தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து இன்று Wed. 8 April 4pm லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சோசலிஸ்ட் கட்சியினால் (CWI- Socialist Party) ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இன்று இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இன்று இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

International Day of Action – Protest at INDIA HOUSE, Aldwych, London, WC2B 4NA
http://www.stoptheslaughteroftamils.org/

Wednesday 8 April 4 – 5.30 pm

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • indiani
    indiani

    இந்த போராட்டத்தில் புலிக்கொடியும் பிரபாகரனின் படமும் இன்றி போராட்டம் நடைபெறும்- மக்கள் அவலங்களை முன்வைத்து போராட்டம் நடைபெறும் அனைத்து தமிழ் பேசும் மக்களின் ஒத்தழைப்பும் நிச்சயம் கிடைக்கும்.

    Reply
  • அபூபக்கர்
    அபூபக்கர்

    நீங்கள் செய்வது நல்லதாயினும் தான் தோன்றித்தனமாக செயற்படும் புலிகள் மக்களை கேடயங்களாக பாவித்தை எதிர்த்தும் குரல் எழுப்புங்கள்.
    அத்துடன் இதையும் புரிந்து கொள்ளுங்கள்..!!

    இன்று நம்முடன் வாழும் இலங்கையர்களில் ஒரு சாரார் தற்போதைய அரசின் போக்கை கண்டிப்பவர்களாகவும் மற்றயவர்கள் மௌனிகளாகவும் இருக்கின்றனர். நாங்களோ அரசை அவர்களின் தற்போதைய கண்டிப்பான போக்கை விமர்சிப்பர்களாக இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அதன் நன்மை தீமைகளை உற்று நோக்க வேண்டும் நாம் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் எவர் பிரதமரானாலும் அவர்களிடம் காணப்படும் குறைகளை சுட்டிக் காட்டுவதற்கும் விமர்சிப்பதற்கும் இருக்கும் உரிமையைப் போலவே அந் நாடு மிகவும் நெருக்கடியான கால கட்டத்தை எதிர்நோக்கி ஒரு மக்கள் மீட்சியை மேற்கொள்ளும் போது அதை ஆதரிக்கின்ற கடமையும் இருக்கின்றது. இதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் விதிவிலக்கானவர்கள் காரணம் அவர்கள் விடுதலைப் புலிகளின் தவறுகளை எப்போதுமே கண்டித்தது கிடையாது அதற்கு விசில் அடித்து ஆசி வழங்குவர்கள் மட்டுமே.

    Reply
  • Pramesh
    Pramesh

    காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல விடயம். வாழ்த்துக்கள் அதில் புலிகள் பொது மக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டிய குரல் கொடுக்க வேண்டும் மட்டுமல்லாது அரசு தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சர்வதேசத்தின் முழு அங்கிகாரத்தையும் ராஜ தந்திரிகள் ஊடாக பெற்றுவிட்டது ஆகவே இருதரப்பு தவறுகளையும் சுட்டிக் காட்டுவதன் ஊடாகவே நிஜப் பிரச்சினையை சர்வதேசத்தின் காதுகளில் ஒலிக்கச் செய்து நமது மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியும்

    நன்றி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உடனடித் தீர்வு சிறைப்பட்டு அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கும் வன்னி மக்களை வெளிக்கொண்டு வருவதே! இது எவரால் சாத்தியமாகும்?.
    அதற்கான கோஷங்களை தெரிவு செய்யுங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனுக்கு சரணடைய கடைசி சந்தர்ப்பதை இராணுவம் அறிவித்துவிட்டது. அதையும் ஒரு வேண்டுகோளாக சேர்த்துக் கொள்வதா?

    Reply