வன்னியில் அகதிகள் வருகை அதிகரிப்பு புல்மோட்டையிலும் முகாம் அமைகிறது

Wanni_War_Welfare_Campவன்னியில் இருந்து புல்மோட்டைக்கு வருகின்ற அகதிகள் தொகை தினமும் அதிகரித்து வருவதால் புல்மோட்டையில் இடைத்தங்கல் முகாம் ஒன்றை அவசர அவசரமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புல்மோட்டை அநுராதபுரம் வீதியில் 13 ஆவது மைல் கல்லில் உள்ள 100 ஏக்கர் காணியில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட அர சாங்க அதிபர் ரஞ்சித் டீ சில்வா மற்றும் திருகோணமலை கடற்படை கட்டளைத்தளபதி ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை இங்கு விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டனர்.

5000 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் இந்த இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இந்த வேலைகள் குச்சவெளி பிரதேச செயலர், கிண்ணியா பிரதேச செயலர், பதவிசிறிபுர பிரதேச செயலர் மற்றும் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில தினங்களில் இந்தவேலைகள் முடிவுறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *