தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிப்பதுடன், மழையும் அதிகரிக் கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிகூடிய மழைவீழ்ச்சி 90.7 மி. மீ. கினிகத்தேனவில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய காலநிலை காரணமாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும்.