அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

போர் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்தே இராணுவ முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன – இராணுவ பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgபடையினர், போர் சட்டவிதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் போர்ச் சட்டத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அச்செய்திச் சேவையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளின் மேற்படி குற்றச்சாட்டினை பாதுகாப்பு தரப்பு என்ற ரீதியில் நாம் முற்றாக மறுக்கின்றோம். வன்னியில் இடம்பெயர்ந்துத் தங்கியுள்ள பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர். நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. பொதுமக்களுக்கு சேதம் எற்படும் வகையில் படையினர் தமது இராணுவ முன்னெடுப்புக்களை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களைக் கருத்திற் கொண்ட பிறகே அவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் படையினரின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் வன்னியிலிருந்து வரும் பொதுமக்களை படையினர் மிகவும் அன்போடுதான் வரவேற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் படையினராலேயே வழங்கப்பட்டு பின்னர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அம்மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதிலும் படையினர் பின்வாங்கவில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கச் சென்றதில் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்துள்ளனர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் போர் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அவர்களே பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மேல் மாகாணத்தில் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி

sri-lanka-elections.jpgமேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் தேடுதல் 99 தமிழர்கள் கைது

ranjeth-gunasekara.jpgமாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி குறித்த மாவட்டத்தில் அடிக்கடி நடமாடியதாகவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

முன்தினம் நேற்று இரவு நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 2ஆயிரத்து 399 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மொரவக்க பிட்டபெத்தர மற்றும் தெனியாய போன்ற பகுதிகளிலுள்ள தொட்டப்புரங்களிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் போது 759 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 2ஆயிரத்து 399 பேர் தீவிர விசாரணைகளுக்கு எட்படுத்தப்பட்டனர். இவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறிய 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் போது கைதான அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. ஊழியரை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு

19a8fd8bfa777b52.jpg இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும், 16 வயதுடைய அவரது மகள் உட்பட அவரது குடும்பத்தினரையும் அரசினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து புலிகள் ஆட்சேர்த்திருக்கின்றார்கள் என்று கொழும்பிற்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, தாமதிக்காமல் இவர்களை புலிகள் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நாவின் இன்னொரு உள்ளூர் பணியாளர் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்.

worldbank.jpgசர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள கடனை வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சர்வதேச நாணயநிதியத்திடம் கோரியுள்ள கடனை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுந்திரம் நாட்டில் பாதுகாக்கப்படல் ரூபாவின் பெறுமதியைப் பேணுதல் சகல நிவாரணங்களையும் விலக்கிக்கொள்ளல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

‘வற்’ வரி மோசடி: 200 வவுச்சர்கள் திணைக்கள உயரதிகாரிகளால் அழிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெற்ற ‘வற்’ வரி மோசடியுடன் தொடர்புடைய 200 வவுச்சர்களை திணை க்கள உயரதிகாரிகள் சிலர் அழித்துள்ளதாக மேற்படி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

‘வற்’ வரி மோசடி தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பரணகம முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ஆணைக் குழு முன்பாக சாட்சியமளித்த பிரதான சாட்சி ஒருவர் மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது மேற்படி வவுச்சர்களில் 53 வவுச்சர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளதாகவும் சாட்சி கூறினார்.

‘வற்’ வரி மோசடியுடன் இறைவரித் திணைக்கள முன் னாள் ஆணையாளர் ஏ. ஏ. விஜேபால, பிரதி ஆணையாளர் இஸட். ஜயதிலக, கம்பியூட்டர் பிரிவு தலைவர் வத்தேதெனிய ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வற்’ மோசடி தொடர்பாக தன்னை கைது செய்ய பொலிஸார் தயாராவதாக தகவல் கிடைத்ததையடுத்து வத்தேதெனிய தற்கொலை செய்துகொண்டதாகவும் சாட்சி இங்கு குறிப்பிட்டார்.

ஆனால் வத்தேதெனிய மாரடைப்பினால் இறந்ததாகவே தனக்கு தகவல் கிடைத்ததாக ஆணைக் குழு தலைவர் கூறினார். சாட்சியின் விசாரணையை சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி பீ. தொடவத்த நெறிப்படுத்தினார்.

புதுமாத்தளனில் புலிகளின் காவல் நிலையம் படையினரால் மீட்பு!

ltte_police.pngபுதுக் குடியிருப்பு பகுதியில் புலிகளுக்கெதிராக கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் படையினர் நேற்று புலிகளின் காவல் நிலையம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ-39 வீதியில் புதுமாத்தளன் பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருந்த புலிகளின் இந்தக் காவல் நிலையத்தை நேற்றுக் காலை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 8ஆவது கஜபா படையணியினர் பல மணிநேர கடும் தாக்குதல்களின் பின்னர் கைபற்றியுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற மோதல்களின்போது 9 எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். படை வீரர்கள் சிலரும் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

முள்ளியவெளி பகுதியில் புலிகள் நடாத்தி வந்த காவல் நிலையமே புதுமாத்தாளன் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்ததாக களமுனையிலுள்ள படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாயன்மார்கட்டில் இராணுவத்தினர் மீது கிரனைட் தாக்குதல்.

jaffna.jpgயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் நேற்று (15.03.2009) இரவு 8.30 மணியளவில் இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரம் மீது புலிகள் கிரனைட் தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரியவருகின்றது. குறித்த வீதியூடாக உணவு எடுத்துச் சென்ற இராணுவத்தினர் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாகவும் எனினும் இதன்போது காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தப்பி வருவோர் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் பலி! – ஐ.நா. வின் பெண் பணியாளருக்கும் காயம்

navy_civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை நோக்கி வருகை தந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நேற்று 5 படகுகள் மூலம் 66 பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தப்பி வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முனைப் பிரதேசத்தை நோக்கி வருகை தந்த இந்த சிவிலயன்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படகில் வந்த தவநாயகம் தனூஷன் எனும் 9 வயது சிறுவன் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

புலிகளின் இத்துப்பாக்கிச் சுட்டில் 14 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் ஐ.நா. வின் பெண் பணியாளரான சுதர்ஷினி தர்மிலா என்பவரும் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 ஆண்கள்,17 பெண்கள்,15 சிறுவர் மற்றும் 11 சிறுமியர் அடங்கலான இந்த 66 பேரையும் சுன்டிக்குளம்-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.   

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் 440 பொதுமக்கள் அழைத்து வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காயமடைந்தோர் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை 265. இவர்களுக்கு வழித்துணையாக வந்த உறவினர்களின் எண்ணிக்கை 175. இவர்களில் இருவர் வரும்போது உயிரிழந்தனர்.
 
01. ஹரிஹரன், கிளிநொச்சி, (வயது 23),
02. ஏ. வித்தியா, முள்ளியவாய்க்கால் (வயது 23),
03. கோவழகி, முள்ளியவாய்க்கால், (23 வயது),
04. பிரசன்னா, பொக்கணை, (வயது 11),
05. பி. பிரேமலதா, பொக்கணை, (வயது 08),
06. பி. கௌரி, அம்பலன்பொக்கணை, (வயது 43),
07. பி. நவநீதேன், மாத்தளன், (வயது 27),
08. என். அரசி, மாத்தளன், (வயது 26),
09. சடாட்சரலட்சுமி, கிளிநொச்சி, (வயது 60),
10. எம். அழகம்மா, ஒட்டுசுட்டான், (வயது 54),
11. மாஸ்டர் கோகுலன், கிளிநொச்சி, (வயது 08),
12. எம். மகாதேவன், முள்ளியவாய்க்கால், (வயது 57),
13. கஜிதரன், வலையர்மடம், (வயது 26),
14. கலைச்செல்வி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 36),
15. ஜீவானந்தன், புதுக்குடியிருப்பு, (வயது 37),
16. கலைச்செல்வன், புதுக்குடியிருப்பு, (வயது 1.5),
17. ராமு துரைராஜா, பூநகரி, (வயது 55),
18. ரி. சாந்தகுமாரி, குமுழமுனை, (வயது 47),
19. எஸ். செல்வராணி, ஒட்டுசுட்டான், (வயது 63),
20. தர்மகலாதேவி, குமுழமுனை, (வயது 57),
21. பூவரசன், பூநகரி, (வயது 02),
22. ரி. கவிதா, பூநகரி, (வயது 26),
23. பவானி, மல்லாவி, (வயது 25),
24. அனுஷியா, மல்லாவி, (வயது 04),
25. பெயர் தரப்படவில்லை.
26. சிவானி, கிளிநொச்சி, (வயது 48),
27. அகிலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),
28. சிவமுகா, பூநகரி, (வயது 1.5),
29. பெருமகை, உடையார்கட்டு, (வயது 62),
30. வை. ஹரிஹரன், உடையார்கட்டு (வயது 26),
31. வைத்திலிங்கம், புங்குடுதீவு,
32. ஈ. சரஸ்வதி, (வயது 60),
33. சுதர்சன், இரணைப்பாலை, (வயது 27),
34. சோதிநாதன், இரணைப்பாலை, (வயது 69),
35. விக்னேஸ்வரன், முரசுமோட்டை, (வயது 59),
36. ஜே. சாஜாய், முரசுமோட்டை, (வயது 01),
37. வசந்தகுமாரி, முரசுமோட்டை (வயது 37),
38. புருசோத்துமன், நெடுங்கேணி, (வயது 06),
39. ஆர். ராஜேந்திரன், நெடுங்கேணி, (வயது 30),
40. அவசர சிசிச்சைப்பிரிவில்.
41. பிரசாந்தி, சிவபுரம், (வயது 16),
42. எஸ். கோபிகா, புதுக்குடியிருப்பு, (வயது 21),
43. சபாரத்தினம், கிளிநொச்சி, (வயது 44)
44. அமுதாஜினி, கிளிநொச்சி, (வயது 19),
45. பி. முருகையா, கிளிநொச்சி, (வயது 58),
46. பி.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது 53),
47. தில்லைநாதன், துணுக்காய், (வயது 63),
48. ரி. தங்கம்மா, கிளிநொச்சி, (வயது 61),
49. திவ்வியன், கிளிநொச்சி, (வயது 04),
50. கஜந்தினி, கிளிநொச்சி, (வயது 25),
51. சுபாஷினி, பாலமுனை (வயது 30),
52. சுலக்ஷனா, பாலமுனை, (வயது 18),
53. மதுஷா, பாலமுனை, (வயது பத்து மாதம்),
54. கேதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 30),
55. பிரியங்கா, பாலமோட்டை, (வயது 07),
56. ரத்தினம், பாலமோட்டை, (வயது 60),
57. சுபாஷினி, பாலமோட்டை, (வயது 30),
58. எம். ரமேஷ், கிளிநொச்சி, (வயது 25),
59. கே. சந்தனம், கிளிநொச்சி, (வயது 62),
60. விஜேகுமார், மாத்தளன், (வயது 32),
61. கனகதேவி, பரந்தன், (வயது 32),
62. உகதீஸ், பரந்தன், (4 மாதம்),
