இலங்கையும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்திருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தோனேசியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜீடாவுக்கும் அமைச்சர் போகொல்லாகமவுக்கு மிடையில் நேற்று அமைச்சில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது இருநாடுகளுக்குமிடை யிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக, செய்தியாளர் மாநாடுடில் அமைச்சர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது இந்தோனேசியாவின் சார்பாக அமைச்சர் ஹஸன் விராஜீடா வன்யிலிருந்து இடம்பெயர்ந்து ள்ளவர்களுக்காக 500 டொன் அரிசி, இரண்டு டொன் மருந்துப் பொருட்கள் மற்றும் குழந்தைக ளுக்கான உணவுப் பொருட்களை அமைச்சர் போகொல்லாகமவிடம் கையளித்தார்.
இதேவேளை இன்று (30) இலங்கை, இந்தோனேசிய நாடுகளுக்கிடையில் விசா தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதனையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையில் பல வருடங்களாக நெருங்கிய உறவு காணப்படுகிறது. சர்வதேச ரீதியான மாநாடுகளில் இலங்கை பங்குபற்றிய வேளைகளில் இந்தோனேசியா எமக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கு மிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் விவசாய ரீதியான உறவுகளை மேம்படுத்துவதற்காக ஆணைக்குழுவொ ன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இருநாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
அத்துடன் பயங்கரவாதம் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வகையாக உருவெடு க்கிறது. அதற்கு முகம் கொடுக்க தேவையான விதத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை விரைவில் கைச்சாத்திடவுள்ளோம் என்றார்.
இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையும் இந்தோனேசியாவைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடாகும். எமது நாடு சுதந்திரம் பெறும் தறுவாயில் இலங்கை எமக்கு மிகவும் நெருங்கிய உதவிகளை முன்னெடுத்துள்ளது.
அதேபோல் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்தோனேசியா என்றும் ஒத்துழைப்பு நல்கும். இலங்கையில் உருவாகியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எமது நாடு என்றும் ஆதரவு வழங்காது.
இலங்கையின் படைவீரர்கள் மோதல் களில் வெற்றியீட்டி வருவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், எனக் குறிப்பிட்டார். இந்தோனேசிய ஜனாதிபதி இவ்வருடம் இலங்கை வருவாரென தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.