வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

 “அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !

“அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !

அண்மையில் எம்.பி அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் பெண் ஒருவரை பெயர் குறிப்பிட்டு விபச்சாரி என சுட்டியது தொடர்பில் மௌபிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், யாழ் மையவாத, சாதிய, சனாதன, பழைமைவாத, ஆணாதிக்க சீழ் பிடித்த மூளையின் அசிங்கமான சிந்தனைமுறை வெளியே துப்பிய புழுக்களாக இந்த சொற்களை நான் கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்ட அருண் சித்தார்த், விபச்சாரி என்னும் சொல் காட்டுமிராண்டிகளின் சொல். ஏனென்றால் அது ஆணைக் குற்றவாளியாக அறிவிப்பதில்லை. அச்சொல்லுக்கு ஆண்பால் கிடையாது. ஒரு விளிம்புநிலைப் பெண்ணை அவளது பெயர் விலாசத்துடன் இந்நாட்டின் உயரிய சபையான சட்டவாக்கும் சபையில் முழு உலகும் பார்க்க விபச்சாரி என்று சொல்லும் தைரியத்தை இந்த நபருக்கு வழங்கியது யார் அல்லது எது? மன வலிமை குறைந்த ஒரு சமான்ய பெண்ணாக இருந்தால் அவளைத் தற்கொலைக்குத் தூண்டும் மிக மோசமான (statement) பேச்சு இது. அவளை நேசிக்கும் சகோதரர்களும் ஆண்களும் இருந்தால் இதைச் பேசிய நபரைக் கொலை செய்யத் தூண்டும் மிகக் கேவலமான கீழ்த்தரமான பேச்சு இது. என தெரிவித்துள்ளார்.

தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?

தையிட்டியை வைத்து மீண்டும் ஓர் கறுப்பு ஜூலை – பா.உ அர்ச்சுனா வழியில் பயணிக்குமா தமிழ்தேசியம்..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிப்பதை ஊதிப்பெருசாக்கி எதிர்வரும் தேர்தல்களில் என்.பி.பியை தோற்கடித்து தமது வாக்குவங்கியை மீண்டும் நிலைநிறுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் முயல்கின்றமை தமிழ் குறுந்தேசியவாதத்தின் அரசியல் வறட்சியின் வெளிப்பாடு என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டி முழுமைப்படுத்தப்பட்ட தையிட்டி விகாரையை உடைக்குமாறு கூறுவது மொக்குத்தனமான முடிவு எனவும் மீண்டும் தெற்கில் ஓர் ஜூலைகலவரம் ஏற்பட வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கும் இராமநாதன் அர்ச்சுனா, மீளவும் மக்களை உசுப்பேற்றி குளிர்காய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் ஆகியோர் முற்படுகின்றனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள இராமநாதன் அர்ச்சுனா,

விகாரை கட்டி முழுமைப் படுத்தும்வரை தூங்கி விட்டு இப்போது வந்து விகாரையை இடிக்க கேட்பது அறிவில்லாததன் வெளிப்பாடு. அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் பாதிக்கப்படுவது அந்த காணி உரிமையாளர்களும், இவர்களுக்காக திரளும் மக்களுமே. தையிட்டி விகாரையின் விகாராதிபதியுடன் நான் நேரில் சென்று சந்தித்தேன். அவர் மக்கள் தன்னுடன் அன்னியோன்யமாக பழகுவதாகவும் அவர் அப்பகுதி பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகவும் தெரிவிக்கிறார். சிங்களவர்கள் பற்றி போலியான விம்பம் ஒன்றை தமிழ்தேசிய தலைவர்கள் கட்டமைத்துள்ளார்கள். அந்த மக்கள் அருமையான மக்கள் – அரசியல்வாதிகள் தான் தூண்டி விடுகிறார்கள். தமிழ் மக்கள் இந்த பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். அரசியல் கதிரைகளுக்காக மக்களை தூண்டி விட பார்க்கிறார்கள். சுகாஸ் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சைக்கிள் கட்சியில் இருக்கிறார்கள். இதுவரை ஒரு வழக்கு கூட விகாரைக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பவர்களும் போடவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மக்களும் போடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலதிகமாக போராட்டங்கள் கவனயீர்ப்புகள் செய்த யாருமே இதை சட்ட ரீதியாக அணுகாது போதே தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் இது முழுக்க முழுக்க அரசியல் சதுராட்டம். இனிமேல் விகாரைகள் கட்டுவதை தடுக்க வேண்டுமே தவிர கட்டிய விகாரையை உடை என்பது மடத்தனம் என தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவின் நிலைப்பாடு சரியானதாக உள்ளது எனவும், அவர் கூறுகின்ற வழிமுறைகள் சாலப்பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கதது.

