உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 – 3/4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 4 லட்சத்து 81 ஆயிரத்து 490 ஓட்டுகள் கிடைத்தன. இது, இந்த தொகுதியில் சோனியாகாந்தி பெற்ற 3-வது வெற்றியாகும்.
சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குஷ்வாகா 2 லட்சத்து 9 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்றார். மேலும் களத்தில் இருந்த 15 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ரேபரேலி தொகுதி, மறைந்த இந்திராகாந்தி, பெரோஸ் காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.