கொழும்பு – 13, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் ஆரம்பிக்கப்பட்டு 140 வருடங்களாகின்றன.
இதன் 140வது வருடவிழாவையொட்டி நல்லாயன் கன்னியர் மடம் எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இக்கன்னியர் மடத்தில் இரத்ததான முகாமொன்றை நடத்தவுள்ளது.
18 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்ட 50 கிலோ கிறாம் எடை கொண்ட எவரும் இங்கு இரத்ததானம் செய்யலாம். இரத்த தானம் செய்ய வருபவர்கள் தேசிய அடையாள அட்டை கொண்டு வருமாறு கேட்கப் பட்டுள்ளது.