63. நாகபூஷனி, பொக்கணை, (வயது 49),
64. வி. ரஞ்சன், (வயது 12),
65. கீதரூபா, கிளிநொச்சி, (வயது 23),
66. பார்வதி, கிளிநொச்சி, (வயது 64),
67. சுப்பையா, கிளிநொச்சி, (வயது 65),
68. எஸ். சிவானந்தனி, நெடுங்குளம், (வயது 36),
69. வேலு, கிளிநொச்சி, (வயது 69),
70. கே. மயில்வாகனம், முள்ளியவளை, (வயது 60),
71. செல்வநாயகம், முள்ளிக்குளம், (வயது 53),
72. சுப்பையா, சுதந்திரபுரம், (வயது 65),
73. ஜுடித்ருஷா, மாத்தளன், (வயது 36),
74. பரமேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 63),
75. தினா, புங்குடுதீவு, (வயது 03),
76. மேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 39),
77. பிரவினா, புங்குடுதீவு, (வயது 07),
78. பார்த்தஸ்ரீ, புங்குடுதீவு, (வயது 12),
79. கிட்ணர், கொடிகாமம், (வயது 62),
80. பிரிங்கா, காரைதீவு, (வயது 08),
81. ரஞ்சனி, காரைதீவு, (வயது 27),
82. பிரசிந்தன், நடுகண்ணி, (வயது 10),
83. அனோஜன், நடுங்கண்னி, (வயது 08),
84. குணராஜா, விசுவமடு, (வயது 52),
85. வீரசிங்கம், மூங்கிலாறு, (வயது 56),
86. தவமணி, பயிரத்தம்பண்ணை, (வயது 59),
87. மாருதரஞ்சிதம், நடுகண்ணி, (வயது 87),
88. தனுஷியா, யாழ்நகர், (வயது07),
89. பரமேஸ்வரி, புத்தளம், (வயது 33),
90. தயாளன், யாழ்நகர், (வயது 32),
91. காத்தமுத்து, நெடுங்கேணி, (வயது 72),
92. திவாந்திரன், சுதந்திரபுரம், (வயது 63),
93. ஏ. தயாகரன், துணுக்காய், (வயது 30),
94. வண்ணுவன், பாலமோட்டை, (வயது 03),
95. ஜெயசீலன், பாலமோட்டை, (வயது 30),
96. டின்னோ, மாத்தளன், (வயது 02),
97. அம்ஷா, யாழ்ப்பாணம்,
98. செல்வரஞ்சினி, மாத்தளன், (வயது 25),
99. குணநாயகி, உடையார்கட்டு, (வயது 48),
100. சசிகுமார், பாலமோட்டை, (வயது 32),
101. ராமதாஸ், கிளிநொச்சி, (வயது 45),
102. பிரிங்ககா, பாலமடு, (வயது 10),
103. மரியாயி, கிளிநொச்சி, (வயது 60),
104. ரட்னேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 63),
105. சசிரேகா, முரசுமோட்டை, (வயது 25),
106. சபாபதிப்பிள்ளை, முள்ளியவளை (வயது 84),
107. ராதிகா, மாத்தளன், (வயது 30),
108. ஜீவிதா, நெடுங்கேணி, (வயது 14),
109. வளர்மதி, திருகோணமலை, (வயது 11),
110. மதுஷா, திருகோணமலை, (வயது 08),
111. ஜெனோட்ராஜா, திருமலை, (வயது 23),
112. மலர், திருகோணமலை, (வயது 33),
113. மதுஜா, திருகோணமலை, (வயது 03),
114. கமில்டன், கிளிநொச்சி, (வயது 13),
115. சரஸ்வதி, கிளிநொச்சி, (வயது 53),
116. சுந்தரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 50),
117. கேதீஸ்வரநாயகி, நாச்சிக்குடா, (வயது 39),
118. இனியவன், நாச்சிக்குடா, (வயது 01),
119. எம். மதுராஜ், வள்ளானை, (வயது 03),
120. சிந்துஜா, வள்ளானை, (வயது 08),
121. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
122. அருட்செல்வம், வலையர்மடம், (வயது 30),
123. வி. அரவானன், வலையர்மடம், (வயது 1.5),
124. உவனேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 24),
125. தாரனிக்கா, கிளிநொச்சி, (வயது 03),
126. நகுலேஸ்வரன், பூநகரி, (வயது 24),
127. எஸ். பூங்காவனம், யாழ்நகர், (வயது 63),
128. ஜெயசிங்கம், யாழ்ப்பாணம், குருநகர், (வயது 37),
129. எஸ். பத்தினிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 80),
130. மரியதாஸ், கிளிநொச்சி, (வயது 61),
131. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
132. மாரியம்மா, கிளிநொச்சி, (வயது 82),
133. குளநாயகம், மன்னார், (வயது 52),
134. சம்புலிக்குசும், முல்லைத்தீவு, (வயது 42),
135. சர்மிலா, மணல்குடியிருப்பு, (வயது 23),
136. சதுர்ஷன், மணல்குடியிருப்பு, (வயது 03),
137. ஜெ. செல்வராணி, உடையார்கட்டு, (வயது 53),
138. ஜெயமலர், முள்ளியவளை, (வயது 28),
139. புலேந்திரன், முள்ளியவளை, (வயது 64),
140. வி.கருஜன், கிளிநொச்சி, (வயது 13),
141. நிஷாந்தினி, யாழ்நகர், (வயது 12),
142. வி. நிதுஷா, கிளிநொச்சி, (வயது 08),
143. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 05),
144. சிந்துஜன், கிளிநொச்சி, (வயது 09),
145. பேரழகி, கிளிநொச்சி, (வயது 30),
146. ஜெயதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 45),
147. தீபன், யாழ்ப்பாணம், (வயது 23),
148. ரி. காசிதா, துணுக்காய், (வயது 26),
149. துவாரகா, துணுக்காய், (வயது 4.5),
150. எஸ். பொன்னம்மா, வட்டக்கச்சி, (வயது 57),
151. வாசலிங்கம், மாங்குளம், (வயது 51),
152. கே. ராஜா, கைவேலி, (வயது 65),
153. லேதிஸ்லெஸ், கிளிநொச்சி, (வயது 74),
154. சுப்பிரமணியம், மன்னார், (வயது 60),
155. மேரிஅக்னா, மணல்காடு, (வயது 23),
156. கனகி, பாலமடு, (வயது 80),
157. சாந்தபுஷ்பம், கரவெட்டி, (வயது 50),
158. கோபிதன், கரவெட்டி, (வயது 06),
159. அனிஷன், மாத்தளன், (வயது 1.5),
160. கோமதி, மாத்தளன், (வயது 30),
161. கல்யாணி, மாத்தளன், (வயது 50),
162. சாந்தன், மருதநகர், (வயது 26),
163. சிவரஞ்சினி, தர்மபுரம், (வயது 32),
164. திவாகரன், தர்மபுரம், (வயது 3.5),
165. கமல்ராஜ், தர்மபுரம், (வயது 09),
166. புஸ்பவதி, கிளிநொச்சி, (வயது 47),
167. எஸ். முத்துலிங்கம், நெடுங்கேணி, (வயது 55),
168. எம்.ரஜீவன், விசுவவடு, (வயது 09),
169. ரஜீதா, விசுவமடு, (வயது 26),
170. அபிஷேக், கிளிநொச்சி, (வயது 1.5),
171. திருமுகம், கிளிநொச்சி, (வயது 26),
172. ஆர். துண்டியம்மா, முல்லைத்தீவு, (வயது 54),
173. சத்ரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 38),
174. சத்தியசீலன், முல்லைத்தீவு, (வயது 02),
175. மல்லிகா, தர்மபுரம், (வயது 38),
176. ஜசிவன், தர்மபுரம், (வயது 07),
177. வி. புலந்தன், கிளிநொச்சி, (வயது 59),
178. வி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 73),
179. ஆர். கோபிநாத், கிளிநொச்சி, (வயது 10),
180. சஞ்சீவன், கிளிநொச்சி, (வயது 08),
181. ராஜேந்திரன், கிளிநொச்சி, (வயது 50),
182. சின்னத்தம்பி, முள்ளியவளை, (வயது 69),
183. சகுந்தலா, கிளிநொச்சி, (வயது 36),
184. தசாந்தன், கிளிநொச்சி, (வயது 04),
185. சுகந்தி, கிளிநொச்சி, (வயது 25).