முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இறுதிப் பதவியும் பறிபோனது

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர்களின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த இறுதிப் பதவியும் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தனகல்ல ருவான்புர தொகுதி அமைப்பாளர் பதவியையும் சந்திரிகா இழந்துள்ளார் என இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் முன்னோடியாக சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ருவன்புர தொகுதி அமைப்பாளர் பதவியினை சந்திரிகா கடந்த 18 வருட காலமாக வகித்து வந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *