கொழும்பில் கால்வாய் வழியாக பயணிகள் படகுச் சேவை- வெள்ளவத்தையிலிருந்து ஆரம்பம்

கொழும்பு கால்வாய் மார்க்கங்கள் ஊடாகப் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு திறந்த பல்கலைக் கழகத் திலிருந்து வெள்ளவத்தை வரை பல்கலைக் கழக மாணவர்களுக்கும் அதன் ஊழியர்களுக்குமாக கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்த படகுச் சேவை இப்போது பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றது.

கடந்த முதலாந் திகதியிலிருந்து இந்தப் படகுச் சேவையைப் பொதுமக்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனரென கடற்படையின் பேச்சாளர் கப்டன்அதுல செனரத் தெரிவித்தார். வெள்ளவத்தையில் காலை 7.30 முதல் 9.30 வரை படகுச் சேவை ஆரம்பிப்பதுடன் மாலை 4.30 முதல் 6.30 வரை நாவலையிலிருந்து சேவை ஆரம்பிக்கும் எனக் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *