வில்பத்து, ராஜாங்கனை 18ம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு புலிகள் மேற்கொண்ட முயற்சி முறிய டிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர் நேற்று தெரிவித்தார்.
ஆயுதம் தாங்கிய புலிகள் குழுவொன்று நேற்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றதாகவும் பொலிஸாரும், சிவிலி பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற் கொண்ட தாக்குதலையடுத்து அவர்கள் தப்பிச் சொன்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாலை கிராமத்தினுள் புகுந்த புலிகள் ரி-56 ரக துப்பாக்கியினால் கிராமத்தை நோக்கி சுட்டுள்ளதோடு உடனடியாக செயற்பட்ட பொலிஸாரும் சிவில் பாதுகாப்பு படையினரும் புலிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து புலிகள் காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
வில்பத்து பகுதிக்கு மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அனுப்ப்பட்டு காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதோடு கிராமங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். தேடுதலின் போது வெற்றுரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வெலிகந்த மற்றும் சேருநுவர பகுதிகளுக்குள் புகுந்த புலிகள் பல பொதுமக்களை சுட்டுக்கொலை செய்தமை தெரித்ததே.