சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கை அணியுடனான டெஸ்ட்; நியூசிலாந்து அணி 281/8

murali.jpgஇலங் கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சிற்காக நியூசிலாந்து அணி 281ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை இழந்து இருந்தது. மூன்றாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.

Sri Lanka                        

1st innings: 452
(T. Dilshan 92, M. Jayawardene 114, T. Samaraweera 159, D. Vettori 4-78, C. Martin 4-77)

NEW ZEALAND               

1st innings               (overnight 87-2)
T. McIntosh lbw b Muralitharan   69
M. Guptill b Thushara    24
D. Flynn b Mendis    14
J. Patel lbw b Muralitharan   26
R. Taylor c P. Jayawardene b Thushara  35
J. Ryder b Kulasekara    42
B. McCullum b Thushara     1
J. Oram c sub (Warnapura) b Muralitharan  12
D. Vettori not out    33
I. O’Brien not out     3
Extras: (b6, lb5, nb11)   22
TOTAL (for 8 wkts, 105 overs)   281
To bat: Chris Martin.
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn), 3-129 (Patel), 4-180 (Taylor),
5-188 (McIntosh), 6-195 (McCullum), 7-223 (Oram), 8-259 (Ryder).
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 22-2-80-3 (nb6), Mendis 34-8-75-1 (nb4), Muralitharan 37-9-66-3, Paranavitana 2-0-8-0.

லாக்கர்பி குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்

lockerbie_bombing.jpgஸ்காட் லாந்தில் இருபது வருடங்களுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.

குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்று மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆயுள்வேத வைத்தியசாலைகள் அரசுடமையாகும்

ep-map.jpgஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்வைத்திருந்தார்

யூனானி மற்றும் சித்த வைத்திய முறைகள் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்பட்டுவருவதால் அந்த வைத்திய முறைகளையும் அவை தொடர்பான ஆய்வுகளையும் அரசாங்கத்தால் மேற்கொள்வதற்கு வசதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.

திருமலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் – அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா அறிவிப்பு

anurapriyadarsanayapa.jpgதிருகோண மலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

கிளிநொச்சியில் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாடத காரணத்தினால் அங்கு முதலீட்டு வலயம் அமைப்பதில் சிறிது காலத் தாமதம் ஏற்படலாம்;. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது இலேசான காரியமல்ல. இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மோப்ப நாய்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றன. கடும் உஷ்ணம் காரணமாக மூன்று மோப்ப நாய்கள் சுகவீனமடைந்துள்ளன. இப்பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அது ஐ.நா.வால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இங்கு மீள் குடியேற்றம் இடம்பெறும். அதன் பின்னரே முதலீட்டு வலயம் அமைக்கப்படும்.

இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் வழங்கியுள்ளபோதிலும் எதிக்கட்சிகள் அவற்றில் குறைகண்டு அரசியல் இலாபம் தேடுகின்றன. இதே மக்கள் புலிகளின் பிடியில் உணவின்றித் தவித்தபோது இந்த எதிக்கட்சி உறுப்பினர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மட்டு வைத்தியசாலைக்கு புற்றுநோய்ப் பிரிவு!

ep-map.jpgமட்டக் களப்பு போதனா வைத்திய சாலையில் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் தனியான பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.

மூன்று தினங்களில் இலங்கையில் 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தகவல்

gl_p_s.jpgகடந்த மூன்று தினங்களில் திறைசேரி உண்டியல் விற்பனை மூலம் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையின் பொருளாதரக் கட்டமைப்பின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். பொருளாதாரம் சிறந்த முறையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் பயமின்றி முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதனால்தான் பெரும் எண்ணிக்கையிலான  முதலீட்டாளர்கள்  இலங்கை மீது தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு பெருந்தொகையான வெளிநாட்டுப் பணம் கிடைத்துள்ளதனால் தனியார் வங்கிகளிடம் கடன் பெறவேண்டிய தேவை ஏற்படாது. தனியார் வங்கிகளும் தங்களது வியாபார நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மூலம் இவ்வருட இறுதியில் வட்டிவீதம் மேலும் குறைவடையும். சுமார் 9 வீதம் வரைக் குறையுமென எதிர்பாக்கமுடியும். இதனால்  தொழில் வாய்ப்புக்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – இலங்கை அணி 452 ஓட்டங்கள்

thilakarathna-dilshan.jpgநியூ ஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 452 ஓட்டங்களை பெற்றது. திலான் சமரவீர 159 ஒட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து சென்றார். அவர் இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ஆட்ட மிழக்காமல் 108 ஓட்டங்களுடன் ஆடிய ஜயவர்தன 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிடபோது ஆறு ஓட்டங்கள் அதாவது 114 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் சமரவீரவுடன் ஜோடி சேர்ந்த மெத்திவ் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பிரசன்ன ஜயவர்தன 7 ஓட்டங்களையும் பெற்றார். இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.

பந்துவீச்சில் மாட்டின், ஓப்ரையின், விட்டோரி தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சுக்காக  2 விக்கெட்டுக்களை இழந்து 87ஓட்டங்களை பெற்றது.

SCORECARD
SRI LANKA 1ST INNINGS
(overnight 293-3)
T. Paranavitana c McCullum b Martin    00
T. Dilshan b O’Brien      92
K. Sangakkara c Flynn b Martin     08
M. Jayawardene c Taylor b O’Brien   114
T. Samaraweera c Patel b Vettori   159
A. Mathews c McCullum b Vettori    39
P. Jayawardene c Flynn b Vettori    07
N. Kulasekara c McCullum b Martin    18
T. Thushara c O’Brien b Vettori                    00
M. Muralitharan c McCullum b Martin    08
A. Mendis not out      00
Extras: (b1, lb2, nb2, w2)     07
Total (all out, 117.4 overs)    452
Fall of wickets: 1-0 (Paranavitana), 2-16 (Sangakkara), 3-134 (Dilshan), 4-300 (M. Jayawardene), 5-386
Mathews), 6-408 (P. Jayawardene), 7-444 (Samaraweera), 8-444 (Kulasekara), 9-452 (Muralitharan), 10-452 (Thushara).

Bowling: Martin 23-5-77-4, O’Brien 21-1-125-2 (nb2, w1), Oram 7-1-25-0,
Vettori 37.4-9-78-4, Patel 24-3-120-0, Ryder 5-1-24-0 (w1). 

NEW ZEALAND 1ST INNINGS
T. McIntosh not out   36
M. Guptill b Thushara  24
D. Flynn b Mendis   14
J. Patel not out   06
Extras: (b4, nb3)   07
Total (for 2 wkts, 29 overs)  87
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn).
Bowling: Kulasekara 4-0-21-0, Thushara 8-1-29-1 (nb3), Mendis 11-3-26-1, Muralitharan 6-2-7-0.
 

5வது டெஸ்ட் இன்று தொடக்கம் :ஆஷஸ் தொடரை வெல்வது யார்? பிளிண்டொப்புக்கு கடைசி டெஸ்ட்

cri0000.jpgபொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 2வது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்களிலும் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்களிலும் வெற்றி பெற்றன.

முதல் மற்றும் 3வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஆஷஸ் தொடரை கைப்பற்றும். இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும். ‘டிரா’ ஆனால் தொடர் சமநிலையில் முடியும்.

இங்கிலாந்து சகலதுறை வீரர் பிளிண்டொப் ஏற்கனவே ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனால் அவர் விளையாடும் கடைசி டெஸ்ட் இதுவாகும். உடல் தகுதி இல்லை என்று கூறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் ஆடாதது அந்த அணிக்கு தொல்வியை ஏற்படுத்தியது.

ஆஷஸ் தொடரை கைப்பற்றி ஓய்வுபெற வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சகல முஸ்லிம் அமைப்புகளையும் உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பு – உலமா சபை தலைமையக மாநாட்டில் இணக்கப்பாடு

muslim-prayer.jpgஇந்நாட்டில் தஃவா பணியில் ஈடுபட்டுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படவென பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இணக்கப்பாடு தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலர் அஷ் ஷெய்க் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

அண்மையில் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் தலைமையகத் தில் 2009.08.18 அன்று ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன், தரீக்காக்கள், தஃவா அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தரீக்காக்கள், தஃவா அமைப்புகளுக்கு இந் நாட்டில் பல ஆண்டு கால வரலாறு உண்டு. இவைகளின் பணிகள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பயன்களை அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள், சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் அவற்றின் நன்மைகள் அதிகம் என்பதே எல்லோரினதும் கருத்தாகும்.

இந்நிலையில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சுமுகமான ஒரு நிலையில் தத்தமது செயற்பாடுகளையும் பணிகளையும் மேற்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தரீக்காக்களினதும் தஃவா அமைப்புகளினதும் மற்றும் சில உலமாக்கள் எதிர்கால அமர்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் மேற்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அன்புப் பிணைப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியில் ஈடுபடுவதன் அவசியம் பற்றி எல்லோரும் வலியுறுத்திப் பேசியதுடன், எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையுடனும் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்ளுமாறும் அங்கு வருகை தந்த அனைவரும் வேண்டிக்கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நன் முயற்சி தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.