சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஜனாதிபதி வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

290909mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நுவென் மின் ட்ரியொட்டின் விசேட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு சென்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் முக்கியஸ்தர்களின் குழுவென்றும் அங்கு சென்றுள்ளது.

வியட்நாமின் நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். இன்று மாலை இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் சமூக, பொருளாதார, வர்த்தக,  மற்றும் விவசாய விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதியின் மாளிகையில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு விருந்துபசாரமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மடு கட்டளைத் தளபதி விபத்தில் பலி – குருநாகலில் சம்பவம்

குருநாகல் தோரயாய பிரதேசத்தில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் மடு, 611வது படையணியின் கட்டளையிடும் தளபதி கேர்ணல் துமிந்த பலிஹகார அமரசேகர உயிரிழந்துள்ளார்.

மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்து குருநாகல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக வந்த கேர்ணல் அமரசேகரவின் இராணுவ கெப் வாகனமும் பொலிஸ் டிரக் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னாள் சென்ற பொலிஸ் டிரக் வண்டியை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டபோது இராணுவ கெப் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் டிரக்குடன் மோதியுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேர்ணல் அதிகாலை இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்திய அரசின் 500 கோடியால்; வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்.

sri-lanka.jpgஇந்தியா வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபா மேலதிக நிதயுதவித் தொகை மூலம் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில். இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவை மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

மடு – தலைமன்னார் மற்றும் ஓமந்தை – பளைக்கிடையிலான ரயில் பாதைகளை புனரமைத்தல்  ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்தல்; யாழ். துரையப்பா விளையாட்டரங்கை புனரமைத்தல் மற்றும்  கலாசார நிலையம் அமைத்தல் போன்றவற்றை இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன்; இது குறித்து இரு நாடுகளுக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த தமிழக எம்.பி.க்கள் குழு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தியொன்றை முன்வைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக எம்.பி.க்களின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த உதவி கிடைக்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற வேண்டுமென்பதே தமிழக எம்.பி.க்களின் பிரதான கோரிக்கையாகும்.
அந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 11 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளாரஎன அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நவம்பர்; 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் – ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் தேர்தலின்  ஆரம்ப கட்ட முடிவுகளில் ஹமீட் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும்,  அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் 210 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது.  இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அறிவிப்பு வந்துள்ளது.

யூனிஸ்கானின் இராஜினாமா நிராகரிப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

141009younuskhan226.jpg2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை யூனிஸ்கான் கப்டனாக நீடிப்பார். அவரது இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

யூனிஸ்கான் இராஜினாமா விவகாரம்

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்து இருப்பதாக பாகிஸ்தான் அணி மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் சட்டசபை கமிட்டி யூனிஸ்கானிடம் விசாரணை நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த யூனிஸ்கான் கப்டன் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் இராஜினாமா முடிவை கைவிடும்படி வற்புறுத்தினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யூனிஸ்கானிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் அணித் தேர்வு மற்றும் கப்டன் பதவிக் காலம் குறித்து சில நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில் கூறியதாவது:- யூனிஸ்கான் இராஜினாமா ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவரை கப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் எந்த நியாயமும் இல்லை.

அவரது எதிர்ப்பு நடவடிக்கையை நான் உணர்கிறேன். நான் அவரது நிலையில் இருந்து இருந்தால் அதனைத் தான் செய்து இருப்பேன். இந்த ஆண்டு ஜனவரி மாத்தில் யூனிஸ்கான் கப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில சமயங்களில் கப்டன் பதவிக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது.

யூனிஸ்கான் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருந்தால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் அணி கப்டனாக நீடிப்பார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளார். யூனிஸ்கான் தேர்வாளர்க ளால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் தான் கப்டன் என்பது எங்களது முடிவாகும்.

அவர் கப்டன் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில்

cricket_.jpg2011ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. சென்னையில் இந்தியா ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் நடக்கிறது. 10 வது உலக கோப்பை ஒரு நாள் கிரிக் கெட் போடியை 2011ம் ஆண்டில் நடத் தும் உரிமையை ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பெற்றன.

பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை நிலவுவதால் அந்த நாடு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இழப்பீடு தொகை வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் இந்தியாவுக்க கூடுதலாக 8 ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.  அதாவது மொத்தம் 49 ஆட்டங்களில் இந்தியாவில் 29 ஆட்டமும், இலங்கையில் 12 ஆட்டமும், பங்களாதேஷில் 8 ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை முடிவு செய்ய உள்ளூர் போட்டி அமைப்பு குழு கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் என். சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பையில் இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், மொகாலியில் ஒரு அரை இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், அகமதாபாத்தில் ஒரு கால் இறுதிப் போடி மற்றும் 2 ஆட்டங்களும், டில்லியில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடைபெறுகிறது.

சென்னையில் இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், பெங்களூரில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், நாக்பூரில் இந்திய அணி மோதும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், கொல்கத்தாவில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

ஊழல் குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகத் தயார் என பாகிஸ்தான் கேப்டன் அறிவிப்பு

141009younuskhan226.jpgசமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளின் முடிவுகளை முன்கூட் டியே நிர்ணயிப்பதற்கு பணத்தை பெற்றுக்கொண்டு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பாகிஸ்தசன் கிரிக்கெட் அணியின் தலைவர் யூனிஸ் கான் பதவி விலக முன்வந்துள்ளார்.

தம் மீதும் தமது அணியின் மீதும் எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த பாகிஸ்தானின் நாடாளுமன்ற குழு, இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த பிறகும் யூனுஸ்கான் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.

அவரது ராஜினாமவை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரி யம் ஏற்குமா இல்லையா என்பது உடனடியாக தெரியவில்லை.

100 வயதில் தங்கப் பதக்கம் வென்றார் அவுஸ்திரேலிய மூதாட்டி

gold-madel.jpgஉலக மூத்தோர் விளையாட்டு போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 18 ஆம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 முதல் 101 வயதிலான பிரிவினருக்கு போட்டிகள் நடக்கின்றன. 95 நாடுகளைச் சேர்ந்த 28,292 வீரர், வீராங்கனைகள் சிட்னியில் குவிந்துள்ளனர்.

இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டிகளில் எல்லோரையும் கவர்ந்தவர் அவுஸ்திரேலிய வீராங்கனை ரூத் பிரித். காரணம் அவரது வயது 100. இந்த வயதிலும் மனம் தளராமல் போட்டிக்களத்தில் குதித்து உள்ளார். குண்டு எறிதல் போட்டியில் 100 முதல் 104 வயதினருக்கான பிரிவில் அவர் பங்கேற்றார். ஆனால் இப்பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை அவர் தான். இதனால் போட்டியின்றி அவர் தங்கப்பதக்கம் வென்றார். இருப்பினும் அவர் 4.07 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார்.

பதக்கம் வென்றதும் மது வகைகளுடன் வெற்றியை கொண்டாடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் ரூத் பிரித்தை அழைத்த போது, அவர் மது, சிகரெட் குடிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்று மறுத்து விட்டார்.

மதுவகைகளுடன் வெற்றியை கொண்டாடும் இந்த நவநாகரீக பாணி தனக்குரியதல்ல என்றும் அவர் கூறினார். இந்த வயதிலும் ஆரோக்கியமுடன் இருக்கும் ரூத் பிரித்தின் உணவு முறையில் ஒரு ஆச்சரியமான விஷயமும் உண்டு. அதாவது சிறு வயது முதலே அவர் ஒரு போதும் காய்கறி வகைகளை சாப்பிட்டதில்லையாம். ‘போட்டிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறேன். ஓய்வு பற்றி இன்னும் சிந்திக்கவில்லை’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், இந்த செஞ்சூரி மூதாட்டி.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

000cricket.jpgஇந்தி யாவில் இலங்கை அணி அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அச்சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியுடன் 5 ஒருதினப் போட்டிகளிலும், 2 டுவென்டி20 போட்டிகளிலும், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உ ள்ளது.

போட்டிகள் நடைபெறும் இடங்களை கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணத் திட்டக் குழு உறுதிசெய்தது.

டெஸ்ட் போட்டி நடைபெறும் இடங்கள்: மும்பை, கான்பூர் மற்றும் ஆமதாபாத்

ஒருதினப் போட்டி நடைபெறும் இடங்கள்: கட்டாக், ராஜ்கோட், விசாகப்பட்டினம், தில்லி மற்றும் கோல்கத்தா டுவென்டி20 போட்டி நடைபெறும் இடங்கள்: மொஹாலி மற்றும் நாக்பூர்.

போட்டி நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பி
சிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
 

நிர்வாண போஸ் கொடுத்த டென்னிஸ் வீராங்கனை செரீனா

உலகின் முதனிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். சமீபத்தில் நடந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் போது நடுவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பெரும் தொகையை அபராதமாக செலுத்திய செரீனா இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இவர் ஆங்கில விளையாட்டு இதழ் ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் படமும் பிரசுரமாகி வெளியாகி விட்டது. டென்னிஸ் வீராங்கனை ஒருவர் இது போன்ற நிர்வாண போஸ் கொடுத்திருப்பது விதிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே இது தொடர்பாக சர்வதேச டென்னிஸ் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

அடுத்த இரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.