அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வருணை எதிர்த்த அனைவரின் டெபாசிட் காலி

varun.jpgஉ.பி.  மாநிலம் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி போட்டியிட்ட பிலிபித் தொகுதியில் வருண் காந்தியைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் காந்தி இத்தேர்தலில் 4,19,539 வாக்குகள் பெற்று, 2,81,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 3வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4வது இடமும் கிடைத்தது. வருண் காந்தியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு வேண்டுகோள்

wdj-senavi.jpgநீர் மின்உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதல் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 6.30 முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப் பகுதியில் நாட்டின் நாளாந்த மின் பாவனை 28 மில்லியன் அலகுகளாகும். இந்த அளவை 22 மில்லியனாக குறைத்துக்கொள்ள முடியுமாயின் தற்போதைய மின்உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் சீரான மழை வீழ்ச்சி கிட்டும் வரை மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மிகவும் அவதானத்துடன் செயல்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பாஜக

arun_jetly.jpg
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் ஏற்பதாக பாஜக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
 
”சில இடங்களில் எங்களுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான இடங்களையே பெற்றுள்ளோம். எனினும், இதனால் எங்கள் கட்சியின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.

எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் அருண் ஜேட்லி.

விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்

mahinda.jpg26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியிருக்கிறார்.

ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சோனியாகாந்தி அமோக வெற்றி

06-sonia.jpgஉத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 – 3/4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 4 லட்சத்து 81 ஆயிரத்து 490 ஓட்டுகள் கிடைத்தன.  இது, இந்த தொகுதியில் சோனியாகாந்தி பெற்ற 3-வது வெற்றியாகும்.

சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குஷ்வாகா 2 லட்சத்து 9 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்றார். மேலும் களத்தில் இருந்த 15 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.  ரேபரேலி தொகுதி,  மறைந்த இந்திராகாந்தி, பெரோஸ் காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சுனாமி போல பாய்ந்து வந்த பணத்தால் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம்-வைகோ

vaiko00001.jpgதமிழகத்திலும், புததுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்திலும், புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடமாகும்.

விருதுநகர் தொகுதியில், எனது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கூட்டணியின் நலன் காக்கவும், ஈழத் தமிழர் துயர் துடைக்கவும், இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்டவும், முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

da-de.gifஇலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த கோரியும், அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்க கோரியும் ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரமைச்சரவை அங்கீகாரத்திற்கான பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது போல் வடக்கிலும் விரைவாக மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி தலைவர் விதாரண அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் தெரிவித்திருந்த ஆலோசனைக்கு இணங்க மாகாண சபைகளுக்கான உரிமைகள் நிறைவானதாகவும் உயரிய பயன்பாடுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில் சர்வகட்சி தலைவர் திசவிதாரண அவர்கள் மேற்குறித்த தீர்வுத்தட்டத்தை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்றும் புலித்தலைமையின் நடவடிக்கைகள் இல்லாதெழிக்கப்பட்ட போதிலும் புலித்தலைமைக்கு சார்பான தமிழ் அரசியல் கட்சிகள் அழிவுப்பாதையிலேயே தொடர்ந்தும் மக்களை இழுத்து செல்வதாகவும் தெரிவித்திருந்ததோடு அரசு இத்தருணத்தில் தீர்க்கமான அரசியல் தீர்வினை விருப்பத்துடன் முன்வைக்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

06-sonia.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.

இதனால் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘’காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.  சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள்.   மன்மோகன்சிங்தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர்.

இதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக தெரிவித்தார்

ராகுல்காந்தியும் அமைச்சரவையில் இடம்பெறுவார்: மன்மோகன்சிங்

karunanithi-apalo-hos1.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி. இதனால் இன்று  பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   ‘’சோனியா, ராகுல் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் வெற்றீயை தந்திருக்கிறார்கள். அமைச்சரவையில் ராகுல்காந்தியும் இடம்பெறூவார்.   மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி

india-elc.jpgசிதம்பரம் தனி தொகுதியில் பாமகவின் பேராசிரியர் பொன்னுச்சாமியை வீழ்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில், திருமாவுக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் ஆரம்பத்தில் பொன்னுச்சாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் திருமா முன்னணிக்கு வந்தார். கடும் இழுபறியின் இறுதியில் திருமாவளவன், 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

திருமாவளவன் பெற்ற வாக்குகள் – 4,28,516.
பொன்னுச்சாமி பெற்ற வாக்குகள் – 3,29,102.

ஏற்கனவே இத்தொகுதியில் இருமுறை போட்டியிட்டுள்ள திருமாவளவன் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.