அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்த வட்டியுடன் இலகு கடன் முறையில் வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கிணங்க தற்போது, 1,500 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் கொழும்பிலும் கண்டியிலும் புதிய வீட்டுத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வீடொன்றைப் பெற்றுக்கொள்ள விருபும் அரச ஊழியர்கள் அரச சேவையில் நிரந்தர நியமனத்தைக் கொண்டவராகவும் ஐந்து வருடத்தை நிறைவுசெய்தவராகவும் இருத்தல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் சகல வசதிகளையும் கொண்ட வீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பொதுநிர்வாக அமைச்சுக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதுடன் இதற்கிணங்க காலியில் 1,500, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கொழும்பில் கெப்பொட்டிபொல மாவத்தையிலும் கண்டி குண்டசாயிலும் இத்தகைய வீட்டுத் திட்டங்களுக்கான நிர்மானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் அமுனுகம அரசாங்கம் நகரங்களைப் போன்றே கிராமியப்புறங்களையும் அபிவிருத்தி செய்வதில் முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.