அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கைப் பெண் பாகிஸ்தானில் மரணம்

பாகிஸ் தான், கராய்ச்சி நகரிலுள்ள இலங்கை தூதரக கொன்சியூலர் அலுவலகத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்னஸ் (48) என்ற பெண்ணே மரணமடைந்தவாராவார்.

அவர் தனது விடுதியில் தங்கியிருந்த போது மரணமடைந்துள்ளார். இயற்கை மரணமென பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும் அவரது கணவன் தேடப்படுகிறார். பங்களாதேஷ் பிரஜையான இவரது கணவர் சிராஜூள் ஹக் தலைமறைவாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

அஸ்ஸாமில் சுகோய் படையை நிறுத்தியது இந்திய விமானப்படை

iair-force.jpgசீனாவின் ஆக்கிரமிப்பு மேகம் வட கிழக்குப் பகுதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் சுகோய் போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.

சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.

ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது இந்திய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறபப்டும் பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றபடப்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையமொன்றில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரொருவரிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே விசேட பொலிஸ் குழுவினரால் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறபப்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள தோணிதாண்டமடுவில் மறைவிடமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கிகள் – 210 ,ரீபீட்டர் ரக துப்பாக்கி – 01 , 303 வகை துப்பாக்கி – 01 உட்பட ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் நேற்று பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லடி என்னுமிடத்திலும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ரி – 56 துப்பாக்கி – 51 ,அதற்கான மகசீன்கள் – 900,ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள் – 02,ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் – 03 உட்பட யுத்த உபகரணங்கள் ஒரு தொகுதி இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மொரவெவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வான்வில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி சந்தேக நபரொருவர் நேற்று முன் தினம் மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி – 56 ரக துப்பாக்கி சகிதம் குறிப்பிட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் சிவகுமார்

sevakumar.jpgதமிழ கத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார்.  இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டு படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அதுபோல தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது. இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

‘225 எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ சபையில் அமைச்சர் டிலான்

parliament-of-sri-lanka.jpgஒருவருக் கொருவர் சேறுபூசும் அரசியல் கலாசாரத்தைக் கைவிட்டு தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வை சகல கட்சிகளும் இணைந்து பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டியது முக்கியமெனவும் அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அமரர் சிவனேசனின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். அதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். குறுகிய அரசியலைக் கைவிட்டு நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சர்வகட்சிக் குழுவின் பக்கம் விரல் நீட்டாமல் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை எதிர்த்த ஜே.வி.பி. மலையகத் தோட்டத்துறை மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியது. இத் தருணத்தில் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அக்கட்சி செயற்படுதல் அவசியம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் படுகொலை செய்யப்படமாட்டார்கள். இப்போது பயங்கரவாதம் உருவாக மூலகாரணமான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டியது முக்கியம்.

இத்தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது குறுகிய அரசியல் சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும். ரவிராஜ், கதிர்காமர், ஜெயராஜ் உட்பட பல அரசியல்வாதிகள் படுகொலைகளுக்கு இச்சபையில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெற்றன.

புலிகள் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதையடுத்து இத்தகைய படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த சிவனேசன் எம்.பிக்கான அனுதாபப் பிரேரணை இடம்பெறுகிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதிகளால் பல்வேறு துயரங்களை கடந்த 30 வருடங்களாக அனுப வித்துள்ளனர். இன்று அந்த மக்கள் நலன்புரி முகாம்களில் வாழும் நிலையில் அவர்களைத் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதே சிவனேசன் எம்.பிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

விடத்தல் தீவு பகுதியில் புதிய பொலிஸ் நிலையம்

sri-lankan-road.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்ட பகுதியான மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் பொலிஸாரினால் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திரந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரம ரட்ன அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் வருகை தந்திருந்தார்.

இதன் போது விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் புதிதாக திரக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு அங்குள்ள குறை நிரைகளையும் கேட்டரிந்தார். இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜெயமகால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் நி.டி.எஸ்.ஆர் அசன் , மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திரக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர்மடத்தில் இரத்ததான நிகழ்வு

கொழும்பு – 13, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் ஆரம்பிக்கப்பட்டு 140 வருடங்களாகின்றன.

இதன் 140வது வருடவிழாவையொட்டி நல்லாயன் கன்னியர் மடம் எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இக்கன்னியர் மடத்தில் இரத்ததான முகாமொன்றை நடத்தவுள்ளது.

18 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்ட 50 கிலோ கிறாம் எடை கொண்ட எவரும் இங்கு இரத்ததானம் செய்யலாம். இரத்த தானம் செய்ய வருபவர்கள் தேசிய அடையாள அட்டை கொண்டு வருமாறு கேட்கப் பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கூடுதல் அமெரிக்கப் படையினர் தேவை: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

gatesgettyfora.jpgஆப்கா னிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான தமது நடவடிக்கையில், மேலும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அங்கு அனுப்புவது அமெரிக்காவுக்கு சாதகமான ஒரு நிலைய ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் 2001 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு அவர்களால் நடத்தப்படும் தாக்குதல்கல் மிக அதிக அளவுக்கு தற்போதுதான் உயர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் பொதுமக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அதை குறைப்பதற்குமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிரஸ்லஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்படும் ஒவ்வொரு ஆப்கானியரின் உயிரிழப்பும் அங்குள்ள சர்வதேசப் படைகளுக்கு ஏற்படும் ஒரு தோல்வியே என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர ஊடப் பிரச்சாரத்தினை சமாளித்து பதிலடி கொடுக்கும் முகமாக அங்கு தமது தரப்பிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதாலன பணமும் மனித சக்தியும் செலவழிக்கப்படும் என்று ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரீ.எம்.வி.பி உறுப்பினர்கள் இருவர் சு.கவில் இணைவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநகர அரசியல் துறைப் பொறுப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான வெலிங்டன் ராஜேந்திர பிரசாத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநகர உறுப்பினர் நமசிவாயம் கருணானந்தம் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

தாம் இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சுய விருப்பத்தின் பேரில் விலகிக் கொள்வதாக கட்சியின் செயலாளர் ஏ. கைலேஸ்வரராஜா ஊடாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி மட்டக்களப்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.

மீட்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: புதிய புள்ளிவிபரங்கள்

fordindia.jpgபொரு ளாதார வீழ்ச்சியிலும் இந்திய உற்பத்தி துறை சிறிய வளர்ச்சி கண்டுள்ளது இந்தியப் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான பாதையில் செல்வதான எதிர்பார்ப்பை, இந்தியத் தொழில்துறை உற்பத்தி பற்றிய புதிய தரவுகள் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 4 மாதங்களில், முதலில் வந்த மூன்று மாதங்களில், தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்க, ஏப்ரலுக்கான உற்பத்தி கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 1. 4 வீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி தொடர்ந்தும் பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த உற்பத்தி அதிகரிப்புகளுக்கு உள்நாட்டுத் தேவைகளே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வளரும் பொருளாதாரங்கள், மீட்சியடைய ஆரம்பித்துவிட்டன என்பது தொடர்பில் சீனாவில் இருந்து கிடைத்த சமிக்ஞைகளுக்கு மேலதிகமாக தற்போது இந்த தகவல்களும் வந்துள்ளன.