சிதம்பரம் தனி தொகுதியில் பாமகவின் பேராசிரியர் பொன்னுச்சாமியை வீழ்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில், திருமாவுக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் ஆரம்பத்தில் பொன்னுச்சாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் திருமா முன்னணிக்கு வந்தார். கடும் இழுபறியின் இறுதியில் திருமாவளவன், 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
திருமாவளவன் பெற்ற வாக்குகள் – 4,28,516.
பொன்னுச்சாமி பெற்ற வாக்குகள் – 3,29,102.
ஏற்கனவே இத்தொகுதியில் இருமுறை போட்டியிட்டுள்ள திருமாவளவன் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.