மேல் மாகாண தேர்தல் – தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏப்ரல் மாதம் 17 வரை

 ‘மேல்மாகாண சபைத் தேர்தலையொட்டி அடையாள அட்டையற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17 வரை மட்டுமே ஏற்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களினூடாக தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2,3 மற்றும் 4ம் திகதிகளில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகளில் மாத்திரம் கிராம உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட அரச அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.மேல் மாகாண சபைத் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *