பா உ அர்ச்சுனா இந்தியாவால் இறக்கப்பட்டவர் – முன்னிலை சோசலிசக் கட்சி
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தமிழ் தேசியத்தைப் பலவீனப்படுத்த இந்தியாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் குரல்தரவல்ல துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக வடக்கு கிழக்கில் களமிறக்கப்பட்ட அரியநேந்திரனும் இந்தியாவாலேயே இறக்கப்பட்டதாக துமிந்த குற்றம்சாட்டியுள்ளார். அன்று இந்தியாவுக்கு இலங்கையைப் பணிய வைக்க தமிழ் தேசியம் தேவைப்பட்டது. இப்போது ஜனாதிபதி அனுரவே இந்தியா கேட்பதெல்லாம் செய்கிறார், எனக் குறிப்பிட்ட துமிந்த இந்தியாவுக்கு ஏன் இனித் தமிழ் தேசியம் தேவை என்றும் கேள்வி எழுப்பினார். அதனால் அரியநேந்திரன், அர்ச்சுனா போன்றவர்களைக் கொண்டு வந்து தமிழ் தேசியத்தை இந்தியா பலவீனப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.