கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறபப்டும் பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றபடப்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையமொன்றில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரொருவரிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே விசேட பொலிஸ் குழுவினரால் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறபப்டுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள தோணிதாண்டமடுவில் மறைவிடமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கிகள் – 210 ,ரீபீட்டர் ரக துப்பாக்கி – 01 , 303 வகை துப்பாக்கி – 01 உட்பட ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் நேற்று பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்று திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லடி என்னுமிடத்திலும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ரி – 56 துப்பாக்கி – 51 ,அதற்கான மகசீன்கள் – 900,ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள் – 02,ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் – 03 உட்பட யுத்த உபகரணங்கள் ஒரு தொகுதி இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மொரவெவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வான்வில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி சந்தேக நபரொருவர் நேற்று முன் தினம் மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி – 56 ரக துப்பாக்கி சகிதம் குறிப்பிட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.