இந்திய அரசின் 500 கோடியால்; வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்.

sri-lanka.jpgஇந்தியா வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபா மேலதிக நிதயுதவித் தொகை மூலம் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில். இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவை மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

மடு – தலைமன்னார் மற்றும் ஓமந்தை – பளைக்கிடையிலான ரயில் பாதைகளை புனரமைத்தல்  ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்தல்; யாழ். துரையப்பா விளையாட்டரங்கை புனரமைத்தல் மற்றும்  கலாசார நிலையம் அமைத்தல் போன்றவற்றை இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன்; இது குறித்து இரு நாடுகளுக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த தமிழக எம்.பி.க்கள் குழு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தியொன்றை முன்வைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக எம்.பி.க்களின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த உதவி கிடைக்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற வேண்டுமென்பதே தமிழக எம்.பி.க்களின் பிரதான கோரிக்கையாகும்.
அந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 11 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளாரஎன அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *