அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

380 மெ. தொ. உணவு பொருட்கள் விமானம் மூலம் விநியோகம்

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு விநி யோகிக்கவென விமானம் மூலம் மாத்திரம் 21 திகதி முதல் நேற்று வரை 350 மெற்றிக் தொன் சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தரைவழியாக பொருட்கள் மற்றும் உலர் உணவுகளை விமானப் படையினர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

பொது மக்களுக்கு தேவை யான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப்படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறிகள் மூலமும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கென சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமைத்த உணவுப் பொதிகள், பேக்கரி உற்பத்திப் உணவுப் பொருட்கள், பால், தண்ணீர் போத்தல்கள், குடிபான வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 350 மெற்றித் தொன் பொருட்களையே விமானப் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

வன்னியில் அகதிகள் வருகை அதிகரிப்பு புல்மோட்டையிலும் முகாம் அமைகிறது

Wanni_War_Welfare_Campவன்னியில் இருந்து புல்மோட்டைக்கு வருகின்ற அகதிகள் தொகை தினமும் அதிகரித்து வருவதால் புல்மோட்டையில் இடைத்தங்கல் முகாம் ஒன்றை அவசர அவசரமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புல்மோட்டை அநுராதபுரம் வீதியில் 13 ஆவது மைல் கல்லில் உள்ள 100 ஏக்கர் காணியில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட அர சாங்க அதிபர் ரஞ்சித் டீ சில்வா மற்றும் திருகோணமலை கடற்படை கட்டளைத்தளபதி ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை இங்கு விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டனர்.

5000 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் இந்த இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இந்த வேலைகள் குச்சவெளி பிரதேச செயலர், கிண்ணியா பிரதேச செயலர், பதவிசிறிபுர பிரதேச செயலர் மற்றும் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில தினங்களில் இந்தவேலைகள் முடிவுறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலைஞர்மடம் இராணுவத்தினரால் விடுவிப்பு

இராணு வத்தின் 58 ஆம் படையணியினர் வலைஞர்மடம் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இருந்து 6கிலோமீற்றர் தொலைவில் வலைஞர்மடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உண்ணாவிரதத்தை முடித்த பெண்கள் – தேர்தல் பிரசாரத்தில்….

womens-fast-ends.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக சென்னையில் பெண்கள் கூட்டமைப்பு நடத்தி வந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பேர் கடந்த 13-ந் தேதி முதல் மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 5 பெண்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை மற்றும் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக போராட்டக் குழு தலைவர் பேராசிரியை சரஸ்வதி அறிவித்தார்.

இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், சோனியாவே போரை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் நடத்திய இந்த போராட்டத்தை சோனியா காந்தி தாயுள்ளத்தோடு செவி சாய்ப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவரிடம் இருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக காங்கிரசின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இன்னும் 2 நாட்களில் சோனியாவிடம் இருந்து உரிய பதிலை பெற்றுத் தருவதாக கூறியதை ஏற்று 5 நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வரவில்லை. எனவே தமிழினத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்த கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டோம்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைத் தேர்தலை நோக்கி முழுமையாக திருப்பிய நிலையில் நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகத்தின் கவனத்தை தமிழின அழிப்புக்கு எதிராக திருப்பி இருப்பது எங்களுக்கு நிறைவை தருகிறது. கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் களம் இறங்கியுள்ள நிலையில், நீதிபதி கிருஷ்ணய்யர், மேதா பட்கர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வது, தொடர் உண்ணாவிரதம், தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் பிரசாரம் ஆகியவற்றை செய்ய இருக்கிறோம்.எங்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இடம் தந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு நன்றி கூறுகிறோம் என்றார் அவர்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகி மீனா கிருஷ்ணசாமி, உண்ணாவிரதம் இருந்த 15 பெண்களுக்கும் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்தியாவுக்குள் 31 தீவிரவாதிகள் ஊடுருவல்

india.jpgபாகிஸ் தானில் இருந்து,  இந்தியாவுக்குள் 100-ல் இருந்து 120 பேர் வரை கொண்ட ஒரு கூட்டத்தினர் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதி வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.

இவர்களில் 31 பேர் தீவிரவாதிகள். மற்றவர்கள், அவர்களுக்கு வேண்டிய வெடிபொருள், ஆயுதங்கள், உணவுப்பொருள் போன்றவற்றை சுமந்து செல்லும் போர்ட்டர்கள் மற்றும் வழிகாட்டிகள். இந்த தகவலை, இந்திய ராணுவ பிரிகேடியர் குர்மீத் சிங் ஸ்ரீநகரில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்திய பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் 18 நாள் முதல் 90 நாள் வரை பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள்.

குரேஸ் பகுதியில் இப்போது அதிக அளவில் பனிக்கட்டிகள் உருவாகி உள்ளன. எனவே, எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு விட்டன.இதை பயன்படுத்தி, தீவிரவாதிகள் அந்த வழியாக இந்தியாவுக்குள் வந்து விட்டனர்” என்றார்.

யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா?

unp.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில் கூறியதாவது;

யுத்த முன்னெடுப்பின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் நிவாரண உதவிகளை அரசாங்கம் உரிய முறையில் வழங்க வேண்டும், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாம் திடமாகவுள்ளோம். அதேவேளை நீண்டகாலமாக சமாதானமொன்றை அரசு ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான அரசியல் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இனியும் யுத்தத்தை இந்த அரசு விற்பனை செய்ய முடியாது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஊடகம் ஆற்றும் பங்கு அளப்பரியது. முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கவென ஐ.தே.கட்சி நிவாரணப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஐ.நா. அனுப்பும் 5000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு விரைவில் வரும்.

UN_Logoஇலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்குத் தேவையான 5,000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு “அழுத்தம்’ என்ற கேள்விக்கே இடம் இல்லை – இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆனந்த் சர்மா

india.jpgமோதல் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக இந்தியா இரு உயர் அதிகாரிகளை இலங்கைக்கு நேற்று அனுப்பியுள்ளபோதும் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் “தெரிவுகள்’ மட்டுப்படுத்தப்பட்டவையென்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

என்.டி.ரி.வி. தொலைக்காட்சி சேவைக்கு நேற்று வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ள ஆனந்த் சர்மா.

அழுத்தம் என்பது பற்றி இங்கு கேள்விக்கு இடமில்லை. எமது கவலையை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இதனைவிட நாம் மேற்கொள்ள வேண்டிய வேறு மேலதிகமான இராஜதந்திர நடவடிக்கை என்ன? நாம் இராஜதந்திர மார்க்கத்திலான சகல வழிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளோம் என்று ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூறுவதை இலங்கை செவிமடுக்குமா? என்பது பாரிய கேள்வி என்று என்.டி.ரி.வி. கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள இறுதி கட்ட நடவடிக்கை தொடரும் என்றும் சர்வதேச அழுத்தத்தினால் அதனை கைவிடப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவாக கூறியிருந்ததையும் என்.டி.ரி.வி. சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைசிறுத்தைகள் கட்சி திமுகவுடன்தான் கூட்டணி- எங்களுடன் இல்லை: காங்கிரஸ்

thiruma_8-4.jpgஇலங்கை போர் நிறுத்தத்திற்கு உண்மையாக முயற்சி செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, உங்கள் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் வயலார் ரவி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,  ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசுடன் இல்லை’’ என்று தெரிவித்தார்.

பண்டாரநாயக்கவின் புரட்சிகர அரசை நிறுவ உந்து சக்தியாக இருந்தவர்கள் ராஜபக்ஷாக்களே -நிருபமா ராஜபக்ஷ

“1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கவின் புரட்சிகரமான அரசாங்கத்தை நிறுவுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்களும் கிராமிய மண்வாசனையை கொண்டவர்களும் ராஜபக்ஷாக்களே’என்று அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பெலியத்தை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சு.கட்சியின் புதிய அமைப்பாளருமான நிருபமா ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிட்டினா மதுறு என்ற இடத்தில் வீட்டுக்கு வீடு தனது புதிய அமைப்பு வேலைகள் தொடர்பான பிரசார நடவடிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிருபமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது;

“மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்றபோது சில நகரவாசிகளுக்கும் சில நகரசபை உறுப்பினர்களுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டது. காரணம், 56 புரட்சிகரமான அரசியல் ஏடு புரட்டப்பட்டதும் கிராமப்புறவாசிகளே சகல துறைகளிலும் முன்னுரிமை பெறுவார்கள். ராஜபக்ஷாக்கள் அவர்களுக்கு உதவி புரிவார்கள் என்ற எண்ணமே நகர வாசிகளின் அச்சப்பாட்டுக்குக் காரணியாக அமைந்தது.

நாட்டின் அரசியலில் பாராளுமன்றத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் சென்றது ராஜபக்ஷ குடும்பத்திலேயே உள்ளது. நாம் என்றும் கிராமவாசிகளின் இன்பதுன்பங்களில் பங்கேற்ற வண்ணமே இருக்கின்றோம். இதனால் தான் கிராம மக்களின் ஆதரவு எமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எனது தந்தை ஜோர்ஜ் ராஜபக்ஷ முதலாவது மீன்பிடி அமைச்சராக இருந்து மக்களுக்கு விசேடமாகக் கடற்றொழிலாளருக்குச் சேவை செய்ததோடு, சுகாதார அமைச்சராக இருந்தும் பெரும் பணிகளைச் செய்தார். அதேபோல் என் அண்ணாவான மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து இன, மதபேதம் பாராது முழு நாட்டுக்கும் பணிசெய்கிறார். வடக்கையும் கிழக்கையும் மீட்டெடுத்து வரும் அவரது பணியை யாரும் மறப்பதற்கில்லை’ என்றார்.