::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

மேல் மாகாண சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

மேல் மாகாண தேர்தல் – தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏப்ரல் மாதம் 17 வரை

 ‘மேல்மாகாண சபைத் தேர்தலையொட்டி அடையாள அட்டையற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17 வரை மட்டுமே ஏற்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களினூடாக தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2,3 மற்றும் 4ம் திகதிகளில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகளில் மாத்திரம் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட அரச அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.மேல் மாகாண சபைத் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு

india_.jpgஇந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.

வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது.  இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.

வாக்குச்சாவடியில் வாக்கெண்ணுதல் ரத்து: தேர்தல் ஆணையரின் முடிவுக்கு கட்சித் தலைவர்கள் வரவேற்பு

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குச்சாவடிகளிலேயே எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைக் கைவிடுவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்திருக்கும் முடிவை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா நேற்று சந்திப்பொன்றை நடாத்தினார்.

இச்சந்திப்பின்போது மேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குசாவடிகளில் எண்ணுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் காலநிலையை கருத்திற்கொண்டுதான் இத்தீர்மானத்தை கைவிடுவதற்கு முடிவு செய்ததாக தேர்தல் ஆணையாளர் கூறினார். ஆகவே வழமைபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களிலேயே மேல் மாகாண சபைத் தேர்தலிலும் அளிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றனர். இராஜகிரியிலுள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பெப்ரல் மற்றும் சி.எம். ஈ. வி. தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம்

upfa-website.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வைபவம் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை பீ யில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

(www.sandanaya.lk) எனும் பெயரிலான இந்த இணையத்தளத்தை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திறிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான 5379 விண்ணப்பங்கள் நிராகரிப்பு – தேர்தல் திணைக்களம் தகவல்

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 35ஆயிரத்து 424 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர். 5ஆயிரத்து 379; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிறி தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கென சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 3,038 விண்ணப்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,102 விண்ணங்களும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,239 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்; இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15ஆயிரத்து 789 பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10ஆயிரத்து 926 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 8ஆயிரத்து 699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. 

மேல் மாகாணத்தில் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி

sri-lanka-elections.jpgமேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“சிறுவர் படங்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை’

sri-lanka-elections.jpgதேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுவர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது சிறுவர்களின் உரிமைமை மீறும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி உரிமையாளர்கள் மீதும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணசபைத் தேர்தலில் பிரசார சுவரொட்டிகளில் சிறுவர்கள்,முதியோர்களுடன் அரசியல்வாதிகள் நிற்பது தொடர்பான படங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறுவர்களின் புகைப்படங்களை அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 1166 சாவடிகளை நிறுவ திணைக்களம் தீர்மானம்

election_ballot_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி மேலதிகமாக 1166 வாக்குச்சாவடிகளை நிறுவ தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளதையடுத்தே வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திற்குமான வாக்காளர் தொகை 1500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 2459 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை 3625 ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

பரீட்சார்த்தமாகவே வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணும் பணிகளை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் முடிவு செய்ததாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமனசிறி கூறினார்.

இதேவேளை வாக்குச் சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு.

election-commissioner.jpgமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (13.03.2009) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கூட்டம் இது எனத் தெரிவித்துள்ள செயலகம் இதன்போது தேர்தல் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தேர்தல்கள் நடைபெறவுள்ள விதம் தொடர்பாக பேசப்படும் எனத் தெரிவித்துள்ளது.