ரீ.எம்.வி.பி உறுப்பினர்கள் இருவர் சு.கவில் இணைவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநகர அரசியல் துறைப் பொறுப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான வெலிங்டன் ராஜேந்திர பிரசாத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநகர உறுப்பினர் நமசிவாயம் கருணானந்தம் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

தாம் இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சுய விருப்பத்தின் பேரில் விலகிக் கொள்வதாக கட்சியின் செயலாளர் ஏ. கைலேஸ்வரராஜா ஊடாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி மட்டக்களப்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *