அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இதே காலநிலை தொடரும்; மழை அதிகரிக்கும்

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிப்பதுடன், மழையும் அதிகரிக் கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிகூடிய மழைவீழ்ச்சி 90.7 மி. மீ. கினிகத்தேனவில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய காலநிலை காரணமாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும்.

ஈ. பி. டி. பி. பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி இன்று சந்திப்பு

douglas-devananda.jpgதமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி இன்று

இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாண்டு மாணவர்களை அனுமதிக்கும் சகல பாடத்துறைகளுக்குமான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக உயர்கல்வி அமைச்சர்எஸ்.பி. திசாநாயக்க பிரதி உயர்கல்வி அமைச்சர் என்.எம். ஏக்கநாயக்க ஆகியோர் வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜீ. சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத் தொழில்துறையை மையமாகக்கொண்டதாகவே நிகழ்காலத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடத்துறைகள் அமையுமெனவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த வகையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக கணினிக்கற்கைநெறி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் அனைவரும் அங்கேயே தமது பாடத்துறையை தொடரவேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் இடமாற்றம் அல்லது இணைப்புச் செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மலேஷிய,பினாங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இந்தியா வரத்தடை?

prof_ramasami.jpgமலேஷிய, பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனி.ராமசாமி இந்தியா வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சுக்கு தமிழக அரசு விடுத்துள்ளது. பேராசிரியர் ராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் பேசிவருபவர் என இந்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி ட்கோவையில் இடம்பெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் ராமசாமி வருகை தருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஹதிர் மொஹமட் நாளை இலங்கை வருகை

மலேசிய முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார். நாளை மாலை 5.45 மணியளவில் இலங்கை வரும் அவரை வரவேற்பதற்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வரும் மஹதிர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இங்கே தங்கியிருப்பார். அவர் இங்கிருக்கும் காலப் பகுதியில் பிரதமர் தி.மு. ஜயரட்னவை சந்தித்து பேச்சு நடத்துவாரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

iifaவின் சிறந்த திரைப்படத்திற்கான விருது “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்கு

iifa-colombo.jpgகொழும் பில் நடைபெற்ற iifa சர்வதேச இந்திய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது “பா” திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது “பா” திரைப்படத்திற்காக விஜய பாலனுக்கும், “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்காக கரீனா கப்பூருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்டார் பிளஸ் புதுமுக நடிகைக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த ஜெக்குலின் பெர்ணான்டஸ் பெற்றுக்கொண்டார்.

சிறந்த திரைப்படத்திற்கான விருது விது வினோத் சொப்ரா தயாரித்த “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் வழங்கப்பட்ட ஏனைய விருதுகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு :- 

ஸ்டார் பிளஸ் வருடத்தின் சிறந்த புதுமுக நடிகை :-  மாஹி கில்
ஸ்டார் பிளஸ் வருடத்தின் புதுமுக நடிகர் :- ஜாக்கி பக்னனி
குளோபல் கிறீன் விருது :- விவேக் ஒப ரோய்
சிறந்த இசையமைப்பாளர் :- பிரிதம் சக்ர போர்த்தி
சிறந்த பாடலாசிரியர்  :- ஸ்வானந்த் கேர்கிரே
சிறந்த பின்னணி பாடகி  :- கவிதா சேத்
சிறந்த பின்னணி பாடகர்  :- ஷான்
சிறந்த திரைக்கதை: 3 இடியட்ஸ்
சிறந்த ஒளிப்பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த வசனம்: 3 இடியட்ஸ்
சிறந்த பின்னணிஇசை: 3 இடியட்ஸ்
சிறந்த எடிட்டிங்: 3 இடியட்ஸ்
சிறந்த ஒலிப்பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த பாடல் பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த ஆடையலங்காரம்: அனாஹிதா ஷெரோப், டோலி அஹ்லுவாலியா
சிறந்த கலை இயக்குநர்: சாபு சிரில்
சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர்: ஷாம் கௌஷல்
சிறந்த மேக்அப் கிறிஸ்றீன் டின்ஸ்லே, டொமினி டில்

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

Sampanthan_Rநாளை (07-06-2010) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் வலியுறுத்தவிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா பயணமாகவுள்ள நிலையில் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே திரு. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை ஜனாதிபதியுடன் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் விபரங்களை என்னால் இப்போது முழுமையாக கூற முடியாது. வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் முதலில் கலந்துரையாடவுள்ளதாகவும், அடிப்படை வாழ்வாதார உதவிகளின்றி அம்மக்கள் அல்லல் படுவதாகவும் அவர்களுக்கான உதவிகளை உடனடியாக செய்தாக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கூட்டமைப்பினர் அங்குள்ள நிலைமைகள் குறித்து அறிக்கையொன்றைத் தாயரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நடாளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், போருக்குப் பின்னான மீள்குடியேற்றம், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பான விடயம், விடுதலைப் பலிகள் எனத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு  வழங்குவது போன்ற விடயங்களும் வலியுறத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதே வேளை, நாளை மறுதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அப்பயணத்தில் இணைந்து கொள்வார் என தெரியவருகின்றது.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் செல்கின்றனர். எனினும், குழுவில் யார்? யார்? அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப் படவுள்ளது.

கட்சிக்கு வெளியில் இருப்பவர்களே அதிக அழுத்தம் கொடுக்கின்றனர்-ரணில்

ranil.jpgகட்சிக்கு வெளியே இருப்பவர்களினாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மல்வத்த பீட மகாநாயக்க தேரர் வண.திப்படுவாவய ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று கண்டியில் வைத்து சந்தித்த போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்

கொழும்பில் கால்வாய் வழியாக பயணிகள் படகுச் சேவை- வெள்ளவத்தையிலிருந்து ஆரம்பம்

கொழும்பு கால்வாய் மார்க்கங்கள் ஊடாகப் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு திறந்த பல்கலைக் கழகத் திலிருந்து வெள்ளவத்தை வரை பல்கலைக் கழக மாணவர்களுக்கும் அதன் ஊழியர்களுக்குமாக கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்த படகுச் சேவை இப்போது பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றது.

கடந்த முதலாந் திகதியிலிருந்து இந்தப் படகுச் சேவையைப் பொதுமக்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனரென கடற்படையின் பேச்சாளர் கப்டன்அதுல செனரத் தெரிவித்தார். வெள்ளவத்தையில் காலை 7.30 முதல் 9.30 வரை படகுச் சேவை ஆரம்பிப்பதுடன் மாலை 4.30 முதல் 6.30 வரை நாவலையிலிருந்து சேவை ஆரம்பிக்கும் எனக் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பங்களாதேஷில் 3 நாள் துக்க தினம் – தீயில் கருகி இறந்தோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு

04-dakka-fire.jpgபங்களா தேஷ் தலைநகர் டாக்காவில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன் றில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களது சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன. 50 க்கும் மேற்பட் டவர்கள் எரிகாயங்களுடன் காப்பாற்றப்பட்டுள் ளனரென பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பங்களாதேஷில் மூன்று நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆறு மாடிகளைக் கொண்ட இந்த தொடர்மாடி குடியிருப்புகளுக்கு அருகில் இருந்த மின் மாற்றியொன்று வெடித்துச் சிதறியதிலேயே தீ பற்றிக் கொண்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தீ 300 அடி உயரத்துக்கும் மேல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்ததாகக் கூறினர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கட்டடத்துக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். காயம் அடை ந்தவர்கள், தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலைமை கவ லைக்கிடமாகவுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் பகுதியின் அருகில் உள்ள கயேட்டுவலி என்ற இடத்தில், வீடுகளில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தி இயங்கும் சிறு சிறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து சட்ட விரோதமாக இரசாயனங்கள் இங்கே வைக்கப்பட்டிருந்தது தான் தீ மள மளவென்று பரவியதற்குக் காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இட நெருக்கடியால் தீயணைப்பு வீரர்களால் முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. தீயை அணைப்பதில் காலையில் இருந்து தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இன்னும் பலர் அக்கட்டடத்துக்குள் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று அறிவித்தார். தீயில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்றும் தெரிவித்தார். சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மூன்று நிபுணர்கள் குழு இதை விசாரிக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 14 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.