ஈடுபட இளவரசர் வில்லியம் விருப்பம்

21wiliam.jpgஇங்கி லாந்து நாட்டு இளவரசர் வில்லியம், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று யுத்த களத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து போர் செய்ய விரும்புகிறார்.

நான் இராணுவ சேவையில் இருந்து விலகி அரசபொறுப்பை ஏற்பதற்கு முன்பு, போர்க்களத்தில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இவர் சார்ள்ஸுக்கு பிறகு பட்டத்துக்கு வரக்கூடிய இடத்தில் இருப்பதால், போர் முனைக்கு செல்லத்தடை இருப்பதாக நம்பி வந்த அவர், தன் தம்பி ஹரி போர் முனைக்கு சென்று திரும்பிய பிறகு தானும் போர் முனைக்கு செல்வதற்கு தடை இருக்காது என்று நம்புகிறார்.

“என் கண்முன்னாலேயே என் தம்பி ஹாரி போர் முனையில் பணியாற்றி இருக்கும் போது, ஏன் நான் பணிபுரிய முடியாது” என்று கேட்டார். ஆப்கானிஸ்தான் சென்று போர்க் களத்தில் குதிக்க நான் விரும்புகிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் இப்போது விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார்.

உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது எகிப்து

sc-19-06-2009.jpgதென்னா பிரிக்காவில் நடைபெற்றுவரும் கொன்பெடரேஷன் கிண்ண கால்பந்து போட்டியில் உலக சாம்பியனான இத்தாலி அணியை எகிப்து 10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இத்தாலி அணி சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணி ஒன்றிடம் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜொஹன்னஸ்பேர்க் எலீனா பார்க் அரங்கில் நேற்று “பி’ பிரிவுக்காக நடந்த இந்த போட்டியில் எகிப்து அணி இத்தாலிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதன்மூலம் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் எகிப்தின் மொஹமட் ஹோமோஸ் கோலொன்றை போட்டு வெற்றியை உறுதிசெய்தார். உலக சாம்பியனான இத்தாலியினால் கடைசிவரை கோலொன்றை போடமுடியாமல் போனது.

கடந்த 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் கொன்பெடரேஷன் கிண்ண போட்டி ஒன்றில் ஐரோப்பிய கண்ட அணி ஒன்றை ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் 2003 ஆம் ஆண்டு கொன்பெடரேஷன் போட்டியில் கெமரூன் அணி ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தேர்வான துருக்கி அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த வெற்றியுடன் எகிப்து அணி கொன்பெடரேஷன் கிண்ண அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. எனினும் “பி’ பிரிவில் இருந்து பலம்வாய்ந்த பிரேசில் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

20.20 உலகக் கோப்பை – இறுதிப் போட்டிக்கு இலங்கை தெரிவானது.

_dilshan_.jpg20.20  உலகக் கிண்ண போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டம் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய அணிக்குமிடையே நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

நாண்ய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி இலங்கையை முதலில் துருப்பெரடுத்து ஆடும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி முதலில் துருப்பெடுத்தாடிய இலங்கை குறித்த 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலக்கரத்ன டில்சான் இறுதிவரை துடுப்பெடுத்தாடி 57 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் ஏனைய அணி வீரர்களின் துடுப்பாட்டம் சோபிக்கவில்லை. ஜயசூரிய 37 பந்துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

வெற்றி இலக்கான 159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய மேற்கிந்திய அணிக்கு முதலாம் ஓவரே பெரும் சவாலாக அமைந்தது. முதலாம் ஓவரில் மெத்யூஸ் வீசிய பந்தில் 03 விக்கட்டுகளை மேற்கிந்திய அணி இழந்தது. இலங்கையில் பந்து வீச்சு பந்து தடுப்பு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவதற்குள் மேற்கிந்திய அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இறுதிவரை துடுப்பெடுத்தாடி 50 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் கிறிஸ் கேளி பெற்றுக் கொண்டார். இலங்கை அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது. போட்டி சிறப்பாட்டக்காரராக டில்சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை லோட்ஸ் மைதானத்தில் இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் இலங்கை அணியினர் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.

டெங்கு: மரணம் 139 – பாதிப்பு: 10,417

aedes_aegypti.jpgநாட ளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தொகை 139 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் உயரதிகாரி, சுரங்கனி பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில் :-டெங்கு நோயினால் இதுவரை 10,417 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்கு நோய் பாதிப்பினால் நேற்று முன்தினம் நாடளாவிய ரீதியில் அறுவர் மரணமடைந்துள்ளதுடன், இவர்கள் களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்கள் இனங்காணப்பட்டு டெங்கு நுளம்பு தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர்.

