அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் 24% அதிகரிப்பு -யு.என்.எச்.சி.ஆர். தெரிவிப்பு

sri-lanka-air-lanka.jpgஇலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தால் கைத்தொழில் துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுமக்கள் புகலிடம் கோருவது அதிகரிக்கும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த வருடம் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கைத்தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கோரி 2008 இல் 3 இலட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இது 2007 ஐ விட 12 சதவீதம் அதிகமாகும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். ஆப்கான், சோமாலியா நாடுகளிலிருந்தே அதிகளவு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோர் விண்ணப்பங்கள் கடந்த வருடம் 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.  புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததால் இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோரின் தொகை அதிகரித்திருப்பதாக யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.

165 அதிபர்களால் மட்டுமே பதவி விலகல் கடிதங்கள் கையளிப்பு

மூவாயிரம் அதிபர்கள் தமது விலகல் கடிதத்தை வழங்குவதாக கூறியபோதும் 165 பேர் மட்டும் நேற்று (25) தமது விலகல் கடிதங்களை கையளித்ததாக கல்வி அமைச்சு நேற்று (25) தெரிவித்தது. கையளிக்கப்பட்ட விலகல் கடிதங்கள் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு தயாரிக் கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்து மூவாயிரம் அதிபர்கள் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களை அமைச்சிற்கு வழங்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் தொழில்சார்ந்தோர் தொழிற் சங்கம் அறிவித்திருந்தது. அதிபர்கள் விலகல் கடிதங்களை கையளித்தால் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் அறிவித்திருந்தார்.

இதன்படி, விலகல் கடிதங்களை கையேற்பதற்கென மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு கூறியது. ஆனால், பதவி விலகுவதாகக் கூறும் படிவம் ஒன்று கல்வி அமைச்சில் உள்ள சில நபர்களிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு அவை ஒழுங்கான முறையில் நிரப்பப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்படுகிறது. சில படிவங்களில் போலியான ஊர், பெயர்கள் இடப்பட்டிருந்தன என கல்வி அமைச்சு தெரிவித்தது.

ஒழுங்கான ஒரு விலகல் கடிதம் கூட கையளிக்கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு கூறியது. இவற்றை உண்மையில் அதிபர்கள் தான் கையளித்தனரா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிபர்களின் பிரச்சினைகளை தீர்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதோடு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைப்பது தாமதமானதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார். பொதுச்சேவை ஆணைக் குழுவின் அனுமதி தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, விலகல் கடிதம் கையளிக்க வரும் சகலருக்கும் அமைச்சு வளாகத்திற்குள் சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு அங்கு வந்திருந்த ஐந்து அதிபர்களுடன் அமைச்சின் மேலதிக செயலாளர் பேச்சு நடத்தியுள்ளார். அதிபர்களின் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அவர் இங்கு விளக்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

எமது உரிமைகளை முழுமையாக பெறுவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

minister.jpgஇலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் ஜனநாயக வழிக்கு வந்த நான் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெறுவதற்காகத் தொடர்ந்தும் உழைப்பேன். அதற்கு மக்களுடைய ஆதரவு தேவையாகும் என சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா நெளுக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு புலிகளுக்கு ஐந்து தடவைகள் நிறையச் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டார்கள். நானும் கூட ஒரு காலத்தில் ஆயுதமேந்தி போராடியவன். பின்னர் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என அறிந்து கொண்டு ஜனநாயக வழிக்குத் திரும்பியவன் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது;

ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் உங்களின் ஒருவனாக இருப்பதினால் தான் இங்கு வந்துள்ளேன். யுத்தம் எவ்வளவு கஷ்டமானது என்பதனையும் இடம்பெயர்வு என்பது அதனைவிட கஷ்டமானது என்பதையும் உணர்ந்தவன். இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் என்ன என்பதை ஏற்கனவே அறிந்து கொண்டபோதிலும் இங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவே நான் வந்துள்ளேன்.

மக்களுடைய உயிர் வாழ்வதற்குரிய உத்தரவாதம் முக்கிய பிரச்சினை. இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ள உங்களுக்கு அந்த உத்தரவாதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக வழிக்கு வந்த பின்னர் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை ஆக்கபூர்வமாக தான் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். புலி தலைமையானது தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புறந்தள்ளிவிட்டு அழிவை ஏற்படுத்தும் யுத்தத்தினை நடத்திவருகின்றார்கள். அவர்களுடைய பிடியிலிருந்து விடுபட்டு வரும் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இறுதிப் பதவியும் பறிபோனது

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர்களின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த இறுதிப் பதவியும் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தனகல்ல ருவான்புர தொகுதி அமைப்பாளர் பதவியையும் சந்திரிகா இழந்துள்ளார் என இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் முன்னோடியாக சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ருவன்புர தொகுதி அமைப்பாளர் பதவியினை சந்திரிகா கடந்த 18 வருட காலமாக வகித்து வந்தார்.

வர்ஷா படுகொலை சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாது திருமலை மக்கள் கோரிக்கை,

Regie_Varsa
திருகோணமலையில் 6 வயது சிறுமி ஜூட் ரெஜி வர்ஷா படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

சிறுமி வர்ஷாவின் கொலையை தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கியர் ஆகிய சகல இனமக்களும் கண்டிப்பதாக அப்பதாதைகளில் குறிப்பிட்டு கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சார்பில் சடத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் 26 ஆம் திகதி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட 2007/2008 ஆம் கல்வியாண்டின் 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வருடங்களுக்கான அரையாண்டுப் பரீட்சைகள் யாவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் நாளை 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நடைபெறுமென கலை, கலாசார பீடாதிபதி செல்வி சி.பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு மாணவர்கள் பீடாதிபதியுடனோ (தொலைபேசி இலக்கம் 0652240165/0652240971) அல்லது சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/பரீட்சைகள் பிரிவுடனோ (தொலைபேசி இலக்கம் 0652240584) உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருமலை மாவட்டத்தில் கந்தளாயில் ஐந்து விவசாயிகள் சுட்டுக்கொலை: இருவர் காயம்

pisto.jpgதிருமலை மாவட்டத்தில் கந்தளாய்,சேருநுவர மெஹிவத்தை பமுனுவல பிரதேசத்தில் ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.00,மணிக்கும் 11.00,மணிக்குமிடையே துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் இந்தப் பிரதேசத்துககுள் நுழைந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது

உலகத்தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

Vanni_Missionபுலம் பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான முயற்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பொருட் சேகரிப்பில் தாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக “வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குண்டு மழையினால் அல்லலுறும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சை மருந்துகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய பெருமளவு நிதி தேவைப்படுகிறது.

அத்தோடு கப்பல் செலவும் குறிப்பிடும்படியாக உள்ளது. “ஆகவே இந்த முயற்சியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” எனக் குறிப்பிடும் ஏற்ப்பாட்டாளர்கள் நிதியுதவி செய்யப் பின்வரும் இலக்கங்களினூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

“வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழு
இலண்டன்

Call Centre open from 9AM to 9PM ( GMT) London Time

00 44 (0)20 3393 6650
00 44 (0)84 5527 7155

நாட்டில் சர்வதேச தலையீட்டை ஏற்படுத்த புலிகள் தீவிர முயற்சி – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குற்றச்சாட்டு

axman-yappa.jpg
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளவேளையில்  அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அதனைத் திசைத் திருப்புவதற்கு புலிகள் சர்வதேசத்தின் தலையீட்டை நாட்டில் ஏற்படுத்த முற்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில உலக நாடுகளும் சில சர்வதேச அமைப்புக்குளும் புலிகள் சார்பாகவே குரல் கொடுக்கின்றன. அவை 90 வீதமான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தும் அதேவேளை பத்து வீதமளவில் மட்டுமே புலிகள் மீது சுமத்துகின்ற. இவ்வாறான தலையீடுகளில் சிக்காமல் இருப்பதற்காக மிகவும் கவனமாக அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அழுத்தம் தேவையில்லை. அதனடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டிலும் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அமெரிக்க அலாஸ்கா மாநில எரிமலை குமுற ஆரம்பிப்பு

ea.jpgஅமெரிக்க அலாஸ்கா மாநிலத்திலுள்ள றிடவுட் எரிமலையானது குமுறி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு புகையை வெளித்தள்ள ஆரம்பித்துள்ளது. முதல் தடவையாக ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு குமுறிய இந்த எரிமலை மறுநாள் திங்கட்கிழமை 4 தடவைகள் குமுறியுள்ளது.

இந்நிலையில் எரிமலையிலிருந்து விசிறப்பட்ட சாம்பலானது அலாஸ்கா மாநிலத்தில் மிகப் பெரிய நகரான அன்சொரேஜ் பகுதியில் விழுந்துள்ளது. இந்த சாம்பலால் விமானங்களின் இயந்திரங்கள் பாதிப்படையலாம் என்பதால் அலாஸ்காவுக்கான 19 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் அன்சொரேஜ் நகரிலுள்ள எலமென்டோர்ப் விமானப் படைத் தளத்திலிருந்து டசின் கணக்கான விமானங்களை இந்த விசிறப்படும் சாம்பலிலிருந்து பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு முன் இந்த எரிமலையானது 1989 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான 4 மாத காலப் பகுதியில் குமுறியது.