தையிட்டி விகாரை விவகாரம் மீண்டும் ஓர் பதற்றமான சூழலை தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேறியது முதல் இனவாதக் கருத்துக்கள் செயலிழக்கும் சூழல் உருவான போதும் கூட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இனவாத சூழல் ஒன்றை உருவாக்குவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடியுள்ளார்.

இதேவேளை, யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என தெரிவித்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி , தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் , தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !

என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !

அநுர அரசாங்கத்திற்கு நான் வழங்கிய அனைத்து ஆதரவுகளையும் இன்றிலிருந்து இல்லாமல் செய்வதுடன் இனிமேல் உண்மையான எதிர்க்கட்சியாக நான் நிற்பேன் என நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

64 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம்கொடுக்கவில்லை எனில் அது அரசாங்கத்தின் வெட்கம் கெட்ட செயல். சுயேட்சையான ஒரு தனி உறுப்பினரை கண்டு அரசாங்கம் ஏன் அச்சமடைகிறது? ஒரு ஹெட்லைற் போட்டதற்காக தன்னை கைது செய்யும் அரசாங்கம், ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரை இப்படி கைது செய்வார்களா என அர்ச்சுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நேரம் ஒதுக்குவது ஆளும் தரப்பின் பணியல்ல, அது எதிர்கட்சியின் பணியாகும். அவருக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. ஆகவே, இனவாத விமர்சனங்களை அரசாங்கத்தின் மீது சுமத்துவது தவறானது என்றார்.

இதேவேளை பா.உ அர்ச்சுனாவுக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து, அவரது தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மௌனம் சாதித்து வருவதாகவும், அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சிறு அசைவை கூட மேற்கொள்ளவில்லை எனவும் அவதானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது !
இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாரதி அனுமதிப்பத்திரத்தில் அர்ச்சுனா இராமநாதன் என்ற பெயரே உள்ளதாக அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உரிய சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?  

பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?

மீண்டும் போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக சென்றவேளை, அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளியில் பொலிசாருடன் தர்க்கம் செய்யும் பா உ இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை தராதது அரசாங்கத்தின் பிழை. நீ என்ன படித்திருக்கிறாய்? சிங்கள எம்.பி ஒருவரை உன்னால் நிறுத்த முடியுமா? ஜனாதிபதி அனுர குமாரவின் வாகனத்தை நிறுத்துவியா? ஜனாதிபதி அனுரtpனால் தான் நாங்கள் சொந்த வாகனத்தில் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதை அக்காணொலி காட்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே பாஉ அர்ச்சுனா கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேற்றைய தினம் பா உ அர்ச்சுனா தனக்கு பேசுவதற்கு நேரம் தரவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

பா உ அர்ச்சுனா இந்தியாவால் இறக்கப்பட்டவர் – முன்னிலை சோசலிசக் கட்சி

பா உ அர்ச்சுனா இந்தியாவால் இறக்கப்பட்டவர் – முன்னிலை சோசலிசக் கட்சி

 

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தமிழ் தேசியத்தைப் பலவீனப்படுத்த இந்தியாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் குரல்தரவல்ல துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக வடக்கு கிழக்கில் களமிறக்கப்பட்ட அரியநேந்திரனும் இந்தியாவாலேயே இறக்கப்பட்டதாக துமிந்த குற்றம்சாட்டியுள்ளார். அன்று இந்தியாவுக்கு இலங்கையைப் பணிய வைக்க தமிழ் தேசியம் தேவைப்பட்டது. இப்போது ஜனாதிபதி அனுரவே இந்தியா கேட்பதெல்லாம் செய்கிறார், எனக் குறிப்பிட்ட துமிந்த இந்தியாவுக்கு ஏன் இனித் தமிழ் தேசியம் தேவை என்றும் கேள்வி எழுப்பினார். அதனால் அரியநேந்திரன், அர்ச்சுனா போன்றவர்களைக் கொண்டு வந்து தமிழ் தேசியத்தை இந்தியா பலவீனப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’

மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’

ஒரு கார் மட்டும் போகக் கூடிய வீதியில், மற்றுமொரு கார் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் போது, பா உ அர்ச்சுனாவின் காரும் பிரதான வீதியிலிருந்து அதே வீதிக்குள் இறங்க, இரு சாரதிகளுக்குமிடையே ஏற்பட்ட தர்க்கம் சமூக வலைத்தளங்களில் பரவியது. தன்னுடைய காரை ஓட்டிவந்த அர்ச்சுனா எதிரே வந்தவருக்கு வழிவிட மறுத்து, காரை நிறுத்தினார். ஏற்கனவே அவ்வீதியில் பெருமளவு தூரத்தைக் கடந்திருந்த சிங்கள சாரதியும் தன்னாள் பின்னுக்கு நகர முடியாது என்று அடம் பிடித்தார்.

உலகெங்கும் உள்ள உபத்திரவம் பிடித்த விடாக்கொண்டனும் கொடாக்கண்டனும் ஆனா சாரதிகளுக்கு இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம். இலங்கை வாகனப் பயிற்சி பெறுபவர்களுக்கு, விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு, நிச்சயமாக இதனைப் போட்டுக் காட்ட வேண்டும். ஒரு சாரதி எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும், இந்த மண்டைக் கொதிப்பில் போய் இவர்கள் எப்படி அப்பாவிகளைப் பலியாக்குகிறார்கள் என்பதற்கும் இதைவிடச் சிறந்த காணொலி கிடைக்காது.

இந்த இரண்டு தனிப்பட்ட விட்டுக்கொடுப்பற்ற சாரதிகளின் சண்டையில் தெறித்த வார்த்தைகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையையும் அத்தெருவில் கொண்டு வந்து இறக்கியது. இன்னுமொரு இனக்கலவரம் ஒன்று ஏற்படுமளவிற்கு, இன உணர்வுகளைத் தூண்டும் வகையில், வார்த்தைகள் தெறித்தது. காரை ஓராமாக்கி வழிவிடுவதற்கு இடமிருந்த போதும், பா உ அர்ச்சுனா நீளக்களுசானும், அடிக்கிற வெய்யிலுக்க் முழுக்கை சேட்டும் ரையும் கட்டி கூலிங் கிளாசும் போட்டுக்கொண்டு அசல் தெருப்பொறுக்கி மட்டத்துக்கு கீழிறங்கி தர்க்கத்தில் ஈடுபட்டார். ‘நான் பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர். நீ மோடையனா நான் மோடையனா ?’என்று மொண்டசெரி பள்ளிக்கூடப் பிள்ளைகள் லெவலில் தர்க்கம் நிகழ்ந்தது.

கம்பவாருதி தலையில் வைத்து தோய்வதற்கு, தனது தங்கையின் சிறுநீரைப் பெற்றுக் கொடுக்க முன்வந்த அர்ச்சுனா, இன்று ‘கையாட்டம் செய்கிறியோ?’ என்று ஆரம்பித்துவிட்டார். மறுபக்கத்தில் வந்தவரும் இவருக்கு சளைத்தவரில்லை. ‘இவர் தான் எங்கள் எதிர்ககட்சித் தலைவரின் கதிரையில் இருந்தவர். கஜேந்திரகுமார் வாகனத்தால் மோதியது, இது எங்கள் நாடு’ என்றெல்லாம் அளந்தார்.

இதுபற்றி தன்னுடைய யூரியூப்பில் பதிவிட்ட பா உ அர்ச்சுனா, இந்தப் பிரச்சினையை வைத்து இனவாத அரசியலைக் கக்கினார். இந்தக் கார் பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கார் வைத்திருக்கும் இரண்டு திமிர் கொண்ட, அந்த வீதியைப் பயன்படுத்தும் மற்றையவர்களைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற இரண்டு மனிதர்கள் தங்களுடைய ஈகோவுக்காக சமூகங்களை இழுத்து விடுகின்றனர். “நான் தமிழன். நான் எப்பிடி ரிவேர்ஸ் எடுக்கேலும். சிங்னவனின்ட இடத்தில போய் சிங்களவனையே மொக்குமொடையா, மொக்கு மாடு, பன்றி என்டெல்லாம் பேசினனான்” என்று அவித்து இன உணர்வுகளைத் தூண்டுகிறார் அர்ச்சுனா.

தமிழரசுக் கட்சி, கார் இல்லாத காலத்தில், தாங்கள் வைத்திருந்த கார்களுக்கு ‘சிறி’ எழுத்து வந்ததால் ‘சிறி எதிர்ப்புப் போராட்டம்’ செய்தது. போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டது, அப்பாவி இளைஞர்கள். கார் வைத்திருந்த எம்பி மார் எல்லாம் சிங்கள பேரினவாதிகளோடு கூடி விருந்துண்டனர். அதைத்தான் எழுபது ஆண்டுகளின் பின் அர்ச்சுனாவும் செய்கிறார். தன்னையொரு தமிழ் தேசிய உணர்வாளனாக சித்தரிக்கும் அர்ச்சுனா விடுதலைப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த போது புலிகளில் இணைந்து போராடப் போகவில்லை. தன்னை முன்னேற்றுவதற்காகப் படித்தார். இப்ப இவர் படித்தவர். பாராளுமன்ற உறுப்பினர். போராடியவர்கள் படிக்காதவர்கள். ஊனமுற்றவர்கள். இதே நச்சுச் சூழலை மீண்டும் கொண்டு வருவதற்கும் தன்னுடைய யூரியூப் சனலை ரென்டிங் ஆக்கவும் என்ன கேவலம் எல்லாம் செய்ய முடியுமா அதையெல்லாம் அர்ச்சுனா செய்கின்றார் போலவே தோன்றுகிறது.

 

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியில் ?

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியில் ?

 

இவ்வாண்டு முதல் தடவையாக பாராளுமன்றம் கூடப்பட்ட போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் ஜெகத் விக்கிரமரத்தின யாழ் மாவட்ட சுயேட்சை “பா உ இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரிமையின் எதிர்காலம் விசாரணை முடிவிலேயே தீர்மானிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். ஒரு குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் அறிக்கையை அடிப்படையாக வைத்து பராளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரவித்தார்.

 

பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்துக்கு போட்டியிட்ட வேளையில் அரச உத்தியோகத்தில் இருந்துள்ளார் என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அவர் மீது ஒரு பொதுநல வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இக்குற்றச்சாட்டை அர்ச்சுனா முற்றாக மறுத்துள்ளார். இதைவிடவும் அர்ச்சுனாவுக்கு எதிராக 20 வரையான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியிலேயே அர்ச்சுனா மீதான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

மேலும் நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தனக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என அர்ச்சுனா மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார். இதனை சபாநாயகரிடமும் அர்ச்சனா முறையிட்டார். அர்ச்சுனா ஆளும் கட்சியைச் சேராதவராகையால் அவருடைய நேர ஒதுக்கீட்டை எதிர்க்கட்சியே மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே எதிர்க் கட்சியான ஐக்கிய மக்க் சக்திக்கும் அர்ச்சுனாவுக்கும் புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் மோதல் இருந்து வருகின்றது. அது கைகலப்பிலும் முடிந்ததாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். ஆகையால் இந்தப் பிரச்சினை தற்போதைக்கு சுமூகமாகும் எனத் தெரியவில்லை.

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்?

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்? முதல் வழங்கப்பட்ட உறுதிமொழி மீண்டும் வழங்கப்பட்டது?
தம்பி தம்பிராஜா V ஊசி அர்ச்சுனா

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

பிடிக்கப்போன பிள்ளையாரை குரங்காக்கிய ஊசி அர்ச்சுனா!

சமீப வாரங்களாக கொழுந்துவிட்டெரியும் யாழ்ப்பாண வைத்திய சாலையில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 170 மருத்துவ ஊழியர்களின் பணி நியமனப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள எம்பி அர்ச்சுனா நேற்றைய தினம் பாராளுமன்றதில் இவ்விடயத்தை சொதப்பினார். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்று நேர ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்ட அர்ச்சுனா எடுத்துக் கொண்ட விடயத்தலைப்பிற்கு அப்பால் போய் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டு சபையின் நேரத்தை வீணடித்தார்.

எம்பி அர்ச்சுனா கொண்டு வந்த விடயத்தின் கனதியின் பொறுப்பையுணர்ந்து செயற்படவில்லை என மக்கள் விசனமடைந்துள்ளனர். நேற்றைய தினம் எம்பி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் தொண்டர் அடிப்படையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் பல சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்வதாக தன்னிடம் பலர் முறையிட்டு அவற்றுக்கு தீர்வு பெற்றுத் தரும்படி கேட்டுள்ளதாகவும், இவ் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ஊசி அர்ச்சுனாவுக்கு முன்னதாகவே சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராஜா அந்த ஊழியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன், அவர்கள் தங்கள் முறைப்பாட்டை சொல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தொடங்கிய விடயத்தை விட்டு விலகி யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம், பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக டக்ளஸ் தேவாநந்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா என ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்து கூச்சலிட்டார். இக் கூச்சல்களின் நடுவே எதிர்கட்சியினரைப் பார்த்து கடுமையாக விமர்சித்தார். நீங்கள் டக்ளஸ் தேவாநந்தாவை வைத்து தமிழ் மக்களை கொன்று போட்டீர்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் O/L பரீட்சையில் சித்தியடையவில்லை எனவும் ஆதாரங்களை கொண்டு வராமல் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். இதே டக்ளஸ் தேவானந்தாவை தனது தந்தை என்றும் சில மாதங்களுக்கு முன் துதி பாடியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்மீது மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளாதாகவும், பாராளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தான் தாக்கப்பட்டதாகவும் முறையிட்டார். தன்னுடைய பாதுகாப்புத் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே சபாநாயகர் அடிக்கடி குறுக்கிட்டு அர்ச்சுனாவை சமர்ப்பித்த விடயம் தொடர்பில் பேசும்படி எச்சரித்தார். அதை எதையும் காதில் வாங்காது அர்ச்சுனா தான் விடயத்திற்குள் நின்று கொண்டு தான் பேசுகிறேன் என்று கோபமாக கத்திக் கொண்டு “என்னுடைய கருத்துக்களை சபையில் முன்வைக்க எனக்கு சரியான வாய்ப்புக்கள் வழங்க முடியாவிட்டால், நான் சபைக்கு வராது வீட்டில் இருக்கிறேன்” என முரண்பட்டுக் கொண்டார். அத்தோடு நிற்காமல் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக பேச முற்பட்டார். அப்போது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அர்ச்சுனா கிண்ணியாவில் சஜித் பிரேமதாசா தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தை ஞாபகப்படுத்தியோடு, “அது யாருடைய அரசியல் மேடை?” என சிலேடையாக கேட்க அனைவரும் நளினத்தோடு சிரிக்க ஆரம்பிக்க அர்ச்சுனா தனது குறளி வித்தையை நிறுத்தினார்.

பிந்திய செய்திகளின்படி சபாநாயகர் எம்பி அர்ச்சுனா சபைக்கு முரணாக வரம்பு மீறி உளறியவையை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியே ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எம்பி அர்ச்சுனா சபையின் கவனத்தை திசை திருப்பி சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தால் அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுடைய பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாது. பாராளுமன்றம் மக்களுக்கான பிரச்சினைகளை பேசி மற்றும் விவாதித்து தீர்வு காணுமிடம். ஊசி அர்ச்சுனா மாறாக தனது தனிப்பட்ட பகை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமான தனி மனிதர்களுக்கிடையான பிணக்குகளை பேசும் இடமாக மாற்றி வருகின்றார்.

இப்படியிருக்க யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நேற்றைய தினமான டிசம்பர் 18 அர்ச்சுனா மீது 100 கோடி நட்ட ஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வாறு 100 கோடி கிடைக்கும் போது அதனை யாழ்ப்பாண வைத்தியசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என முகநூலினூடாக அறிவித்துள்ளார்.

பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு ஒரு உயர்வுச் சிக்கல் மனோநிலையுண்டு. தாங்கள் ‘டொக்டர்ஸ்’ என்பதால் தங்களுக்கு அறிவுப் புலமை அதிகம் எனத் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் உரையாடல்களில் நடவடிக்கைகளில் அடிமுட்டாள் தனமாகவும் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான கருத்தியல் நிலைப்பாடுடையவர்களாகவும் உள்ளனர். தங்களை ‘சேர்’ என அழைக்க மற்றவர்களை வற்புறுத்துவது, நான் ‘டொக்டர்’ நான் டொக்டர் என தங்களுக்கு தாங்களே அழைத்துக்கொள்வது போன்ற தாழ்வுச் சிக்கல்களும் இவர்களிடம் உண்டு. நிறைகுடம் தழும்பாது என்பார்கள். இந்த வெற்றுக் குடங்களின் குடைச்சல் தாங்க முடியிதில்லை என்கிறார் ‘சும்மா’ டொக்டர் பொன்னம்பலம்.