நோய் காணப்படும் பிரதேச சுகாதார அத்தியட்சகர் பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய குழுக்களும் செயற்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் நேற்றுமுன்தினம் வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயினால் கொழும்பு மாவட்டத்தில் 1558 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1198 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1288 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 1601 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ஏ) எச்1 என்1: சிகிச்சை பெறும் நால்வரும் பூரண சுகம்; 2 வாரங்களில் வீடு திரும்புவர்

19swine-flu.jpgஇன்புளு வன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்குதலுக் கிலக்காகி விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 சிறுவ ர்களும் பூரண குணமடைந்து வருகின்றனர். இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.தொற்று நோய் தடுப்புப் பிரிவின் டொக்டர் சுதத் பீரிஸ் நேற்று இதனைத் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி இனங்காணப்பட்ட சிறுவன் உட னடியாக விசேட வைத்திய பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் விசேட பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனூடாக அந்தச் சிறுவன் வைரஸ் தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு நன்றிகூறவேண்டும். சிறுவன் காய்ச்சலில் பீடிக்கப்பட்டவுடனேயே எமக்கு அவர்கள் தகவல் தந்தார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்திலும், எமது விமான துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கையின் சுகாதாரத் துறையை கண்டுவியக்கும் இதேவேளை பாராட்டவும் வேண்டும் என்றார்.

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றுதான் இருக்கிறது. இந்தியாவில் 38 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. எந்த வழியாக எவர் வருகிறார்கள் என்பதை கவனிக்கவே முடியாமல் போகும். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. நிலையத்திலும் அறிவுறுத்தப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் என தெரிவித்தார்.

சிறுவனுடன் 4 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வழமைபோன்று சுட்டித்தனத்துடன் துள்ளி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் துவண்டு போவார்கள் என்று கூறுவது உண்மையல்ல என்றும் கூறினார்.

சிறுவனுடன் விமானத்தில் பயணித்த 185 பேரின் விபரங்களை சேகரித்துள்ளோம். அதுமட்டுமல்ல விமானத்தில் அவருக்கு அருகில் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களையும் கண்டுபிடித்து அவர்களைப் பற்றியும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். நாளை 23ம் திகதி வரை அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனுடன் விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் மற்றுமொருவர் வைரஸ் தாக்கம் காரணமாக விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை இவர் அனுமதிக்கப்பட்டதுடன் வைரஸ் தாக்கத்துக்குள்ளான ஐந்தாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

வைரஸை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைக்கு சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

swine_flu.jpgஇன்புஃ ளுவன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்க த்தை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் வியப்புக்குரியதும், பாராட்டத்தக்கதுமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் பிர்தோஸி ருஸ்டம் மெஹ்தா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநா டொன்றின் போதே அவர் நேற்று இதனைத் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட (ஏ) எச்1 என்1 வைரஸ் என்பது ஆட் கொல்லி வைரஸ் அல்ல, டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் ஒன்றே, அச்சமோ பதற்றமோ படத் தேவையி ல்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையர்கள் மிகவும் அதிர்ஷ்டசாளிகள் என்றே நான் கூறு வேன் என்றும் கூறினார்.

மெக்ஷிகோவில் வைரஸ்தாக்கம் ஏற்பட்டதையடுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியதையடுத்து இலங்கை இதற்கு முகம்கொடு ப்பதற்கு ஆயத்தமாகிவிட் டது. தேவையான மருந்து வகைகள், தடுப்பூசிகள் மட்டு மல்லாது. தாக்கம் ஏற்படும் நோயாளிகளை தனியாக பராமரிக்க சகல வசதிகளையும் கொண்ட மருத்துவ மனைகளையும் ஆயத்த நிலையில் வைத்துவிட்டது.

மேலும் விமான நிலையத்தில் பயோ ஸ்கேனர்கள் மூலம் வைரஸ் தாக்கமுள்ளவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சகலரையும் அறிவுறுத்தும் விதத்தில் மும்பாயில் 38 பேரும், சிங்கப்பூரில் 49 பேரும், மலேஷியாவில் 17 பேரும், பாங்கொக்கில் 405 பேரும் மேற்படி வைரஸ் தாக்கம் உள்ளவர்களாக பதிவாகியுள்ளனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபன இலங்கைக்கான பிரதிநிதி மெஹ்தி தெரிவித்தார்.